Author: admin

ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்

ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்

  தோழர் ஈ.வெ.ராமசாமியின்  வேலைத்திட்டம் உள்பட   (1) ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை சாதித்த வேலைகளை பொது ஜனங்கள் அறிந்தே இருக்கின்றார்கள். எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பமளிப்பதும் தேசத்தின் பொதுவான முன்னேற்றத்திற்கு உழைப்பதுமே ஜஸ்டிஸ் கட்சியார் வேலையின் அடிப்படையான கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன. கிராமவாசிகள் க்ஷேமாபிவிர்த்தி, ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம், பொதுஜன சுகாதார அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து வசதிகள், குடித்தனச்செட்டு, கூட்டுறவு பாங்கி ஏற்பாடு, சகல சமூக ஆண் பெண் குழந்தைகளுக்கு சம வசதியுடன் ஆரம்பக் கல்வி முன்னேற்றம், அறநிலையப் பாதுகாப்பு, குடியிருப்பு பாத்தியதை, குடிவாரப் பாதுகாப்பு, கிராம வாசிகளுக்கும் நகர வாசிகளுக்கும் அதிகப்படியான நலம் ஏற்படும் முறையில், ஸ்தல ஸ்தாபன முனிசிபல் நிர்வாகம் நடத்துதல். இவை முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான நோக்கங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவற்றை அனுசரித்து பல காரியங்கள் செய்யப்பட்டும் இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி எவ்வளவோ விஸ்தாரமாக எழுதலாம். ஆனால்,...

கொச்சியில் அரசியல் சுதந்தரம்  ” மித்திர ” னின் ஜாதி புத்தி

கொச்சியில் அரசியல் சுதந்தரம் ” மித்திர ” னின் ஜாதி புத்தி

  கொச்சி ராஜ்யமானது நமது தமிழ் ஜில்லாக்களில் ஒரு நான்கு ஐந்து தாலூகாகளுக்கு சமமாகும். சுமார் 12 லக்ஷம் ஜனங்களும் சுமார் 1 கோடி ரூ. வருஷ வருமானமும் உடையதாகும். இந்த ராஜ்யம் இன்று இந்தியாவிலேயே தலை சிறந்து விளங்கும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொச்சியில் இன்று இருக்கும் ராஜா 75 வயது கடந்த விருத்தரும் பழமை விரும்பியும் வைதீகப் பித்தருமாவார் என்றாலும் அவருக்கு கிடைத்த அருமையான திவானால் மகாராஜா இன்று குன்றின் மேலிட்ட தீபமாய் விளங்குகின்றார். இந்த மகாராஜா மீது பார்ப்பனர்கள் ஒரு குறை கூறுகிறார்கள். அதாவது கொச்சி மகாராஜா கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடவில்லை என்பதாகும். (எப்படிப்பட்ட பார்ப்பனர்கள் இந்தக்குறை கூறுகிறார்கள் என்றால் பார்ப்பன ராஜ்யம் இருக்கும் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கோவிலைத் திறந்து விடுவதற்கு சட்டம் செய்யக்கூடாது என்று வாதாடும் பார்ப்பனர்கள்.) ஏனெனில் பக்கத்து தேசமாகிய திருவாங்கூர் மகாராஜா கோவிலைத் திறந்து விட்டிருக்கும்போது கொச்சி...

