கூட்டுறவு வாழ்க்கை

 

நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். சுமார் 25 வருஷத்திற்குமுன் நம்முடைய சென்னை மாகாண கூட்டுறவு ரிஜிஸ்திராராயிருந்த தோழர் ராமச்சந்திராவும், இங்கு டிப்டிக் கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி பிள்ளை அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் பாங்கு ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்கள். எங்கள் வீட்டில்தான் முதல் கூட்டம் கூட்டப்பட்டது. பங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான் தான் அதில் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக்காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைடிகளிலிருந்து சிறிது விலகி அலòய அபிப்பிராயமுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் கòயையும், ஸ்தாபனங்களையும் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்வதும் அவற்றின் உத்தேசங்களுக்கு விரோதமாக பணக்காரர்கள் அதில் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் ஒரு சமயம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று குறிப்பிட்டார். அது மிகமிக உண்மையே தான். ஏனெனில் நம் நாட்டில் நிலைபெற்றுள்ள பல்வேறு விஷயங்களையும் சமுதாய முறைகளையும் அடியோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு நன்மையைக் கொண்டு வந்து விடுவது என்பது சுலபத்தில் முடியாத காரியமாகும்.

ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப் பற்றி நான் பேசுவேன் என்று உங்களுக்குத் தலைவர் எடுத்துச் சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கியபாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒரு காலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு சுற்றுப்பிரயாண அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளை நேரில் கவனித்துப்பார்க்க நேர்ந்த பின், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது ஆசை சாத்தியமாகக் கூடியது தான் என்ற எண்ணம் மிக்கப் பலமாக உறுதிப்பட்டது.

என்னைப் பொருத்தவரையில் என்னைப்பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்த போதிலும் எனது முடிவான லôயம், அதாவது எனது எண்ணம், ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகக்தானிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம்முடைய நாட்டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று – சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வது என்று ஏங்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக – சாந்தியாக – திருப்தியுடன் – குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.

நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏற்பட்டால் அதைப்பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்களென்றால் அதில் தங்களுக்கு எவ்வளவுதூரம் லாபமிருக்கிறதென்றும் அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாமென்றும் தான் கருதிக்கொண்டு அதில் சம்மந்தம் வைத்துக் கொள்ளுகிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கு ஜனசமூக மேம்பாட்டிற்குப் பாடுபட வேண்டுமென்பதைப்பற்றிய பொறுப்பையும், கவலையையும் அறவே விட்டு விடுகின்றார்கள்.

அதுபோலவே நம்முடைய (கூட்டுறவு கோவாப்ரேடிவ்) ஸ்தாபனங்களிலும் இருந்து வருகிறது. அந்த ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்குள்ளாகக்கூட கூட்டுறவு உணர்ச்சி கிடையாதென்றே உறுதியாகச் சொல்லலாம். ஆகவே ஏதோ சிலர் தங்களுடைய நன்மைக்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும், கெளரவத்திற்காகவும் ஏதோ சிறிது சம்பந்தம் வைத்திருப்பதினால் மாத்திரம் என்ன பலன் ஏற்பட்டு விடும்?

சாதாரணமாக இந்த ஊர் கூட்டுறவு ஸ்தாபனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் 2000, 3000 பேர்கள் வரை பங்குதார மெம்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த ஸ்தாபனத்தினால் உருப்படியாகப் பொதுமக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கிறது? ஏதோ ஒரு சில சொற்பப் பேர்கள், தங்கள் சொந்தத்திற்கு எப்படிக் கடன் பெறலாமென்று பெருத்த பிரயாசை எடுத்துக் கொள்பவர்களே சில அனுகூலங்கள் அடைகிறார்கள். மற்றபடி இவர்களுக்கு þ ஸ்தாபனத்தைப் பற்றிய கவலையே இல்லை. இன்றைய உலக எல்லா வாழ்க்கையும் இப்படித் தான் இருக்கிறது. வெறும் குற்றத்தையே பேசுவதால் பயனில்லையானாலும் இவைகள் தக்க படிப்பினையாக இருக்க உதவ வேண்டுமென்று கருதியே பேசுகிறேன். கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவுவது என்கிற விஷயங்களே நமது வாழ்க்கையின் முக்கிய லòயமாய் இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே கூடாது.

