Tagged: காந்தி

காந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா

பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின்...

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி! இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம்...

கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.  என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித்தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா? பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம்  கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993...

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

காந்தி, கோட்சே எனும் ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட வுடன், இந்திய அரசால் ஆர்.எஸ் .எஸ் . தடை செய்யப்பட்டது. தடையை நீக்க, ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர்கள், நேரு, பட்டேலுடன் பேரம் பேசினார்கள். இந்திய அரசு பல நிபந் தனைகளை முன் வைத்தது. ஆர்.எஸ் .எஸ் . ஒரு ரகசிய அமைப்பாக செயல்படக் கூடாது; அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதெல்லாம் விதிக்கப்பட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையை ஆர்.எஸ் .எஸ் . ஏற்றுக் கெண்டு தனது அமைப்புக்கு சட்ட திட்டங்களை உருவாக்கியதோடு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கும் என்றும், (ஆர்.எஸ் .எஸ் . ஸின் சட்ட திட்டப் பிரிவு 4(பி)) உறுதியளித்தது. அரசியலில் ஒதுங்கியிருப்பதாக உறுதி கூறிய அதே ஆர்.எஸ் .எஸ் . தான் இப்போது பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தி யிருக்கிறது. இந்த விவரங்களை...

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்! மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

  மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார் “அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார். “காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?னு கேட்டேன்…” என்கிறேன் நான். “எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் ‘கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப்...

காங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது?

காங்கிரஸ் யாருடைய “சுதந்திரத்துக்கு” போராடியது?

‘அவுட் லுக்’ (மார்ச் 10) ஏட்டில் அருந்ததி ராய், அம்பேத்கர் நூலுக்கு எழுதிய முன்னுரிமை குறித்து வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி ஏற்கனவே பெரியார் முழக்கத்தில் (மார்ச் 20) வெளி வந்தது. பேட்டியின் மற்றொரு பகுதி: கேள்வி: காந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வில்லையா? அவர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரவில்லையா? பதில் : இதை சுதந்திரம் என்று சொல்வதைவிட வேண்டுமனால் ‘அதிகார மாற்றம்’ என்று சொல்லலாம். காந்திய-அம்பேத்கரிய விவாதத்தில் ‘ஏகாதிபத்தியம், சுதந்திரம்’ போன்ற வார்த்தைகள் நமது புரிதலில் இன்னும் சற்று ஆழமாகவும், சிக்கலாகவும் மாறிப் போகிறது. அம்பேத்கர் முதல்முறையாக, 1931 ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மீதான அம்பேத்கரின் தீவிர விமர்சனம் குறித்து காந்தி கேட்கிறார். அதற்கு அம்பேத்கர் அளித்த பதில் மிக பிரபலமானது: ‘காந்திஜி! எனக்கென்று தாயகம் ஏதுவுமில்லை; தீண்டத்தகாதவர்கள் பெருமைப்பட இங்கு எதுவுமில்லை.” அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னரும்கூட, பிரித்தானியப் பேரரசுக்குப் ‘பொறுப்புணர்ச்சி’யுடன்...

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’

குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின. இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய...