Author: admin

கேசவ பிள்ளை

கேசவ பிள்ளை

தோழர் கேசவ பிள்ளையை சென்னை மாகாணஅரசியல் உலகம் நன்றாய் அறியும். அவர் பழயகாலத் தலைவர் கோஷ்டியில் சேர்ந்தவர். பழய சட்ட சபைகளில் அவர் அதிகம் காரியங்கள் செய்தவர். ஆனால் அவர் பார்ப்பன ராய் இல்லாததால் அவரைப்போல வேலை செய்த பார்ப்பனர்களுக்கு கிடைத்த பெருமையும் பயனும் இவருக்கு கிடைக்காமல் போனதில் அதிசய மில்லை. பொதுவாழ்வில் சுமார் 40  வருஷகாலம் கலந்திருந்தும் அவரது வாழ்க்கை ஒரு சாதாரண நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.  மற்ற தலைவர்களைப் போல ஆடம்பரமும் பண வருவாயும் பிரதானமாக அவர் எதிர்பார்க்கவுமில்லை, அவர் எந்த விஷயத்தில்  கவலை எடுத்து உழைத் தாலும் அதை மனப்பூர்வமாக உணர்ந்து மனப்பூர்வமான அக்கரையுடனும், உண்மையான கவலையுடனுமே உழைத்து வந்திருக்கிறாரே ஒழிய பொய் யாகவோ, கூலிக்காகவோ அல்லது ஏதாவது ஒரு சுயநல பலனை உத்தே சித்தோ உழைத்தவர் என்று சொல்லுவதென்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்குப்பிரியம் கிடையாது. அவருக்கு ‘சர்’ பட்டம் கிடைத்திருக்கலாம். ஆனால்...

மாரியம்மன்  வரவேற்கின்றோம்

மாரியம்மன் வரவேற்கின்றோம்

  மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை. இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை.                         முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன. ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின்...

சைனா – ஜப்பான் யுத்தம்

சைனா – ஜப்பான் யுத்தம்

சைனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமார் ஒன்றரை வருஷ காலமாக யுத்தம் நடைபெற்றுவருகின்றது. இதுவரை யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்து விட்டார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிந்தும் விட்டன. இந்த யுத்தத்தின் தத்துவம் “வலுத்தவன் இளைத்தவனை உதைத்து அவனிடமிருப்பதை பிடுங்கிக்கொள்ளலாம்” என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நம்மைப் பொருத்தவரையில் சீனாவை சீனாக்காரனாண்டாலும்சரி, ஜப்பான்காரனாண்டாலும் சரி இதில் ஒன்றும் நமக்கு பிரமாதமான கவலை யில்லை. ஆனால் இதில் நடைபெறும் சூழ்ச்சிகள் ஒழிக்கப்படவேண்டிய தாகும். சர்வதேச சங்கம் என்று ஒன்றிருப்பது யாவருக்கும் தெரியும். அது “உலக சமாதானத்துக்காக இருந்து வருகிறது” என்று சொல்லப்படுவதாகும். எப்படியென்றால் 1914ல் ஏற்பட்ட பெரிய யுத்தத்தின் பயனாய் அநேக உயிர்ச் சேதங்கள் பொருள் சேதங்கள் ஏற்பட்டு உலக பொதுஜனங்களுக்கும் அதிக மான கஷ்டங்களைக் கொடுத்து விட்டதால் “இனி ஒருவருக்கொருவர் நாடு பிடிக்கும் ஆசைகொண்டு யுத்தம் செய்து கொள்ளக் கூடாது” என்பதற் காகவே ஏற்பட்டதாகும். ஆனால் இதை நாம் ஒரு நாளும் சரி...

செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி  கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

  தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமூகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், ஒவ் வொரு சமூகத்தானும், ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமூகங் களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த்தையேயாகும். ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச்சொன்னால் ‘இது சாத்தியப் படுமா’ என்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லுவதாகவே இருக்கிறது. எச்சமதர்மக் காரனையாவது அழைத்து உங்கள் சமூகத்தில் மதத்தில் சமதர்மம் இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படி யிருக்கிறாய், அவன் ஏன் அப்படியிருக்கிறான், நீ ஏன் எஜமானனாயிருக் கிறாய், அவன் ஏன் அடிமையாயிருக்கிறான், நீ ஏன் பிரபுவாய், செல்வந்தனா யிருக்கிறாய், அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிகிடப்பவனாயிருக்கிறான்? உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசை கூட இல்லை? நீ ஏன் வருஷம் 10000...

காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்

காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்

காரைக்குடியில் இம்மாதம் 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கல்லுக்கட்டு என்கின்ற ஒரு ஒதுக்கு இடத்தின் வேலிக்கு உட்புரமாக தோழர் ஜீவானந்தம் அவர்கள் தீண்டாமை என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சில பார்ப்பனர்களின் ஏவுதலின் பேரில் ஒரு போலீசு சப் இன்ஸ்பெக்டர் கூட்டத்துள் புகுந்து திடீரென்று தோன்றி தோழர் ஜீவனாந்தத்தை யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கண்ணத்தில் அடித்த தாகவும் காரணம் சொல்லி அடித்தால் நலம் என்று தோழர் ஜீவானந்தம் மரியாதையாய்ச் சொல்லியும் மறுபடியும் பலமாக பல தடவை அடித்ததாகவும் உடனே கூட்டம் கலைந்து விட்டதாகவும், அந்த சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந் தத்தை அடித்தது மாத்திரம் போதாமல் தோழர் கணபதி என்பவரையும் தெருவில் வழிமறித்து அடித்ததாகவும், பிறகு மறுபடியும் கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருந்த தோழர் ராமசுப்பையா அவர்களையும் ஓடி வழிமறித்து பல அடிகள் கன்னத்தில் அடித்ததாகவும், ஏனய்யா? என்ன காரணமய்யா? சொல்லிவிட்டு அடியுங்களையா என்று கேட்டும் சிறிதும் லட்சியமில்லாமலும் ஈவு இரக்கமில்லாமலும் கண்டபடி அடித்ததாகவும்...

குடி அரசு “குபேர” பட்டணத்தின்                சிறப்பா? சிரிப்பா?

குடி அரசு “குபேர” பட்டணத்தின்                சிறப்பா? சிரிப்பா?