காங்கரஸ் கொடி  தேசீயக்கொடி அல்ல

காங்கரஸ் கொடி  தேசீயக்கொடி அல்ல

காங்கரஸ்காரர் மெஜாரட்டி பெற்று பதவியேற்றதும் சென்னைக் கோட்டையில் தேசீயக்கொடி யேற்றுவதாக பாமர மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஓரளவிலாவது நிறைவேற்றி வைத்துச் சமாளித்து விடவேண்டுமென்ற நோக்கத்தினால் சென்னை முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார், விருப்பமுடைய ஸ்தல ஸ்தாபனங்கள் தேசீயக்கொடியை (காங்கரஸ் கொடியை)த் தமது கட்டிடங்களில் விசேஷ காலங்களில் பறக்கவிடலாம் என ஒரு அறிக்கை தயார் செய்து சென்னை கவர்னர் பிரபுவின் ஆசீர்வாதம் பெறச் சென்றதாகவும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென ஒப்புக்கொள்ள முடியாதென்று கவர்னர் கூறியதாயும் அப்பால் காங்கரஸ் மூவர்ணக் கொடியே என கனம் ஆச்சாரியார் திருத்தி அறிக்கை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் காங்கரஸ் சர்க்கார் வெளியிட்ட அறிக்கையில் காங்கரஸ் மூவர்ணக் கொடி எனப் பிரத்தியேகம் குறிப்பிடப்பட்டிருந்தும் காங்கரஸ் மந்திரிகளும் ஏனைய காங்கரஸ்காரரும் காங்கரஸ் பத்திரிகைகளும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென புரளிசெய்து பொது ஜனங்களை ஏமாற்றும் வழக்கம் நிற்கவில்லை. நீலகிரி ஜில்லா போர்டு கட்டிடத்தில் காங்கரஸ் கொடியைப் பறக்கவிடவேண்டுமென்று ஒரு காங்கரஸ்...

பொப்பிலி  ராஜாவும்  வைசிராய்  பேட்டியும்!

பொப்பிலி  ராஜாவும் வைசிராய்  பேட்டியும்!

  இ.ஐ.ஈ.  எழுதுவது பொப்பிலி  ராஜா  அவர்கள்  கல்கத்தாவுக்குச்  சென்றபோது  வைசிராய்  பிரபு  பேட்டி  அளிக்க  மறுத்து  விட்டதாகச்  சில  பத்திரிகைகள்  எழுதுகின்றன. இதை  ஒரு  பொருப்பும்  நாணையமுள்ள  பத்திரிகையின்  நடவடிக்கை  என்று  சொல்ல  முடியாமைக்கு  வருந்துகிறேன். பொப்பிலி  ராஜா  கல்கத்தாவுக்கு  ஜனவரியை  உத்தேசித்தும்,  சில  நண்பர்களைக்  காணவும்  சென்றாரே  ஒழிய  வைசிறாயைப்  பார்க்க  செல்லவில்லை. வைசிராயைப்  பேட்டி  கேழ்க்கவும்  இல்லை. பொப்பிலி  ராஜா  வைசிறாய்  பிரபுவைப்  பார்க்க  வேண்டுமென்று  விரும்பினால்  வைசிராய்  பிரபு  பார்க்க  முடியாது  என்று  சொல்லி  விடுவாரா? அவ்வளவு  பெரிய  துரோகம்  அவரை  நம்பினவர்களுக்கோ,  சர்க்காருக்கோ  அல்லது  வைசிறாய்  வருத்தப்படும்படியோ  என்ன  செய்து  விட்டார்  என்று  அறிவுள்ளவர்கள்  நினைக்க  மாட்டார்களா? பொப்பிலி  என்பதற்காக  இல்லாவிட்டாலும்  ஒரு  மாகாண  முதல்  மந்திரியை  வைசிராய்  பார்க்க  மறுத்துவிட்டார்  என்பது  எந்த  பைத்தியக்  காரனாவது  நம்பக்கூடிய  சேதியா?  அல்லது  எந்தப்  பைத்தியக்காரனாவது  சொல்லக்கூடிய  சேதியா?  செட்டி  நாட்டு  ராஜாவின்  பணமானது  சில ...