சாதாரணமாக நாம் நம்மிடையே ஒருவரை புதிதாகக் கண்டால் அதாவது சந்தித்தால் அவருடைய ஸ்திதி என்னவென்றும், உத்தியோகம் என்னவென்றும் வினவ ஆசைப்படுகிறோம். அவர் ஒரு பெரிய உத்தியோகஸ்தராகவோ, பணக்காரராகவோ இருந்தால் அதற்காக ஒரு தனி மதிப்பும், ஒரு குமாஸ்தாவாகவோ, கூலியாகவோ இருந்தால் அதற்காக ஒரு தனி மதிப்பும் தான் கொடுக்கின்றோம். இது தான் நம்முடைய நாட்டில் ஒரு மனிதனை மதிப்பதைப்பற்றிய முறையாகும். ஆனால் ரஷியாவிலோ இங்குள்ள இதுபோன்ற கேள்விகளை அங்கு யாரும் கேட்பதில்லை. அங்கு ஒருவருடைய உத்தியோக அந்தஸ்தைப் பற்றியோ, செல்வத்தைப்பற்றியோ சிறிதும் யோசிப்பதே இல்லை; விசாரிப்பதுமில்லை. அவற்றில் ஒருவருக்கொருவர் வித்தியாசமும் இருக்காது. ஆதலால் அங்கு அக்கேள்விக்கு இடமே இல்லை. மற்றப்படி என்ன கேட்பார்கள் என்றால் ஒருவனைக் கண்டதும் அவன் (குணிஞிடிச்டூ குஞுணூதிடிஞிஞு) சமுதாய சேவை என்ன செய்திருக்கிறான் – செய்கிறான் என்று மட்டுமே தான் பிரதானமாகக் கவனிப்பார்கள். அதைத்தான் கேட்பார்கள். ஒருவர் பிறருக்கு என்ன நன்மை புரிய ஏற்றுக்கொள்ளுகிறார் என்பது தான் மனிதனை அறிய முக்கிய தத்துவமாகும். அதுதான் அங்கு அவனுடைய பெருமையைக் காட்டுவதாகும். அங்கு உத்தியோகத்தைப்பற்றிய பேச்சோ, வருமானமோ, மேல் கீழ் வரும்படி என்பது போன்ற பேச்சோ, எங்கும் எவ்வித ரூபத்திலும் கிடையாது. அங்கு எங்கும் யாவரும் சமுதாய வேலை செய்வோரேயாவார்.

நான் ரஷியாவில் இருந்த காலத்தில் ஒரு நியாய ஸ்தலத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒரு குற்றவாளியை விசாரிக்கக் கண்டேன். அவன் ஒரு விசேஷ நாளில் குடித்து வெறியனாகி கலகம் செய்தான் என்பதாகக் குற்றவாளியாக்கப்பட்டவன். இவனை அந்த விசாரணை ஸ்தலத்தில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால் உன்னுடைய குணிஞிடிச்டூ குஞுணூதிடிஞிஞு ஙிணிணூடு (சமுதாய ஊழிய வேலை) என்ன என்பதேயாகும். அவன் அதற்கு எனக்கு குணிஞிடிச்டூ குஞுணூதிடிஞிஞு (சமுதாய வேலை) இல்லை என்றான். இதைக் கேட்டதும் நீதிபதியும், ஜüரியான ஒரு பெண்ணும் “உனக்கு சமுதாய வேலையில்லாமல் போய்விட்டது என்கிறாயே வெட்கமில்லையா? உன்னை உலகுக்கு உபயோகப்படுத்திக்கொள்ள வகையற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லுவது அவமானகரமானதாகத் தோன்றவில்லையா?” என்று கடிந்தார். அதற்கு அவன் எல்லா ஸோஸியல் சர்விசையும் சிறு பிள்ளைகளாகிய கம்சமால் கூட்டத்தார் எடுத்துக் கொள்ளுகிறார்கள், நான் என்ன செய்வது” என்றான். அந்தம்மாள் வெட்கம் வெட்கம் என்றாள். இவைகளைக் கேட்ட பிறகு தான் சோஷியல் சர்வீஸ் குணிஞிடிச்டூ குஞுணூதிடிஞிஞு என்பதைப் பற்றி அதிகம் அறிய ஆசைகொண்டேன். அதன் பயனாய் ரஷியர்கள் சமூக ஊழியம் செய்வது தான் தங்கள் வாழ்க்கையின் மேலான லòயம் என்பதை முதலாகவும், அடுத்தபடி கூட்டுறவு வாழ்க்கையே மேலான வாழ்க்கை என்பதாகவும் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