அமெரிக்கா தேசத்தை இந்திய மக்கள் குபேர பட்டணமென்று சொல்வதுண்டு. குபேரபட்டணமென்றால் செல்வம் தாண்டவமாடும் பட்டண மென்று பெயர். உண்மையிலேயே அங்கு மற்ற நாடுகளைவிட செல்வம் அதிகந்தான். உலகில் பல பாகங்களிலுள்ள செல்வங்களும் பல வழிகளில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேருகின்றன. அமெரிக்கா செல்வம் மற்ற நாடுகளுக்கு வியாபார மூலமாகவும், லேவாதேவி மூலமாகவும் முதலாக அனுப்பப்பட்டு வட்டியும் லாபமும் ஏராளமாய் அடைகின்றது. மகா யுத்தத்திற்காக மற்ற தேசங்கள் பட்ட கடன்களில் பெரும்பகுதி இன்னமும் கட்டுவளியாகாமல் எல்லா தேசமும் அமெரிக்காவுக்குக் கடனாளி யாகவேயிருக்கின்றது. இது மாத்திரமா, அமெரிக்கா என்றால் அது ஒரு பெரிய பழமையான “குடியரசு நாடு” சக்கிரவர்த்தியில்லாமல், அரசன் இல்லாமல் “பிரஜைகளால் பிரஜைகளுக்காக” ஆளப்படும் “ஜனநாயக” ஆட்சியுள்ள நாடு என்றும் சொல்லப்படுவதாகும். அதன் (குடியரசு–ஜனநாயக) தலைவர் தேர்தலுக்கு பத்து லட்சக் கணக்கான நபர்கள் ஏழைகள், தொழிலாளிகள் ஆகிய மக்கள் ஓட்டுச் செய்துதான் தலைவர் (தேர்தல் நடந்து) நியமிக்கப்படுவது “கண்டிப்பான” சட்ட முறையாகும். இப்படியெல்லாம் இருந்தும்...

அரசியல் சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தத்தின் குறிப்புகள் “வெள்ளைக் காகித” அறிக்கை என்னும் பேரால் வெளிவந்து இருக்கிறது. அதைப்பற்றிய வாதப்பிரதிவாதங் கள் இந்தியப் பத்திரிகைகளின் பக்கங்கள் பூராவையுமே கவர்ந்து கொண்டு தினமும் சேதிகள், பிரசங்கங்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் என்கின்ற ரூபங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் இதைப்பார்த்து நமக்குப் பதினைந்தடுக்குள்ள ஒரு மாளிகையில் நெருப்புப் பிடித்துக் கொளுந்து விட்டெறியும்போது அந்த வீட்டைக்கட்ட வேலை செய்தவனும், குடியிருக்க வீடில்லாமல் சமீபத்தில் ஒரு மரத்து நிழலில் பொங்கிச் சாப்பிட்டு விட்டு வேலையில்லாமல் தலைக்குக் கையை வைத்துத் தரையில் நாளையச் சாப்பாட்டிற்கு வழி என்ன என்று ஏங்கிப் படுத்துக்கிடக்கும் ஒருவனுக்கு எவ்வளவு கவலையிருக்குமோ அவ்வளவு தான் இன்றைய சீர்திருத்த முயற்சியிலோ, வெள்ளைக்காகித அறிக்கை யிலோ நமக்குக் கவலையுண்டு. ஏனெனில் அந்த வீட்டை நெருப்புப்பற்றி எறிவதிலிருந்து காப்பாற்றப் படுவதில் இந்த மரத்தடியில் பொங்கித் தின்று கிடப்பவனுக்கு யாதொரு பயனுமில்லை. மற்றும் அந்த வீடு அடியோடு வெந்து சாம்பலாகுமானால் அதை மறுபடியும் புதுப்பித்துக் கட்டுவதன்...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

தோழர்களே! இது பரியந்தம் தோழர் பொன்னம்பலனார் “வாலிபர் கடமை என்ன?” என்பது பற்றி விபரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சங்கராச் சாரியாரின் விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் மத சம்பந்தமான அக் கிரமங்களைக் கூறும் போதும் கடுமையாகப் பேசியதாக நீங்கள் கருதலாம். சகிக்க முடியாத அக்கிரமங்கள் மதத்தின் பேரால் நடைபெறும் பொழுது அதை மேல் பூச்சாகப் பேசிப்போவதற்கு சாத்தியப்படாததாகவே இருக்கிறது. சென்னையில் கொள்ளையடித்தது போன்று மக்களிடம் மூடத்தனத்தைப் புகட்டி கொள்ளையடிப்பதை நேரில் சென்னையில் போய்ப் பார்த்திருந் தீர்களானால் தெரியும். இவ்விஷயத்தில் அவர் வாலிபரும் உணர்ச்சியுள்ள வருமாதலால் மிக்க ஆவேசத்துடனே தான் பேசினார். இன்னும் கவனித்தால் இன்றையதினம் கேவலமாக மக்களை மதிக்கப்படுகிற தீண்டாமை விலக்குக் கிளர்ச்சிக்கும் காங்கிரசில் பிரபல தேச பக்தர்கள் என்பவர்களும், ஏன் தோழர் காந்தியாரும்கூட உண்மையில் மத சாஸ்திர சம்மந்தமான அபிப்பிராயங் களைக் காட்டுவதன் மூலம் தீண்டாமை விலக்குக்குத் தடைசெய்து வரு கிறார்கள். சங்கராச்சாரி பிரசங்கமும் மதசம்பந்தமானதுதான். மத சம்பிரதாயப்...

தோழர். சு. மு. ஷண்முகம்.

தோழர். சு. மு. ஷண்முகம்.

தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள்  இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது கேட்டு பார்ப்பனர்களும், அவர்களது அடிமையாயிருந்து வயிறு வளர்த்துத் தீர வேண்டிய பேறுபெற்ற பார்ப்பனரல்லாதாரும், அவ்விருகூட்டத்தினது பத்திரிகைகளும் தவிர்த்து மற்றைய எல்லோருமே ஆனந்தக்கடலில் மூழ்குவார்கள் என்பதிலைய மில்லை. தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒரு பார்ப்பனராயிருந்திருந் தால் இன்று அரசியல் உலகில் மகாகனம் என்னும் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி பார்ப்பனரும், சர். பட்டம் பெற்று மற்றும் பல போக போக்கியங் களையும், மாதம்  20 ஆயிரம் 30ஆயிரம் வரும்படியையும் உடைய சர். சி. பி. ராமசாமி அய்யர்ப் பார்ப்பனரும் ஷண்முகத்திற்குப் பின்னால் 5-வது  6-வது ஸ்தானங்களில் இருப்பதற்குக்கூட தகுதி உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட மாட்டார்கள். மகாகனம் சாஸ்திரிக்கு தோழர்கள் கோக்கேல், காந்தி ஆகியவர்கள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் ஆதரவு கொடுத்தும் அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தும் இந்தியாவிலுள்ள “முக்கிய” பத்திரிகைகள் என்பனவெல்லாம்  (பார்ப்பனர்களை ஆசிரியராகவும், நிருபர்களாகவும் கொண்டிருக்கும் காரணத்தால்)...

