தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி !

தஞ்சை ஜில்லா போர்டைப் பற்றி பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் விஷமப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள் என்பது பார்ப்பனப் பத்திரிகை களைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது.

ஆனால், அதன் காரணம் என்ன என்பதை வெகு பேர்கள் அறியா மல், விஷமப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போவார்கள் என்றே நினைக் கிறோம். தஞ்சை ஜில்லா போர்டுக்கு இப்பொழுது பிரசிடெண்டாய் இருக்கும் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு முன் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் அதாவது ஸ்ரீமான் வி.கே. ராமாநுஜாச்சாரியார் என்பவர் பிரசிடெண்டாய் இருந்த காலத் தில் தஞ்சை ஜில்லா தாலூகா போர்டுகள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாகவும், பார்ப்பனர்கள் அக்கிரஹாரமாகவும், பார்ப்பனர்கள் சாப்பிடும் அன்ன சத்திர மாகவும் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்தக் காலத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தது வானம் கூட ஓட்டையாய்ப் போயிருக்கும். ஸ்ரீமான் பன்னீர் செல்வம் வந்த பிறகு பார்ப்பன தனி ஆதிக் கத்தை ஒழித்து எல்லோருக்கும் பங்கு இருக்கும்படி செய்து பார்ப்பனரல்லா தாருக்கும் சௌகரியமுண்டாகும்படி செய்திருக்கிறார். உதாரணமாக ஒரத்தநாடு சத்திரத்திலுள்ள ஒரு தர்மப் பள்ளிக்கூடமானது (அதாவது சாப் பாடு போட்டு சம்பளமில்லாமல் சொல்லிக்கொடுக்கும் உயர்தரப் பள்ளிக் கூடம்) வெறும் பார்ப்பனப் பிள்ளைகளும் பார்ப்பன உபாத்தியாருமே அடைந்து இருக்கும்படி இருந்தது. இப்பொழுது எல்லா வகுப்புப் பிள்ளை களும் சாப்பிடும் படியாகவும், உபாத்தியாயர்களாகும்படியாகவும் செய்யப் பட்டிருக்கிறது.

திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத காலேஜ் என்பது சாப்பாடும் போட்டு சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. இது முழுதும் அய்யங்கார் அக்கிரஹாரமாகவும் அய்யங்கார் பிள்ளைகள் சாப்பிடும் தர்ம சத்திரமாகவும் இருந்து வந்தது. இப்போது கொஞ்சம் பாகம் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சாப்பிடவும், அய்யங்கார் அல்லாத பார்ப்பன உபாத்தியாயர்கள் பிழைக்கவுமாய் இருக்கிறது. மற்றும் பல பெண் பள்ளிக்கூடங்களும், பல
சத்திரங்களும், பல உத்தியோகங்களும், பார்ப்பனரல்லாதாரும் பிழைக்கும் படி செய்யப்பட்டிருப்பதால் பார்ப்பனர்கள் ஒரே கூச்சல் போடுகிறார்கள். இதற்கேற்றார் போல், ராவணனைக் கொன்று விபீஷணனுக்கு பட்டம் தருவ தாய் ராமன் வாக்களித்து ஆட்களைச் சேர்த்துக் கொண்டது போல் இங்கும் சில விபீஷணர்களுக்கு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் பட்டம் கட்டுவதாய் பார்ப்பனர்கள் வாக்குறுதி கொடுத்து அவர்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களது உதவியால் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தை ஒழித்து அய்யங்கார் ஆதிக்கத்தில் இருந்ததுபோல் தஞ்சை ஜில்லா போர்டையும் தாலூகா போர்டு களையும் பார்ப்பன அக்கிரஹாரமும் அன்ன சத்திரமும் ஆக்கப் பார்க்கி றார்கள். மந்திரியும் இவர்களால் ஏமாற்றப்பட்டுப்போவார் போலவே காண்கி றது. இதற்கேற்ற விபீஷணர்கள் பலரும் பட்டத்திற்கு எதிர்பார்த்து தலையை நீட்டிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. பாமர ஜனங்கள் பைத்தியக்கார ராயிருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்திற்கு யோகம்தான் .

குடி அரசு – கட்டுரை – 09.01.1927

You may also like...

Leave a Reply