Category: பெரியார் முழக்கம் 2019

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

“நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?”புத்தகத்தை எழுதிய மாரிதாஸ், சமீபத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட் டிருக்கிறார். வழக்கம்போல ஒரு போர்டில் கசமுசாவென ஏகப்பட்ட வார்த்தைகளை எழுதிவைத்துக்கொண்டு, மாரிதாஸ் உளறும் அந்த வீடியோ ஒரு பொய்களின் குவியல். எட்டு நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவில் அவர் எப்படி தகவல்களைத் திரித்துச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 36, 488. பதில்: தவறு. 2018-19ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 38,646. அந்த நபர் சொல்வதுபோல 36 ஆயிரத்துச் சொச்சமல்ல. ஒரு சிறிய தகவலைக்கூட சரிபார்க்க முடியாமல், இவ்வளவு பெரிய பேச்சு. தமிழகக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் அளவு வருடத்திற்கு ஏறக்குறைய 55 கோடி ரூபாய். பதில்: பொய்....

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது. தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி...

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

திருச்சியில் நடந்த திசம்பர் 23 தமிழின உரிமை மாநாட்டில் பேசுவதாய் இருந்த உரை… பெரியார் பற்றாளர்களோடு நாமும் பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுயராஜ்ஜியம், சுதந்திரம் என்ற ஆரவாரங்களுக்கு இடையே 1947 ஆம் ஆண்டே ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கு துக்க நாள் என்று சொன்ன தேசத் துரோகி – இந்திய தேசத் துரோகி, இந்து, இந்தியன் என்ற அடையாளத்தை என்றைக்கும் ஏற்காத (யடட வiஅந யவேi-iனேயைn), சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்பை கொளுத்துங்கள் என்று சொன்ன (ரசயெn யேஒயட), 1947இலேயே படேலின் பாசிச ஆட்சி என்று சொன்ன பெரியாருக்கு வீரவணக்கம். பெரியார் பற்றாளர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த போது பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் ஏற்காத பெரியார் காங்கிரசிலில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். தனக்கென தனித்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் தனித்த வரலாற்றுப் பாதையை கடந்த நூற்றாண்டில்  உறுதிசெய்த வரலாற்று நிகழ்வு இது. இதனால்தான்,...

திருத்தம்

திருத்தம்

கடந்த வாரம் முதல் பக்கத்தில் வெளி வந்த சுப. வீரபாண்டியன் உரையில், தூத்துக்குடி மாநாட்டுப் பந்தல் எரிக்கப் பட்டது என்று தவறாக வெளி வந்து விட்டது. மதுரை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டது என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறோம்.                               (ஆர்) பெரியார் முழக்கம் 03012019 இதழ்

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...