இராணுவம்

இராணுவம்

இந்திய சட்டசபை வரவு செலவு திட்டத்தின் விவாதத்தின் போது ராணுவ சம்மந்தமாய் பேசிய பல இந்திய பிரதிநிதிகள் என்னும் கனவான்கள் ராணுவத்தை இந்திய மயமாக்கவேண்டும் என்றும் இந்தியர்களையே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் வாதம் செய்திருக் கிறார்கள். ஒவ்வொரு தேச மக்களையும் அடிமைகளாக்கி அத்தேச சரீர உழைப்பாளிகளினுடைய உழைப்பின் பயன்களை யெல்லாம் சோம்பேரி களும், சூட்சிக்காரர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கும், மனிதர் களுக்கு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் மதம், கடவுள், அரசன் என்னும் பெயர்களால் வேதம், விதி சட்டம் என்பவைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமாயிருப்பது இந்த ராணுவ ஸ்தாபனமேயாகும்.  எப்படி யெனில் கடவுள் கட்டளையால் ஏற்பட்ட வேதத்தின் கொள்கையை அனுசரித் துச் செய்யப்பட்ட சட்டத்தை நிர்வகித்து வரும் அரச ஆட்சிக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சிகளையும், சாதனங்களையும் அடக்கி, ஒடுக்கி அழிக்கவே ராணுவம் என்பது வெகு காலமாக இருந்து வருகின்றது. இந்த ராணுவத்திற்கு ஏற்படும் செலவுகள் அவ்வளவும் சரீரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களின் உழைப்பின் பயனிலிருந்தே கொடுக்கப்படு...

பார்ப்பனர்களின் தேசியம்  – சித்திரபுத்திரன்

பார்ப்பனர்களின் தேசியம் – சித்திரபுத்திரன்

  பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரீகம் சனாதனதர்மம் பழக்க வழக்கம் என்பவை களையே பிரதானமாகக் கொள்ளும்படி பிரசாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியபுராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரசாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இக்கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை “பாரத மாதா” (பூமிதேவி) என்று அழைப்பதும் “பாரததேசம்” என்று சொல்லு வதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க்கொண்டதே ஒழிய வேறில்லை. தேசீயம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல....

ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம்  ஐ

ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம் ஐ

இன்று இந்தியாவில் சுய ஆட்சியின் பேரால் நடைபெறும் அக் கிரமங்கள் – அயோக்கியத்தனங்கள் – ஒழுக்க ஈனங்கள் – நாணையக் குறைவு கள் ஆகியவைகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது ஸ்தல சுயாட்சியென்று சொல்லப்படும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களேயாகும் என்று வெற்றி முரசுடன் கூறலாம்.                         நம்நாட்டு ஸ்தல ஸ்தாபன உலகத்தை எடுத்துக்கொண்டோமே யானால் அதன் தலைப்பு முதல் கடைசி வரையில் உள்ள ஒவ்வொரு நிலை மையும் தீவத்திக்கொள்ளை போலவே நடந்து வருகின்றனவே அல்லாமல் மற்றபடி அவை யாருக்காக – யாது காரணத்திற்காக ஏற்பட்டதோ அந்த தத்து வம் சிறிதும் இல்லாததை ஸ்தல ஸ்தாபன வாழ்வில் கலந்துள்ள அனுபவ முள்ள எவரும் சுலபத்தில் அறியலாம். மற்றும் இந்தியாவுக்காக கேட்கப்படும் சுயாட்சியும் இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத்து பணக்காரரும், சோம்பேரிகளும், காலிகளும் வாழ்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்பதும் நன்றாய் விளங்கும். இன்றைய ஸ்தல...

ஈரோடு பெண் பாடசாலையில்              பெற்றோர்கள் தினம்

ஈரோடு பெண் பாடசாலையில்              பெற்றோர்கள் தினம்

ஈரோடு கவர்ன்மெண்ட் பெண்கள் பாடசாலையின் பெற்றோர்கள் தினவிழாவானது ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் சரஸ்வதி ஹாலில் தோழர் இ,எஸ். கணபதி அய்யரவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது கொண்டாட்டத்திற்கு பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 1000 பேருக்கு மேலாகவே கூடி இருந்தார்கள், பெண்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள். விழாவானது கும்மி, கோலாட்டம் சிறு விளையாட்டு முதலியவை களுடன் நடந்த தென்றாலும் அவற்றுள் சாவித்திரி சத்தியவான் என்கின்ற ஒரு புராணக்கதையை நாடகரூபமாக நடத்திக் காட்டப்பட்டதானது மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. நாடக பாத்திரங்கள் எல்லாம் சுமார் 10 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட அப்பள்ளிக்கூட மாணவப் பெண்களாகவே இருந் தார்கள். நாடகமானது கூடியவரை மிகவும் அருமையாக நடித்துக் காட்டப் பட்டது. இம்மாதிரியாக ஒரு நாடகம் நடித்துக் காட்ட அம்மாணவிகளை தர்ப்பித்து செய்த பெண் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரும், மற்றும் உதவி உபாத்தியாயர்களும் பாராட்டப் படத்தக்கவர்களே ஆவார்கள். மாணவர்களுடைய அறிவும் சுபாவ ஞானமும் சிலாகிக்கத் தக்கவையாகும். ஆனால் ஒரு விஷயம் குறிப்பிடாமல் இருக்க...

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்

தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை.  ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும்  என்று தெரிந்தேன்.  இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என் கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.  நாம் இந்த 7,  8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.  சுமார் 15,  20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம்.  அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம்,  அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று...

விருதுநகர் ஆண்டு விழா

விருதுநகர் ஆண்டு விழா

ஈ. வெ. இராமசாமியும் வல்லத்தரசும் 1000 பேர் ஊர்வலம் தலைவரவர்களே! வாலிபதோழர்களே! மற்றும் பல சங்கத்தினர்களே! இன்று இந்த ஆண்டுவிழாவுக்காக வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற் புக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆடம்பர வரவேற்பும் உபசாரப் பத்திரங்களும் எவ்வளவு உணர்ச்சியுடையதானாலும் கிளாச்சியாய் இருந்தாலும் ஏதோ ஒரு அளவுக்கு இயக்க பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டுவதற்கும் மக்கள் கவனத்தை இழுப்பதற்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்படுவதாய் இருந்தாலும் இப்போது வரவர எனக்கு இவைகள் ஒரு சடங்கு முறை போலவே தோன்றுகின்றன. இந்தப்படி வாயில் சொல்லிக் கொண்டே நானும் இந்த காரியங்களுக்கு உடன் பட்டுக் கொண்டே வருகின் றேன் என்றும் இவை அனாவசியம் என்றோ தவறு என்றோ பட்டவுடன் நிருத்திவிட வேண்டியதே கிரமமாகும் என்றும் சொல்வதில் குறை இருப்ப தாக நினைக்கவில்லை. ஆனால் இப்போது நிறுத்தப்படுவது சிலருக்கு அதிருப்தியாகவும், சிலருக்கு விஷமம் செய்யஇடம் கொடுப்பதாகவும் இருக்கக்கூடும்...

