சாக்கடைக் குழிக்குள் சாவு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாப்பூரில் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் ஜனார்த் (மாநகராட்சி ஊழியர்). இவர் 27.8.2013 அன்று காலை 10.30 மணியளவில் மயிலாப்பூரில் சாய்பாபா கோவில் அருகே உள்ள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பு எடுக்கும்போது விஷவாயு தாக்கி உயிர் இழந்தார். “மனிதனை மரணக் குழிக்குள் தள்ளும் இந்த இழி தொழிலை நிறுத்த வேண்டும்; எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று மாநகராட்சியை வலியுறுத்தி 28.8.2013 அன்று காலை 10.30 மணிக்கு நாகேசுவரராவ் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பா.ஜான் (மாவட்டகழகத் தலைவர்) தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மயிலைப் பகுதி செயலாளர் மாரிமுத்து, அமைப்பாளர் மனோகரன், திருவல்லிக்கேணி செயலாளர் அருண்குமார், அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து, அருகிலுள்ள சமூகநலக் கூடத்தில் வைத்தது. பின்னர் மாலை 4 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 05092013 இதழ்

You may also like...