ரஷ்யர்களுடைய வாழ்க்கையானது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் குணிஞிடிச்டூ குஞுணூதிடிஞிஞு சும் கூட்டுறவு வாழ்க்கையை நடத்த முனைந்து நிற்பதுமேயாகும். அவர்கள் வாழ்க்கையில் மேற்போட்டுக்கொள்ளும் இந்த வேலையானது மனித சமூகத்துக்கு கவலை, துன்பம், மனச்சோர்வு என்பவைகளே இல்லாமல் செய்து விடுகிறது. அங்குள்ள சர்வ ஜனங்களுடைய எண்ணமெல்லாம் பிறருக்கு நாம் எவ்வளவு தூரம் நன்மை செய்யலாம் என்பதேயாகும். இந்த நோக்கமில்லாத மனிதனை மனிதனல்ல என்று வன்மையாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் உத்தியோகத்தின் பேராலும் மற்ற பதவிகளின் பேராலும் மாதம் 1-க்கு 1000, 2000, 5000, 10000 ரூபாய்கள் கொள்ளை கொள்வது போன்ற கொடுமைகள் ரஷ்யாவில் கிடையாது. அங்குள்ளவர்களுக்கு தனக்கு வேண்டிய அளவுக்கு மேல் வரும்படி – லஞ்சம் – லாவணம் என்பன போன்றவைகளே அடியோடு கிடையாது. அங்கு தனிப்பட்டவர்களுக்குள் ரூபாய் 10, 5 கூட கடன் கொடுக்கும் முறையோ, கடன்படும் முறையோ கிடையாது. அது குற்றமான முறையே யாகும். எல்லாம் கூட்டுறவின் மூலம்தான் நடைபெற வேண்டும்.

ஆனால் அந்த முறைகள் எல்லாம் நம்முடைய நாட்டின் இன்றைய நிலைமைக்கு சாத்தியமில்லை என்று சொன்னாலும் நம்நாட்டு நிலைமைகளை யெல்லாம் அடியோடு மாற்றி அமைத்துத்தான் ஆக வேண்டும். இக்கருத்தைத் தான் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இது சிறிது சிறிதாய் கோவாப்பரேடிவ் ஸ்தாபனங்களின் மூலமே ஒழுங்காகச் செய்யலாம்.

நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச்செருக்கு கொண்டவர்களையும், கள்நெஞ்சம் படைத்த கனத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாக வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களையும், பிச்சைக்காரர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இதுபோன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! சுயநல ஆதிக்கக்காரனுக்கும் – ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர்களும் – தொல்லையும் தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.

இன்று காலை முதல் மாலை வரையினும் என்னிடம் 5, 6 பேர்கள் வரை வந்து “வேலை கொடு – வேலை கொடு” என்று வருந்தினார்கள். ஒவ்வொருவருக்கும் மந்திரிகள் கலைக்டர்கள் தாசில்தார்கள் ஆகியவர்களுக்கு சிபார்சு கடிதம் எழுதித் தரவேண்டுமாம். ஒருவர் தனது “குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கிறது, சம்சாரத்திற்கும் பிரசவ நோவு. நான் என்ன செய்வேன்? 4 மாதமாக வேலையில்லையே காப்பாற்றுவாறில்லையே!” என்று கதறினான். நான் அவருக்கு 2 படி புழுங்கள் அரிசி கொடுக்கும்படி வீட்டிற்கு சீட்டுக்கொடுத்தேன். இதுபோன்ற கொடுமைகளின் தன்மையை இன்று என்னுடன் தங்கியிருந்த நண்பரும் நன்கறிவர். எங்கும் வேலை இல்லை என்ற கூக்குரல் அதிகரித்து விட்டது. ஏன் வேலை இல்லாமல் போய்விட்டது? வேலை இல்லாமை எப்படி ஏற்படும்? என்று யோசித்துப்பார்த்தீர்களா? ஒரு வேலைக்காரன் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கின்றான். ஒரு தையல்காரன் 3 – மிஷின்களை வைத்துக்கொண்டு இரவெல்லாம் வேலை செய்து ஒரு நாளைக்கு 5-ரூ, 10- ரூ சம்பாதிக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தப்படி ஒருவன் அதிக நேரம் வேலைசெய்து அதிகப் பணம் ஒருவனே சம்பாதிப்பது எதற்கு? இவைகளையெல்லாம் கணக்குப் போட்டு ஒரு ஒழுங்கு முறைப்படுத்தி வேலைகளையெல்லாம் ஒரு கூட்டுறவு முறையில் அமைத்தால் அவரவர்களுக்குப் போதுமான அளவுக்குக் குறையாமல் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக போதிய பலன் கிடைக்கும்.