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை

 ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை அதிகரித்து விட்டதென்றும் இதன் பயனாய் காலித்தனங்களும், பொதுஜன சாவதானத்துக்கு அசௌகரி யங்களும் ஏற்பட்டு பல திருட்டு, ரகளை, அடிதடி, ஆபாசப் பேச்சுவார்த்தை கள் முதலியவைகளும் ஏற்படுகின்றன என்று 29-1-33 தேதி “குடி அரசு”ப் பத்திரிகையில் எழுதியிருந்ததுடன் இவற்றைச் சீக்கிரத்தில் ஒழிக்கபோலீசார் தக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும், விபசாரத் தடுப்பு சட்டத்தின் அமுல் ஈரோட்டிற்கும் கொண்டுவர வேண்டுமென்றும் தெரிவித் துக்கொண்டோம்.  சமீபத்தில் ஈரோடு போலீசு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவர்கள்  சிறிது கவலை கொண்டு ஏதோ சில எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட தாகவும் தெரிகின்றது.  ஆனால் காரியத்தில் தக்க மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டதாய் தெரியவில்லை.  ஆகையால் இப்போதும் பல தோழர்கள் முயற்சி எடுத்து போலீசு சூப்ரண்ட்டெண்ட் அவர்களுக்கு இக்கஷ்டங்களைக் குறித்து விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தெரிகின்றது.  அதில் தோழர்கள், மு.ச. முத்துக்கருப்பஞ் செட்டியார், ஆர். பழனியப்ப செட்டியார். ஈ. என். குப்புசாமி ஆச்சாரி, எ. கோவிந்தசாமி...

உண்மைத் தோழர் மறைந்தார்

உண்மைத் தோழர் மறைந்தார்

சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-2-33 ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம்.  நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக் கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  தோழர் ராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்விதி தாட்சண்யத் திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தி...

காங்கிரசும் ஒத்துழைப்பும்

காங்கிரசும் ஒத்துழைப்பும்

சுயமரியாதை இயக்கத்திற்குள்ளாக சுயமரியாதை சமதர்மக்கட்சி என்ப தாக ஒருகிளை தோன்றி அது சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களைக் கைப்பற்றவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்போர்கள் சிலருக்குள்ளும் சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்கின்ற ஆசை தோன்றி அதை வெளிப்படுத்த சமயம் பார்த்துக்கொண்டே இருந்து அதற்கு சில சாக்குகள் ஏற்பாடு செய்து இப்போது மெள்ள மெள்ள வெளியாக்கிவிட்டார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “காங்கிரசுக்காரர்கள் வைதீகர்களைப்போல் பிடிவாதக் காரர்கள் அல்ல.  அவர்களுக்கு சட்டசபைகளின் மூலம் பலன் ஏற்படும் என்று தோன்றினால் உடனே சட்ட சபைகளுக்குச் செல்வார்கள்” என்று குறிப்பிட்டி ருந்ததை வாசகர்கள் படித்திருக்கலாம். இந்த அறிக்கையின் கருத்தானது காங்கிரஸ் சட்டசபை நுழைவை அனுமதிக்கப்போகின்றதென்றும், ஆகை யால் சட்டசபை செல்ல ஆசையுள்ளவர்கள் காங்கிரசை விட்டு விட்டு வேறு கட்சியில் சேர்ந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளுவதேயாகும்.  அன்றியும் அதற்கேற்றாற்போல் சட்டசபைகளை லக்ஷியம் செய்தும் ஆதரித்தும் தோழர் காந்தியவர்கள் “அநேக...

சேலத்தில்                                                            ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு  வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம்          

சேலத்தில்                                                            ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம்          

தலைவரவர்களே! தோழர்களே! ! தலைவரவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியதில் நான் மேல் நாட்டிற்குச் சென்றதில் ஏதோ பல அறிய விஷயங்களை அறிந்து கொண்டு வந்திருப்பதாக கூறி நான் ஏதோ பல அரிய விஷயங்களை சாதித்து இருப்ப தாகவும் கூறினார்.  நான் எனது மேல் நாட்டு சுற்றுப்பிராயணத்தில் ஒன்றும் புதிதாக கற்றுக்கொண்டு வரவில்லை. என்னுடைய அபிப்பிராயங்களும், எண்ணங்களும், ஆசைகளும் எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணத்தால் பலப்பட்டன, அசைக்க முடியாத அளவு உறுதி கொண்டு விட்டன. மற்றும் எனது ஆசை வெறும் கனவு ஆசை அல்லவென்றும், எனது அபிப்பிராயம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஆகாயக்கோட்டை அபிப்பிராயம் அல்ல என்றும், நான் எதையும் அமிதமாக எண்ணி மனப்பால் குடிக்கவில்லை என்றும் உணர்ந்தேன். அதற்கு ஆதாரமாக அநேக விஷயங்களை பிரத்தி யக்ஷத்தில் பார்த்து எனது கொள்கையும் ஆசையும் சாத்தியமே என்றும், சர்வ சாதாரணமே என்றும் அறிந்தேன். இது தான் எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிராயணச்சேதியென்றும் சுற்றுப்பிரயாண அனுபவமென்றும்...

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்டகுறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:- “ஆலயப்பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை” “ஆனால் பிறருடன் சரிசமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது” “ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும்” என்ற குறிப்புகள் இருக்கின்றன. இவைகளில் ஏதாவது இன்றைய அநுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சம உரிமையை தாராளமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற் றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும், நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர் களது பிள்ளை குட்டிகளுக்கு கல்வி கொடுக்கவோ நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட் கின்றோம். இன்று மக்களுக்கு...

வருணாச்சிரமம்

வருணாச்சிரமம்

சென்றவாரக் “குடியரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் “இரகசியம் வெளிப் பட்டதா? என்ற தலைப்பில் காந்தியவர்களினுடையவும், காங்கிர சினுடையவும், அரசியல், சட்டமறுப்புக் கிளர்ச்சியின் தத்துவம் இன்னது என்பதை ஒருவாறு விளக்கினோம். ஆனால் அத்தலையங்கத்தின் இறுதியில் காந்தியின் வருணாச்சிரமத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படியே இவ்வாரம் “வருணாச்சிரமம்” என்பது பற்றி சில விஷயங்கள் எழுதுகின்றோம். வருணாச்சிரமம் என்பதைப்பற்றி இதற்கு முன் பல தடவை எழுதி இருக்கிறோம். ஆதியில் நாம் வருணாச் சிரமத்தைப் பற்றி எழுதிய காலத்தில் சில தேசீய வாதிகள் காந்தியின் வருணாச்சிரமம் இன்னது என்பதை நாம் அறியாமையால் குற்றம் சொல்லுவதாக பல “தேசியவாதிகளும்” “தேசீயப்பத்திரிகைகளும்” நம் மீது பழி சுமத்தி வந்தன. ஆனால், தோழர் காந்தியவர்களே தனது வருணாச் சிரமத்துக்கு நன்றாய் வெளிப்படையான வியாக்கியானம் செய்த பிறகு, அதாவது தேசிய வாதிகள் வேதத்தைப் போல் வாசித்து வந்த “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் எழுதிய பிறகு “இந்த ஒரு விஷயத்தில் (வருணாச்...