முனிசாமி  நாயுடுவின்  முடிவு

முனிசாமி  நாயுடுவின்  முடிவு

  தோழர்  ஆ. முனிசாமி  நாயுடு  திடீரென்று  முடிவு  எய்திய  செய்தி  கேட்டு  திடுக்கிட்டு  விட்டோம். அவருக்கு  வயது  இப்போது  50தேதான்  ஆகின்றது.  இவர்  ஒரு  கெட்டிக்கார  வக்கீல்  என்று  பெயர்  வாங்கியர்.  அவர்  ஜஸ்டிஸ்  கட்சியில்  ஒரு  பிரபலஸ்தராய்  விளங்கினார்.  பனகால்  ராஜா  முடிவெய்திய  பிறகு  அக்கட்சிக்குத்  தலைவராக  ஆனார்.  அதன்  பயனாய்  முதல்  மந்திரி  ஸ்தானமும்  பெற்றார்.  மந்திரி  போட்டியின்  பலனாகவும்,  காங்கிரசை  சில சந்தர்பங் களில்  ஆதரித்ததின்  பயனாகவும்  மந்திரி  உத்தியோகம்  விட்டுவிட  வேண்டி  நேர்ந்தது என்றாலும்  கட்சியை  விட்டு  விலகாமலும்  எதிர்கட்சியாகிய  காங்கிரசினிடம்  சேராமலும்  ஜனநாயக  ஜஸ்டிஸ்  கட்சி  என்பதாக  ஒரு  கட்சி  ஏற்படுத்தி  அதற்கு  தலைவராய்  விளங்கி  வந்தார். சமீப  காலத்தில்  ஜஸ்டிஸ்  கட்சியில்  இரண்டரக்  கலந்து  விடுவதற்கு  வேண்டிய  ஏற்பாடுகள்  நடந்து  இந்த  மாத  முடிவிலோ,  அடுத்த  மாத  துவக்கத்திலோ,  ஒரு  மந்திரி  பதவியை  அடையக்கூடிய  நிலையில்  இருந்தார். அதன் பயனாக ஜஸ்டிஸ்...

ராமநாதபுரம் ஜில்லாவில்

ராமநாதபுரம் ஜில்லாவில்

ஈ.வெ.ரா. பிரசங்கம் தலைவர் அவர்களே! தோழர்களே! இந்திய அரசியலில் புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரப்போகிறது. அது சம்பந்தமாக இனியும் ஒன்றரை மாதத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் போட்டி போடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்காக பொது ஜனங்களிடமிருந்து ஒரு அளவுக்கு பணமும் வசூலித்துக்கொண்டார்கள். பண ஆத்திரமும் பதவி ஆத்திரமும் அதிகார ஆத்திரமும் கொண்டவர்களாகப் புதிது புதிதாகத் தேடிப்பிடித்து தங்கள் கட்சியில் சேர்த்து எலக்ஷனுக்கு நிறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து மற்ற ஆட்களின் தேர்தல் செலவுக்கு பணமும் வசூலித்து சேர்த்து வருகிறார்கள். இந்தப் பணங்களால் பார்ப்பனர்களை தேர்தலுக்கு நிறுத்தியும், காலிகளுக்கு கொடுத்து காங்கிரசுக்காரர்கள் அல்லாதவர்களுடைய தேர்தலுக்கு இடையூறு செய்தும் தொல்லை விளைவிக்கப் போகிறார்கள். நாம் வெறும் தர்ம நியாயம் பேசிக்கொண்டு வீணாய் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம். நமது நேரம் மிகவும் விலை உயர்ந்த நேரமாகும். ஏற்கனவே நாட்டில் காங்கிரஸ்காரர்களால் ஏராளமான விஷமப்பிரசாரம் நடந்தாய் விட்டது. தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்றும், சர்க்கார்...

