Tagged: மாவட்ட கலந்துரையாடல்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

இடஒதுக்கீடு கலந்துரையாடல் – நாமக்கல் 26062016

இடஒதுக்கீடு நீண்ட நெடிய போராட்ட வரலாறு குறித்த கலந்துரையாடல் இடம் பெரியார் மன்றம், திருச்செங்கோடு நாள் 26062016 முன்பதிவு அவசியம்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை,சிவகங்கை,விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 24.12.205 அன்று மதுரையில் வழக்கறிஞர் தோழர் பொற்கொடி அவர்கள் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. மதுரையில் பிப்ரவரி மாதம்  ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” நடத்துவது குறித்து கழக தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளை சாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். விருதுநகர் ஜெயக்குமார்,செந்தில்குமார்,சிவகங்கை நா.முத்துக்குமார், கா.தர்மலிங்கம்,ராஜா,ராமகிருஷ்ணன்,அருண்குமார்,திருநாவுக்கரசு,  நித்தீஷ்,செந்தில்குமார்,மஜீத் உள்ளிட்ட தோழர்கள் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்