“காட்டாறு” குறித்து ஓர் அறிவிப்பு

“காட்டாறு” குறித்து ஓர் அறிவிப்பு

‘காட்டாறு’ எனும் மாத வெளியீடு குறித்து விளக்கங்கள் கேட்டும், விமர்சனங்கள் கூறியும் சில கடிதங்களும், கைபேசி அழைப்பு களும் கழகத் தலைமை நிலையத்துக்கும், பொறுப்பாளர்களுக்கும் வருகின்றன. ‘காட்டாறு’ இதழ் சில பெரியாரியல் சிந்தனை யாளர்களால் அவர்களது தனிப் பொறுப்பில் நடத்தப்படும் இதழே தவிர, திராவிடர் விடுதலைக் கழகத்தின் இதழ் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்விதழைத் தொடர்பு கொள்ள விரும்பு வோர் அவ்விதழிலேயே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு

வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக! குடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு

இலங்கை இராணுவத்தின் ஒடுக்கு முறைகளிலிருந்து தப்பித்து, ஈழத் தமிழர்கள், கடல் வழியாக படகுகள் வழியாக தாய்த் தமிழகம் நோக்கி அகதிகளாக வருகிறார்கள். படகுகளில் வர முடியாதவர்கள், சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் ‘விசா’ பெற்று விமானம் மூலம் அகதிகளாக வருகிறார்கள். இவர்களும் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்கள்தான். இவர்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ திரும்பும்போது இந்தியாவில் அனுமதித்த காலத்தைவிட கூடுதலான காலம் தங்கியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு உள்ளா வதை சுட்டிக்காட்டி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தலைமை குடியுரிமை அதிகாரியிடம் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் செப். 25 பகல் 11 மணி யளவில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. “கடந்த வருடத்திற்கு முன்பு வரை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் விசாக் காலம் முடிந்து தங்கியிருக்கும்...

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடுமாவட்டம். கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இவ்வாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. பேரணி ல.கள்ளிப் பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர். சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும்,...

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்) “இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும்...

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

தலையங்கம் – நேபாளத்தில் ‘இந்து’ மத ஆட்சி ஒழிந்தது!

உலகின் ஒரே ‘இந்து’ நாடு என்று பார்ப்பனியம் பெருமையுடன் பறைசாற்றி வந்த ‘நேபாளம்’ – மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ‘இந்து மன்னர்’ ஆட்சி நடந்தது. அந்த மன்னர் விஷ்ணுவின் ‘மறு அவதாரம்’ என்று, மக்களை பார்ப்பனியம் நம்ப வைத்தது. மனு சாஸ்திரமே நாட்டின் சட்டமாக இருந்தது. மன்னர் ‘க்ஷத்திரியர்’; அவர் ‘பிராமண புரோகிதர்’ காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். சங்கராச் சாரி பார்ப்பனர்கள், தங்களின் தாய் நாடாக நேபாளத்தைக் கருதி வந்தனர். 1994ஆம் ஆண்டு முதல் ‘மனு தர்ம’ மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தைத் தொடங்கினர். 2006இல் ஆயுதப் போராட்டத்தை கை விட்டு, அரசியல் பாதைக்குத் திரும்பினர். அதைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு 239 ஆண்டுகால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறையைக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டது. ‘மதச்சார்பற்ற’ கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

குற்றவாளிகளே நீதிபதிகளாக முடியாது போர்க் குற்றம்: உள்நாட்டு விசாரணை பயன் தராது!

அய்.நா.வின் மனித உரிமைக் குழு அறிக்கை ஈழத்தில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. சிங்கள நீதிபதிகள், சர்வதேச சட்ட நிபுணர்கள் அடங்கியதே கலப்பு நீதிமன்றம். இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையை மட்டுமே ஏற்க முடியும் என்று பிடிவாதமாக மறுக்கிறது. கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா, இப்போது அய்.நா.வில் முன்மொழிய உள்ள தீர்மானத்தில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்று கூறிவிட்டது. உண்மையில் இலங்கை வரலாற்றில் இதுவரை அங்கே நடத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியையே சந்தித்து வந்திருக்கின்றன. 1963-லிருந்து 2013 வரை இலங்கையில் ஏறத்தாழ 18 விசாரணை ஆணையங்களை இலங்கை அரசு நியமித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவை. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் பானவை, எந்த ஒரு ஆணையமும் முறையாக செயல்படவில்லை. முதன்முதலாக 1963ஆம் ஆண்டு அன்றைய ‘சிலோன்’ ஆளுநராக இருந்த...

பர்னாட்ஷா – மேத்தா  

பர்னாட்ஷா – மேத்தா  

  நமது இயக்கப் பிரசாரத்தைக் கண்டு நமது நாட்டு வைதீகர்களும், பண்டிதர்களும் நடு நடுங்குகிறார்கள், நமதியக்கக் கொள்கைகள் எல்லா மக்கள் மனத்திலும் பதிந்துவிட்டால் தங்கள் சுயநலத்திற்குக் காரணமாக இருக்கும் வைதீகம் அழிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் இவ்வாறு பயப்படுவதற்குக் காரணம் பகுத்தறிவில்லாமையும், பழைய சாஸ்திரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் வீண் அபிமானம் கொண்டிருப் பதுமேயாகும். அபிமானத்தைப்போல அறிவைத் தடைபடுத்தும் கருவி உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் படித்தவர்கள் மூட நம்பிக் கைகளை ஒழிக்க அஞ்சி அவைகளைக் காப்பாற்ற முயன்றாலும் காலம் சும்மா விடுவதில்லை. உலகம் புகழும் பரந்த அறிவினர்கள் உள்ளத்தில்  உண்மை உணர்ச்சித் தோன்றி வெளிப்பட்டு விடுகின்றது. உலகத்தில் உள்ள கவிஞர்களில் மிகச் சிறந்த – பரந்த – அறிவினராகிய “ஜியார்ஜ் பர்னாட்ஷா” என்பவரைப்பற்றி அறியாதார் எவரும் இலர். அவர் கூறுவது முழுவதும் நமது இயக்கக் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய மொழிகளேயாகும். அவர் எழுதிய நூல்களைக் கற்றோர் அனைவரும் அவருடைய அபிப்பிராயங்களை...

கல்வி மந்திரி பிரசங்கம்

கல்வி மந்திரி பிரசங்கம்

  சென்ற 4-8-32ல் நடந்த சென்னைச் சர்வகலா சாலைப் பட்டமளிப்பு விழாவின் போது நமது மாகாண கல்வி மந்திரி திவான் பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் பட்டதாரிகளுக்குச் செய்தப் பிரசங்கம் மிகவும் சிறந்த தொன்றாகும். அவர் தற்காலக் கல்வியில் உள்ள குற்றங்களையும், கல்வியின் லட்சியம் இன்னதென்பதையும், கல்வி எம்முறையில் போதிக்கப்பட வேண்டு மென்பதையும், எத்தகைய கல்வி அவசியமென்பதையும், கற்றவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டியிருக்கிறார். கல்வியானது உலக வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் வித்தையை மாத்திரம் கற்றுக் கொடுப்பதனால் தேச மக்களின் துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால் தொழில் கல்வியை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். அன்றியும் தற்காலத்தில் உயர்தரக் கல்விக்கு அதிகமாக செலவு செய்வதைக் காட்டிலும், ஆரம்பக் கல்வியின் பொருட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும்; ஆரம்பக்கல்வியின் மூலம் தேசமக்கள் எல்லோரையும் அறிவுடையராக்க முயல வேண்டும் என்னும் சிறந்த...