தாழ்த்தப்பட்டவர்களும்  முஸ்லீம்களும்

தாழ்த்தப்பட்டவர்களும்  முஸ்லீம்களும்

  இப்போது நம் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும், முஸ்லீம்களின் நிலையும் சமூகம் அரசியல் ஆகியவைகளில் ஒன்று போலவே இருந்து வருகிறது என்று நாம் வெகு நாளாகவே சொல்லி வருகிறோம். இதையே தோழர் ஜின்னா அவர்களும் அலகாபாத்தில் தன்னைக் காண வந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் தூது கோஷ்டிக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்து மதப்படிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையானது அவர்கள் செத்தால் ஒழிய – செத்த பிறகும் கூட (தீண்டாமை) ஒழியாது என்பது தத்துவமாகும். இதற்கு இந்துமத வேத சாஸ்திரங்களும் அவைகளில் நிபுணத்துவம் பெற்ற சாஸ்திரிகளது வாக்குகளுமே ஆதாரங்களாகும். அது போலவே இந்து மதப்படி முஸ்லீம்கள் விஷயமும் ஆகும். மற்றும் கவனமாய் பார்த்தால் முஸ்லீம்கள் விஷயம் தீண்டப்படாதவர்களைவிட மோசமானதாகும் என்று தெரியவரும். ஏனெனில் மத அகராதிப்படி ஆதாரப்படி முஸ்லீம்கள் சோனகர் என்றும் மிலேச்சர்களென்றும் அழைக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். துருக்கியனை அசுரன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது பாஷையையும், தேசத்தையும் மிலேச்ச...

ஒன்றுக்கொன்று பொருத்தம்

ஒன்றுக்கொன்று பொருத்தம்

  – சித்திரபுத்திரன்   இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமிபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார்கள். சுப்ரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணியன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன்றான்; சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக்கொண்டிருப்பதுமாக இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரிய புராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரிபக்தர்கள் கதையும் அனேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதைக்...

வைத்திய உதவிக்கு ஆபத்து

வைத்திய உதவிக்கு ஆபத்து

  சரணாகதி மந்திரி சபையின் வைத்திய இலாகா மந்திரியான கனம் டாக்டர் ராஜன் அவர்கள் சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விஷயமாய் வெளிப்படுத்தி இருக்கும் அபிப்பிராயங்களும் உத்திரவுகளும் பல பத்திரிகைகளில் வெளியாய் இருப்பதை நமது வாசகர்கள் கவனித்திருக்கலாம். அவ்வுத்திரவினுடைய முக்கிய கருத்தானது சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர்களை நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி கவுரவ டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதாகும். இதற்குச் சரணாகதி மந்திரிகள் சொல்லும் முக்கிய காரணம் என்ன வென்றால், சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு வருஷம் 1க்கு சுமார் 30 லக்ஷ ரூபாய் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமானால் வைத்திய இலாகாவில் உள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்துவிட்டு, படித்துவிட்டு வரும்படி இல்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ – சம்பளமில்லாமல் கவுரவ டாக்டர்களாக நியமித்து விடுவதன் மூலமும், சில பள்ளிக் கூடங்களை எடுத்து விடுவதன் மூலமும் கல்வி சுகாதார இலாகாவில் சில சிக்கனம் செய்து...

ஜாதிமுறை

ஜாதிமுறை

    சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே! “குடி அரசு” தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்றும் சொல்லப்பட்டதோடு அந்த சாதிகள்தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் þ சாதிக்கிரமத்தை அதாவது ஆதி சாதி என்பவைகளான, பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டும் தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக்கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக்கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக்கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும்...