நம்முடைய நாட்டில் அடிப்படையான மாறுதல் செய்யாவிட்டால் கூடிய சீக்கிரத்தில் நாம் என்ன கதிக்கு ஆளாக வேண்டிவரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நாம் செலவழிப்பதிலும் வகை தகையற்ற முறையில் வீண் செலவு செய்து வருகின்றோம். நமது வாழ்க்கையைக் கூட்டுறவு முறையில் நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் 8 – பேருக்கு உதவும்.

உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்குமேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார்கள். 4 – 5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை கண்டிப்பாகச் சமையலுக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப சமையலுக்காக என்று ஒரு தனி அறையும், பாக்கி வசதிகளுக்கென்று ஏராளமான அறைகளும் இடமும் ஒதுக்கிவைத்துக்கொண்டு எவ்வளவு அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்குக்கூட உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ரஷியாவிலுள்ள மேற்சொன்ன பொது சமையல் சாலையில் (எஞுணஞுணூச்டூ ஓடிtஞிடஞுண) 970 பேர்கள் தான் சமையல் வேலையிலீடு பட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக் கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டிலோ 4 பேர்களுக்கு ஒரு பெண் வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற கணக்குப்படி 40000 பேர்களுக்கும் எத்தனை பெண்களை ஒதுக்கித் தள்ளிக் கொடுமைகளாக்கி வருகிறோம் என்பதை யோசித்துப் பார்க்கும்படி கோருகிறேன். நம்முடைய சமயலைப்பற்றி ஏதாவது பந்தோபஸ்து உண்டா? சமயலறையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்த பிறகும் அங்கு தினம் டாக்டர் சரியானபடி பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி. டாக்டர் பரீøைக்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமையலுக்கும் உண்டு. இங்கு நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப்போட்டு வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும் நோய் அடைகின்றோம். மேல்நாட்டு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டக்குறைவு, அனுகூலம், பணம் மிச்சம், சுகாதாரம், செளக்கியம் ஆகியவைகள் கவனிக்கப்படுகிற தென்பதை யோசியுங்கள். அங்கு ஒரு ரொட்டிக்கிடங்கில் (ஆச்டுஞுணூதூ) நாள் ஒன்றுக்கு 250 டன் ரொட்டிகள் ஒரே சாலையில் செய்யப்படுவதைப் பார்த்தேன். கூட்டுறவு முறையினால் ஒருநாள் ஒன்றுக்கு ஒரு இடத்தில் இருபதினாயிரம் முப்பது ஆயிரம் வீதம் ஷர்ட்டுகள், டிரெளசர்கள், ஜாக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு உள்ள அத்தனை பேரும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். அங்கு வேலையில்லாதவர்களே கிடையாது.

இங்கு நாம் துணி வாங்கிக் கொடுத்தால் காலே அரைக்கால் பாகம் திருட்டுடன் சேதமாகிற தென்றும் சொல்லலாம். அங்கு அப்படியில்லை. துணியை அப்படியே 200, 300 வீதம் மடிப்பு மடித்து முதலிலேயே சின்ன சின்ன வேலைக்கானவைகளுக்கு அதாவது பாக்கெட், கழுத்துப்பட்டை கைப்பட்டை முதலானவைகளுக்கு ரம்பத்தில் அறுப்பது போன்ற மிஷினில் அறுத்து எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே சேதாரம் இல்லாமல் முழுதும் மற்ற பாகங்களுக்கு உபயோகப்படுத்திவிடுகிறார்கள்.