தமிழர் மகாநாடு

தமிழர் மகாநாடு

  திருச்சி ஜில்லா துறையூரில் சென்ற 6, 7-ம் தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்ப் புலவர் மகாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு, தமிழர் மகாநாடு ஆகிய மகாநாடுகள் கூடி முடிந்தன. இம்மகாநாடு சம்பந்தமான அறிக்கைகள் பத்திரிகைகளிலும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளிவந்த காலத்தில் நாம் ஒரு வகையில் மகிழ்ச்சியடைந்ததுண்டு.  இதற்குக் காரணம் இம் மகாநாடு, தமிழர் சீர்திருத்தத்தையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கே கருதி செல்வர்கள், புலவர்கள், மாணவர்கள், சீர்திருத்தக்காரர்கள், அரசியல்வாதிகள் முதலிய எல்லாத் தமிழர்களும் ஒன்று சேரும் மகாநாடு என்று கருதியதே யாகும். நாம் இவ்வாறு அபிப்பிராயப்பட்டது தவறல்ல என்பதற்கு இம் மகாநாட்டு  நிர்வாகிகளால் வெளியிடப்பட்டிருக்கும் 9-வது அறிக்கை ஒன்றே போதுமான சாட்சியாகும். அவ்வறிக்கையில் “மக்களுள் வேறுபாடு பிறப்பினால் இல்லை என்பதை உணர்ந்து ஏழை மக்களை நம்மைப் போல் மேன்மையடைவிக்கவும், சுதந்தர தாகங் கொண்டுள்ள நம்முடைய நாட்டிற்குக் கல்வியை அடிப் படையாகக் கொண்டாலன்றி அஸ்திவாரமில்லாத, வீடு போலாகுமாத லின், தாய்...

ஏழைகள் கண்ணீர்

ஏழைகள் கண்ணீர்

  தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிப் பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும், தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை யற்றவர்களாக வெளியேறுகின்றனர். நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அனேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூஸ்திதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அனேகர் குடியிருக்கவும் சொந்தக் குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர் களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப்பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள்...

ஸ்தல ஸ்தாபனச் சட்டம்

ஸ்தல ஸ்தாபனச் சட்டம்

  இப்பொழுதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டப்படி நகரசபைத் தலைவர்களோ, லோக்கல் போர்டுகளின் தலைவர்களோ ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் மீது உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மையோரால் நிறைவேற்றப்பட்டவுடன் தலைவர்கள் தங்கள் பதவியை இழந்து விடவும் இடமிருக்கிறது. “ஸ்தல ஸ்தாபனச்சட்ட”த்தில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தியிருப்பதை  யாரும் ஆட்சேபிக்க முடியாது. இது  ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகம் ஊழலாகப் போய் விடாமல் திறமையாக நடைபெற வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் அமைக்கப்பட்டதேயாகும்.  இப்பிரிவு இல்லாவிட்டால் தலைவர்கள் சிறிதும் பயமில்லாமல் தங்கள் அதிகாரங்களைச் சுய நலத்தின் பொருட்டு துஷ்பிரயோகம் செய்ய இடமேற்படும் என்பதில் ஐயமில்லை. இப்பிரிவு இருந்தால் “ஸ்தல ஸ்தாபன”த் தலைவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டாவது நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் இச்சட்டம் அமலுக்கு வந்த சுமார் இரண்டு வருஷங்களாக, பல நகர சபைகளிலும், லோக்கல் போர்டுகளிலும் உள்ள...

தேர்தல் ஜாக்கிரதை!

தேர்தல் ஜாக்கிரதை!

  நமது நாட்டில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஒரு சிறு கூட்டம், தேசத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்துக் கொண்டேயிருக்கிறது. அச்சிறு கூட்டமே நாட்டின் அரசியல் துறையில் செல்வாக்கு வைத்துக் கொண்டும், சமூகத் துறையில் தலைமை வகித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு வராமல் காப்பாற்றிக் கொண்டும் வருகிறது. தாழ்ந்த நிலையிலிருந்து துயரப் படும் மக்களில் எவரேனும் உயர்நிலையடைந்து வாழ்ந்திருக்கும் அச்சிறு கூட்டத்தாரின் சூழ்ச்சிகளை அறிந்து வெளிப்படுத்த ஆரம்பித்தார்களாயின் அப்போதே அவர்களை, அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உபயோகித்துத் தலைதூக்க வொட்டாமல் செய்து கொண்டு வந்தார்கள். இது பண்டைக் கால முதல் நடைபெற்று வரும் மறைக்க முடியாத உண்மையாகும். பண்டைக் காலத்தில் இக் கூட்டத்தார் பாமர மக்களைப் பயமுறுத்தி அடிமைப் படுத்துவதற்கு உபயோகித்த ஆயுதங்கள், “கடவுள்” “வேதம்” “மதம்” “சடங்குகள்” “புராணங்கள்” “வருணாச்சிரமதருமங்கள்” “மோட்சம்” “நரகம்” “சுவர்க்கம்” “பாவம்”...

பெண்கள் அடிமை நீங்குமா?

பெண்கள் அடிமை நீங்குமா?

  இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங் களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை. முற்போக் குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாரா யிருக்கிறார்கள். “இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக் கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல், “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று சொல்லுவது போல கணவனு டைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து, பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது;  இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரீகம்; இந்நாகரீகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப் போகும்; அவர்களுடைய பதிவிருதா தர்மம் அழிந்து போகும்; இதனால் இந்திய நாகரீகமே மூழ்கிவிடும்; ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும்” என்று பிற்போக் கான அபிப்பிராயமுடையவர்கள்...

திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

தோழர்களே! இன்று நான் பேசப்போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று இங்கு நடக்கும் உற்சவத் திற்காக வந்தவர்கள். மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம் வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அதுமாத்திரமல் லாமல் உங்களது கடவுள் உணர்ச்சி, மத உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, தேச உணர்ச்சி ஆகியவைகளையும், உங்களது சமூகத்தில் வெகுகாலமாய் இருந்துவரும் பழக்க வழக்கங்களையும் குற்றம் சொல்வதோடல்லாமல் அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்றும் சொல்லுகின்றவன். இதை நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா என்பது எனது முதல் சந்தேகமாகும். நீங்கள் பொறுத்தாலும் சரி பொறுக்காவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் உங்களிடம் நான் முதலிலேயே என்னிஷ்டப் படி பேச அனுமதி வாங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் நான் பேசப்போவதைப் பற்றி வருத்தப்படுவதற்குமுன் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனித்துப்பார்க் கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால் நான் ஏன் இப்படிப் பேசுகிறேன். இதனால் எனக்கு என்ன லாபம்? இந்தப்படி பேசுவதனால் யாராவது...

எதை நம்புவது!  – சித்திரபுத்திரன்

எதை நம்புவது! – சித்திரபுத்திரன்

    தீண்டாமையை ஒழிக்கப்பட்டினி கிடக்கும்படி கடவுள் கட்டளை இட்டிருப்பதாக காந்தி சொல்லுகிறார். தீண்டாமையை நிலை நிறுத்துவதற்காக யானை குதிரைகளுடன் பல்லக்கு சவாரி செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதாக சங்கராச்சாரி யார் சொல்லுகிறார். அவனன்றி ஓரணுவும் அசையாது.  ஆதலால் மேற்கண்ட இரண்டு காரியங்களும் கடவுள் திருவிளையாடல் என்று கடவுள் பக்தர்களான ஆஸ்தி கர்கள் சொல்லுகிறார்கள். இந்த மூன்றும் முட்டாள் தனமும், சுயநலம் கொண்ட போக்கிரித் தனமும், பித்தலாட்டமும், ஏமாற்றலும் அல்லது இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறில்லை என்றும் ரஷியர்கள் சொல்லுகிறார்கள். இவற்றுள் எதை நம்புவது, எதை நம்பினால் உண்மையில் தீண்டாமை ஒழிய முடியும்? குடி அரசு – கட்டுரை – 26.2.1933

வைதீகக் கோட்டையில்   சுயமரியாதைக் குண்டு

வைதீகக் கோட்டையில்   சுயமரியாதைக் குண்டு

  செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில்  சென்ற 17 – 7 – 32ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசை யாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்க மும், மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில் வெளிவந்திருப் பதைக் காணலாம். செட்டி நாட்டில் நடைபெற்ற இம்மகாநாடு நமது இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த சின்னமாகும் என்று கூறியும், நினைத்தும் சந்தோஷப் படுவது சிறிதும் தவறாகாது. ஏனெனில், இன்று நமது நாட்டில் பார்ப்பனீ யத்திற்கு ஆதரவு அளித்து வருகின்ற மக்கள் நிறைந்த இடம் செட்டிநாடு என்பது உலகமறிந்த விஷயம். “வேதங்கள்” என்று  சொல்லப்படுகின்றவைகளிலும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாததும், வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவ ளிக்கக் கூடியவைகளுமான புராணங்களிலும் நம்பிக்கை வைத்துக் கொண் டும், அவைகளைப் பற்றி பிதற்றுகின்றவர்களின் வலையிற் சிக்கி ஏமாந்து கொண்டும் இருக்கின்ற மக்கள் செட்டி நாட்டில்தான்...

“மாமாங்கத்தின் அற்புதம்”  – சித்திரபுத்திரன்

“மாமாங்கத்தின் அற்புதம்” – சித்திரபுத்திரன்

  புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா? பு–ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேராய் இருந்தபோதிலும், கூழாயிருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை.  இதற்கு பதில் சொல் பார்ப்போம். சு–ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான்.  இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவுசெய்து கேள்க்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேரு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிரமாக ஆகிவிடும். குளிக்கிர ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த...

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம்.  இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள். “தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர். சீனிவாசய்யங்கார் சங்கீத மகாநாட்டைத் திறந்தார், விசாலாட்சி பாடினார். முத்தையா பாகவதர் கதை செய்தார். டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள் வரவேற்பு தலைவர். ராமசாமி அய்யர், டைகர் வரதாச்சாரியார், கணபதி சாஸ்திரி, அலமேலு ஜெயராமய்யர், மற்றும் குமரய்யர், சுப்பைய்யர், ராமசாமி சாஸ்திரி, ரங்காச்சாரி, சுந்தரகனபாடி, சிங்கார கனபாடி, ஆச்சாரிய ஸ்வாமிகள் என்றெல்லாம் பார்ப்பன நபர்களே எங்கும் தோன்றுவதும் ஏதோ இரண்டொரு பார்ப்பனரல்லா முண்டங்கள் இவர்களுக்கு வால்பிடிப்பதுமாய் இருப்பதை அவர்களது (பார்ப்பனர்களது) பத்திரிகைகளிலேயே காணலாம். ஆகவே மாமாங்கம் பார்ப்பனர் சூட்சி என்றும், அவர்களது வாழ்வுக்கே ஏற்பட்டதென்றும் சொல்லுவதில் என்ன பிழை இருக்கிறது. இதை பார்ப்பனரல்லாத சோணகிரிகள் உணர வேண்டாமா? குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 19.02.1933

‘மெயில்’ பத்திரிகையின் கூற்று

‘மெயில்’ பத்திரிகையின் கூற்று

சென்னை “மெயில்” பத்திரிகையானது தனது 11-2-33 தேதி தலையங் கத்தில் எழுதுவதாவது:- “சுயமரியாதை இயக்கமானது எல்லா மதங்களையும் துணிகரமாகத் தாக்கி வருவதுடன் மதங்களை அழிக்க வேண்டுமென்று பலமான பிரசாரம் செய்து வருகிறது. இதற்குக் காரணம் சர்க்கார் மத நடுநிலைமை வகித்தி ருக்கிறது என்ற ஒரே சாக்குத்தான். இதன் பயனாய் இப்பொழுது மத விஷய மான பிரசாரங்களுக்கு பொது மேடைகளில் இடமில்லாமல் போய் விட்டது. கோவிலிலும், பள்ளிவாசல்களிலும், சர்ச்சுகளிலும் மாத்திரம் தான் தனியாய் பேச முடிகின்றது. இதனால் சோவியத் ரஷியாவில் மதம் அழிந்தது அத் தேசம் நாசமுற்றது போல் இங்கும் நேரலாம் என்று கருத இடமேற்படுகின்றது. மத விஷயம் மறுபடியும் பொது மேடைகளுக்கு தாராளமாய் வரவேண்டு மானால் பள்ளிக்கூடங்களில் மதத்தைப் புகுத்தியாக வேண்டும்.  தோழர் காந்தியையும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வதை விட்டு விட்டு சுயமரியாதைக் கட்சியை ஒழித்து அதன் பிரசாரத்தை அடக்கும் விஷயத்தில் பாடுபட்டால் அது மிகவும் பயனளிக்கும்” என்பது விளங்க...

மாமாங்கம்

மாமாங்கம்

கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மாமாங்க விஷயமாய் சென்ற வாரம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்மந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படு கின்றது என்றாலும், அது பெரிதும் சுயநலக்காரர்களாகிய முதலாளிமார்கள், சோம்பேரி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத்தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின்றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையாவார்கள். ஒன்று பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம் மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பரமாகின்றது. இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபசாரக் குச்சிக் காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட்டைப் பை) திருடர், தந்தித்திருடர், கத்திரிக் கோல் திருடர் முதலிய திருட்டுவகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கனவே உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு,...

ரகசியம் வெளிப்பட்டதா?

ரகசியம் வெளிப்பட்டதா?