அங்கு ரஷியாவில் 2,000 – 3,000 ஜனங்கள் சந்தோஷமாக – செளக்கியமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிரம்பி வாழ்வதைப் பார்த்தேன். இங்கு நம்முடைய ஒரு வீட்டை 4, 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கென்று எவ்வளவு அனாவசியமாக 3, 4 அடுக்கு மெத்தைகளுடன் கட்டுகிறோம்? அதில் பகுதி பாகம் நாம் உபயோகப்படுத்துவது கூட இல்லை. அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம், சுகாதாரம் இருப்பதில்லை. நம்முடைய வீட்டை நிரப்புவது ஒடிந்து போன மத்து, கெட்டுப்போன நாற்காலி, முறம், கூடை, கிழிந்து போன பாயும், அவிந்து போன தானிய குப்பைகளாலும் தான். இந்த முட்டாள் தனத்திற்காகவா நாம் பெரும் வீடு வைத்துக்கொண்டு இருப்பது என்பதை யோசித்துப்பாருங்கள்.

அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்கலாம். சர்வாதிகாரியான ஸ்டாலினுக்கும், சாதாரணத் தொழிலாளிக்கும் சுமார் 10-க்கும், 16 அடிக்கும் உள்ள ஒரே மாதிரி அளவு அறைதான். அங்கு ஒரே மாதிரி சாதிக்காய் பலகை கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு சிறு 8#6 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது. தோட்டியே கிடையாது. அதைப்பார்த்தால் அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய்விடுவோம். அவ்வளவு சுத்தம். அதில் எவ்வித வாடையும் இருக்காது. அழகு, ஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இங்கு ஒரு வீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கக்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்? அப்படி இருந்தும் என்ன சகிக்க முடியாத நாற்றம், சுகாதாரக்குறைவு? இங்கு 300 பேர்களுக்கு ஒரு தோட்டி வீதம் இருப்பானென்று நம்புகிறேன். இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்? எத்தனை வீடு, தெருக்கூட்டுகிறவர்கள்? எத்தனை வேலைக்காரர்கள்? இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுந்தந்தானே, என்றும் அசெளக்கியமாகத்தானே இருக்கிறது. அங்கு கக்கூசுக்கு பக்கத்திலேயே படுக்கை அறை இருக்கும். அங்குள்ள முறை கஷ்டத்திற்கோ – நாற்றத்திற்கோ இடமில்லை வழியுமில்லை.

ஒவ்வொரு கூட்டுப்பண்ணை யிருக்கும் இடத்திலும், ஒவ்வொரு தொழிற்சாலை இருக்கும் இடத்திலும் ஒரு நல்ல கச்ணூடு நந்தவனம், சினிமா, விளையாட்டு இடம், டிராமா, சுகாதார வசதிச்சாலை எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும், 10000 பேருக்கும் கூட்டுறவு முறைப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டு சம்பளம் ஒரே அளவுதான் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பளம் போக மேல்கொண்ட மீதி லாபத்தை அந்த ஸ்தாபன பொது ஜனங்களுடைய நன்மைக்கே உபயோகப்படுத்தப்படுகிறது.

~subhead

கூட்டுறவு சிக்கனம்

~shend

இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு வண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவன் எப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிறானா? அதற்கு தினம் 10 மணி நேரத்திற்கும் வீணில் தீனி போட்டு 3-மணி நேரத்திற்கும் குறைவாகவே வேலை வாங்குகிறான், 3-மணி நேரம் மாத்திரம் அனுபவிப்பதனால் பாக்கி 7-மணி நேர கூலியும் செலவும் முதலும் வீணாகிறது. இப்படியே தான் ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்டவர்கள் தன்மையால் நஷ்டங்கள் உண்டாகின்றன. அநேகமாய் நம்முடைய நாட்டில் தேசசெழிப்பும் அனுபவப் பொருள்களுற்பத்தியும் ஒன்றுக்கு எட்டாக விளங்குகிறதா இல்லையா? அப்படி இருந்தும் மக்களின் கஷ்டத்திற்குக்காரணம் என்ன? தனித்தனி, அவனவன் சுயநலம் என்னும் உணர்ச்சியே இதற்குக்காரணம். எனவே இந்த உணர்ச்சி ஒழிய வேண்டுமா வேண்டாமா? மனிதனுக்குக் கவலையற்றும், குறைவற்றும் வாழும் வாழ்வுதான் சிறந்தது. அதற்குக் கூட்டுறவு முறையேதான் பெரிதும் தேவையானது.

நிற்க, இந்த ஈரோடு முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது வாழ்க்கை சம்மந்தமான எல்லா விஷயங்களையும் மேல்கண்டபடி கூட்டுறவு முறையில் பூர்த்தி செய்விக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு பிரயோஜனமேற்படும்? எவ்வளவு செலவு மிச்சமாகும்? எவ்வளவு அனுகூலம்? எவ்வளவு லாபம்? எல்லாவற்றிலும் நன்மையேதான் ஏற்படும். அப்படிக்கிருக்க தனிப்பட்டவர்கள் நன்மைக்கு மாத்திரம் என்பதாக ஏன் ஒவ்வொன்றும் இருக்க வேண்டும்?

ஒரு சாப்பாட்டு விடுதியை பொதுவாக பல குடும்பங்களுக்குச் சேர்த்துவைத்து நடத்தினால் இரண்டணாவுக்கும் கீழாகவே நல்ல சாப்பாடு போடலாம். அது சத்துள்ளதாகவும், சுகாதார முறைப்படியும் இருக்கும். நம் வீட்டில் சமையல் என்னும் பேரால் சரிபாக சாமான்கள் வீணாய்ப்போய்கிறது. நம்முடைய நாட்டில் என்ன பொது உணர்ச்சி இருக்கிறது? பொது சமயல்களில் டாக்டர் பரீøைசெய்து எவ்வளவு செளக்கியமாக எத்தனை காரியங்களைச் செய்யலாம். இது போலவே வியாபாரத்திலும் கடையில் பேரம் செய்யும்போது கிராமக்குடியானவனிடம் 9-சாக்குப்போட்டு விட்டு 10 சாக்கு என்று பித்தலாட்டம் செய்வது எனக்குத் தெரியும். குடியானவரிடமிருந்து ஒன்றுக்கு ஒன்றரையாய் எடுத்துக் கொள்வதும் எனக்குத் தெரியும். இதை நானும் செய்திருக்கிறேன். நம்மிடம் நிறைந்திருப்பது பொய். சாக்கோ கலப்படம் உபயோகிப்பதோ முக்கால் அளவுள்ள நிறைதான். இவைகளினாலெல்லாம் தனிப்பட்டவர்க்கு எவ்வளவு நஷ்டம்? இவையெல்லாம் கூட்டுறவு முறையில் லòயம் கொண்ட ஜனத்தலைவர்கள் என்பவர்கள் ஏன் இணிணtணூணிடூ செய்து அடக்கி தடுக்கக்கூடாது? ஒவ்வொரு தனிப்பட்டவனையும் “ஒன்றுபடுத்தி நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தைச் செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம்” என்று ஏன் கூட்டுறவு தன்மை பிரயோகிக்கக்கூடாது?

மனித சமூக நல்வாழ்க்கைக்கு இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கித் தான் ஆக வேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டு மென்பதில்லை. பொதுவுடமை பேச்சே வேண்டியதில்லை. ஆனால் கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றினால் போதும். வட்டிவிஷயத்திலும் இங்கு பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது. ஆனால் குடியானவன் விவசாய செலவுக்கு பணம் வேண்டுமானால் தனிப்பட்ட முதலாளியிடம் மாதம் 1-க்கு ரூ.10-க்கு கால் ரூபாய் வட்டி வீதம் கடன் வாங்குவதென்றால் என்ன கொடுமை? ரஷ்யாவில் தனிப்பட்ட மனிதர் எவரும் லேவாதேவி செய்யக்கூடாது? ஒருவனுக்கு மற்றொருவன் 5 – ரூபாய் கடன் கொடுத்தால் அது அங்கு திருட்டு ஆகிவிடுகிறது. ஆபத்தில் உதவ வேண்டாமா என்றால் கஷ்டத்துக்காக வேண்டுமென்றால் – ஏன் – எப்படி ஆபத்தும், – கஷ்டமும் ஏற்படும்? என்பதுதான் அங்கு கேட்கப்படும் கேள்வியாகும்.