காங்கிரசினுடையவும், காந்தியினுடையவும், கொள்கைகளும் அது சம்பந்தமான கிளர்ச்சிகளும்,  முதலாளிமார்களுக்கும், உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்களுக்கும் மாத்திரமே நன்மை பயக்கத் தக்கதென்றும், காங்கிரசும், காந்தியும், பணக்கார முதலாளிகளுடையவும், ‘படிப்பாளி’ களாகிய சோம்பேரிகளுடையவும் ஆயுதங்களே என்றும் இந்த 7, 8 வருஷ காலமாகவே நாம் தெரிவித்துக்கொண்டு வந்திருக்கின்றோம். இதன் பயனாய் தேசியப்புலிகள்-தேசபக்த வீரர்கள் என்பவர்கள் நம்மீது சீறிப்பாய்ந்து  நம்மை தேசத்துரோகி என்றும், மதத்துரோகி என்றும்  பட்டம் சூட்டி கண்டபடி வைததோடல்லாமல் குத்திவிடுவதாகவும், சுட்டு விடுவதாகவும் வீரம் பேசி ரத்தத்தில் (தோய்த்து) கையெழுத்துச் செய்த பல எச்சரிக்கைக் கடிதங்களையும் அனுப்பினார்கள். இவை மாத்திரமல்லாமல் தேசியப்பத்திரிகை என்பவைகளும்  மதப் பத்திரிகை என்பவைகளும் நமக்கு இழைத்த  தீங்குகளுக்கும்  கொடுத்த தொல்லைகளுக்கும்  அளவேயில்லை. ராமசாமியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அடியோடு ஒழித்தாலொழிய தேசியம் வெற்றிபெறாது என்றும், இவற்றை ஒழிப்பதே ஒரு பெரிய  தேசிய வேலை என்றும் பேசி னார்கள், எழுதினார்கள். சோம்பேரிகளையும் காலிகளையும் ஏவியும் விட்டார்கள். மற்றும் மேடையில் ஏறிப்பேச சௌகரியம்...

காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது

காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது

‘சுதேசமித்ரன்’ ‘தமிழ் நாடு’ ‘இந்து’ அபிப்பிராயம் தற்கால காங்கிரஸ் நிலமையை பற்றி  “சுதேசமித்திரன்” பத்திரிகையில் நாளது மாதம் 11-ந் தேதி தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளாவன:- “இந்தியாவில் தற்கால நிலையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வற்புறுத்தும் சக்திகள் குறைந்து கொண்டிருக்கின்றன. சீர்திருத்தங்களுக்காக  வெகுவாக பிரயாசைப்பட்ட தேசீய உணர்ச்சியானது தலைவரிழந்து சக்தி குறைந்து வருகிறது”. “இந்நிலையை எவ்விதம் பரிகரிப்பது?  சோர்வடைந்திருக்கும் ராஜிய கிளர்ச்சிக்கு எவ்விதம் புத்துயிரளிப்பது”. “காங்கிரஸ் ஸ்தாபனமானது, தனது சக்திகளை, பல துறைகளில், பல பிரச்சனைகளில் திருப்பி வலுவற்றதாகச் செய்துக்கொள்ளக்கூடாது. இதர பிரச்சனைகள் சமுதாய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானதாயினும், இந்த சமயத்தில்  ராஜிய பிரச்சனையே முதல் பெறவேண்டும். சட்ட மறுப்பு கொள்கை வெற்றி பெறுவதற்கு, ஆதியில் எவ்வளவு சௌகரியங்களிருந்த போதிலும் தற்காலம் அது பயன்படாதென்றோ அல்லது அதற்குத் தேவையான உணர்ச்சி தேசத்தில் இல்லையென்றோ அவர்கள் கருதுவார் களானால், உடனே தேசத்தின் நலத்தை உத்தேசித்து தங்கள் திட்டத்தை திருத்தி அமைத்து விடவேண்டும்”. என்ற குறிப்புகள்...

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள். நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது, ஆனாலும் உங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று நான் பேசவர வில்லை. ஆனால் இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன். இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண் டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம். கல்யாணம்  செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை வியாபாரம் முதலியவைகளை விட்டு விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள்.  சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது? இந்த...

ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்

ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்

ருஷ்ய (பொது உடமை)க் கொள்கைளைப் பற்றி பேசுவதோ, பிரசாரம் செய்வதோ குற்றமான தென்பதாகப் பல நண்பர்கள்  பயந்து அடிக்கடி புத்தி கூறி வருகின்றார்கள். பலர் இதை எடுத்துக்காட்டி பாமர ஜனங்களை மிரட்டி வருகின்றார்கள். ஆனால்  இவர்களை யெல்லாம் பைத்தியக்காரர்களாக்கத் தக்க வண்ணமும், வீண் பூச்சாண்டி காட்டி. பயப்படுத்துகின்றவர்களாக்கும் வண்ண மும், சென்னை மாகாண சட்ட நிபுணரும், அட்வொகேட் ஜெனரலும் (சர்க்கா ருக்கு சட்ட சம்பந்தமான யோசனை சொல்லு பவரும்) ஆன தோழர் அல் லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் சென்னை ஓரியண்டல் யூனிவர்சிடி சங்கத்தின் ஆண்டு விழாவில் மாணவர்களிடையும் மற்றும் பண்டிதர் களிடையும் பேசும் போது நன்றாய் விளக்கிக்காட்டி இருக்கிறார். அதாவது, “ருஷியாவில் ஒரு திட்டம் ஏற்படுத்தி இருக்கிறார்கள், அதில் சில கெடுதல்கள் இருந்தாலும் மேலான நன்மைகளும் இருக்கின்றன. ருஷிய திட்டம் உலக முழுதுக்குமே நல்ல பாடம் கற்பிக்கக் கூடியதாய் இருக் கின்றது. கைத்தொழில் அபிவிர்த்தி விஷயத்தில் ருஷியா இப்போது உலகத்...

மகாமகம்

மகாமகம்

மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம்(மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடு கள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்க ளுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு, ரயில்வேக் காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட்டகைகளையும் போடுகிறார் கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்கவிட்டும், பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும் படி செய்தும் மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். சாதாரணமாகக் கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத் தகுந்த விசேஷம் பொருந் திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க்ஷீண திசை அடைந்துவரும் தோற்ற முடைய பழங்காலமுறைக் கட்டடங்களையும் உடைய...

தாழ்த்தப்பட்டார் விடுதலை

தாழ்த்தப்பட்டார் விடுதலை

  இந்துக்கள் மாயவலை பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும். இது போலவே அறிவில் சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் சௌக்கிய மடையும் விஷயத்தில் ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன் களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக்கொண்டு, அவைகளின் உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் சௌக்கியமாக ஜீவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து வருந்திச் சௌக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன் தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு, தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான். இக் குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது...

ஏழைகளுக்கு நன்மையில்லை

ஏழைகளுக்கு நன்மையில்லை

  இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப் படுகின்றார்கள்; இன்னார் கஷ்டப்படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லு வதற்கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார நெருக்கடியால் இன்னது செய்வதென்று தோன்றாமல் திக்குமுக்காடுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் பரம ஏழைகள் என்பது தெரிந்த விஷயம். இத்தகைய ஏழை மக்கள் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும், படுந் துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று யாராலும் குறித்துரைக்க முடியாது. இந்த நாட்டில் பிழைப்பில்லாமல் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர், எல்லோ ரையும் விட்டு விட்டு கடல் கடந்து அன்னிய நாடு சென்று கூலி வேலை செய்யும் மக்களில் இந்தியரே அதிகமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கூலிகளுக்குக் கூட அன்னிய நாடுகளிலும் பிழைப்பு இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்....