ஜன சமூகம் கவலையற்று வாழ ஒழுங்கான முறை கூட்டுறவுத் தத்துவ வாழ்க்கை முறையேயாகும். நான் அதிகமாகச் சொல்ல வரவில்லை. இவைகளைத்தான் சொல்ல நினைத்தேன். இதற்கு மக்கள் தயாராகி விட வேண்டும். சுயநலத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டும். பலருடைய நன்மைக்கு என்றே கருதி வாழ்வில் இறங்க வேண்டும். இவற்றைச் சர்க்கார் செய்ய வேண்டியதா? பொது ஜனங்கள் செய்ய வேண்டியதா? என்பது ஆஸ்திகர்கள் விதி பெரிதா? மதி பெரிதா? என்று தர்க்கிப்பதை ஒத்ததாகும். இவ்விவகாரங்களில் வலுத்தவன், வாய்ப்பேச்சுக்காரன் தான் ஜெபமடைவான். சர்க்கார்தான் ஜனங்கள், ஜனங்கள் தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்ன வென்று இருப்போமா? அதுபோல் நமது பொதுஉணர்ச்சிகள் இருக்க வேண்டும். சிப்பியானது திறந்திருக்கு பொழுது மழைஜலம் விழும்போதுதான் முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள் பக்குவப்படுத்தி சரிப்படுத்தி வைத்துக் கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டு விடும். நம்முடைய அபிப்பிராயந்தான் ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்ய வேண்டும். நமது உடலில் தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்சுதல் (ஐணடீஞுஞிtடிணிண) செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது. கண்டிப்பாய் இது முடியக்கூடியதே.

நம்முடைய மக்கள் மடத்தனத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் முடியாது என்ற அறியாமை அந்தகாரம் சூழ்ந்திருக்கிறது. 1914 – 18 வருஷத்தில் நடந்த கொடிய மகா யுத்தத்தைக் கூடக் கேள்விப்படாத ரஷ்யர்கள் ரஷ்யாவில் இருக்கிறார்கள். இப்போதும் (இத்ச்ணூ) ஜார் அரசன் இருந்து அரசாளுகின்றான் என்று கருதிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். இதனால் எல்லாம் அங்கு கூட்டுறவு தன்மை ஏற்படாமல் போய்விட்டதா? எப்படி காய்ந்த தீய்ந்த சருகில் அதிவேகமாய் நெருப்புத் தீ பற்றிக் கொள்ளுகிறதோ அப்படியே தான் அங்கு மதம் ஒழிந்து – கடவுள் மாய்ந்து – அரசர்கள் மண்ணாங்கட்டிகளாகி, செல்வவான்கள் பனிக்கட்டிகளாகி, மழை பெய்தாலும், வெய்யில் அடித்தாலும் இவைகள் எல்லாம் கெடுவதுபோல் கெட்டு ஒழிந்து 16-கோடி ஜனங்களையும் கூட்டுறவு வாழ்க்கைக்காரராகி விட்டது என்பதை நீங்கள் ஞாபகத்தில் நன்கு பதிய வைத்துக்கொண்டு இந்நாட்டுக்கொடுமை, பஞ்சம், அநீதி ஆகியவை ஒழிப்புக்குத் தைரியங்கொண்டு கூட்டுறவு மூலம் போராடி உழையுங்கள். உங்கள் உணர்ச்சிகள் இவைகளுக்கு எப்பொழுதும் அனுகூலமாகவே இருக்கட்டும் – நீங்கள் வெற்றி அடைவது நிச்சயம்.

பகுத்தறிவு (மா.இ) – சொற்பொழிவு – நவம்பர் 1938

You may also like...