வக்கீல்  தொல்லைகள்

வக்கீல்  தொல்லைகள்

  ஒரு  தேசத்தில்  எவ்வளவு  கொடுங்கோல்  ஆட்சி  இருந்தாலும்,  ஒரு  தேசத்தில்  எவ்வளவு  வழிப்பறி  தீவட்டிக்  கொள்ளை  பகல்  கொள்ளை  போன்ற  வெளிப்படையாய்,  பலாத்காரமாய்  மனம்  பதறப்  பதற  பரித்துக்  கொள்ளும்  கொடுமைகள்  இருந்தாலும்  மற்றும்,  சமூக வாழ்க்கையில்  சமாதானத்துக்கும்,  சாந்திக்கும், நல்லொழுக்கத்துக்கும்  விரோதமானது  என்று  சொல்லப்படும்  கள்ளு,  சாராயக்  கடைகள்,  தாசி  வேசி  வீடுகள்,  சூது  மடங்கள்  ஆகியவைகள்  இருந்தாலும்,  சாமான்கள்  விலை  பேசுவதுபோல்  நீதிக்கும்,  தீர்ப்புக்கும்  லஞ்சம்  வாங்கும்  அனியாய  அயோக்கிய  நீதிமுறைகள்  இருந்தாலும்,  அவைகளையெல்லாம்  விட  இன்றைய  வக்கீல்  தன்மை  என்பது  மனித  சமூகத்துக்கு மிக  மிக  கஷ்டமானதும்,  தொல்லையானதும்,  சித்திரவதைக்கு  ஒப்பானதுமான  துன்பங்களைக்  கொடுக்கக்  கூடியது  என்பது  நமது  பல நாளைய  அபிப்பிராயமாகும். மனித  சமூகத்துக்கு  காலரா,  பிளேக்கு,  க்ஷயம்,  உளமாந்தை  போன்ற  கொள்ளை  நோய்கள்  எப்படியோ,  அதுபோலவே  தான்  மனித  சமூக  ஒழுக்கத்துக்கும்,  நாணையத்துக்கும்,  சாந்திக்கும்  வக்கீல்  சமூகம்  ஒரு  பெரும்  வியாதியேயாகும். வக்கீல் ...

தமிழ்  எழுத்து  சீர்திருத்தம்

தமிழ்  எழுத்து  சீர்திருத்தம்

  தமிழ்  பாஷை  எழுத்துக்கள்  விஷயமாய்  பல  சீர்திருத்தங்கள்  செய்யப்பட  வேண்டும்  என்பது  அனேகருக்குள்  வெகுகாலத்திற்கு  முன்பு  இருந்தே  ஏற்பட்டிருந்த  அபிப்பிராயங்களாகும். தோழர்  குருசாமி  அவர்கள்  எழுதியது  போல்  பெருத்த  பண்டிதர்களில்  கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி  வந்திருக்கிறார்கள். தமிழ்  எழுத்துக்களைப்  பற்றி  அழுக்கு  மூட்டைப்  பண்டிதர்கள்  எவ்வளவு  தத்துவார்த்தம்  சொன்னாலும்  அது  எவ்வளவோ  விஷயத்தில்  சீர்திருத்தமடைய  வேண்டும்  என்பதில்  நமக்குச்  சிறிதும்  சந்தேகமில்லை. ஒரு  பாஷையோ,  ஒரு  வடிவமோ  அல்லது  வேறு  பல விஷயமோ  எவ்வளவு  பழையது,  தெய்வீகத்  தன்மை  கொண்டது  என்று  சொல்லிக்  கொள்ளுகின்றோமோ,  அவ்வளவுக்கு  அவ்வளவு  அவற்றில்  சீர்திருத்த  வேண்டிய  அவசியமிருக்கின்றது  என்பது  அதன்  உண்மைத்  தத்துவமாகும். உதாரணமாக  நெருப்புக்கு  சுமார்  நூறு  ஆயிரம்,  பதினாயிரம்  வருஷங் களுக்கு முந்தி  சக்கி  முக்கி  கல்லுகள்  தான்  ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது  ஒரு  “”கடவுளால்”  ஆதியில்  பொதிய  மலையில்  இருந்தோ,  கைலாச மலையில்  இருந்தோ ...

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை

  தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூடியுள்ள இப்பெரிய கூட்டத்தில் பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அதிலும் எனது பழய தோழர் மாஜி மந்திரி கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தலைமையில் பேசுவதைப் பற்றி மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். முஸ்லீம் லீக்கு சம்பந்தமாய் முஸ்லீம் சமூகத்தினரால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் என்ன பேசுவேன் என்று குறிப்பிடாத நிலையில் என்ன பேசுவது என்று யோசித்ததில் தலைவர் அவர்கள் பேசியதை ஒட்டியும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பேசுவது பொருத்தமுடையதாக இருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்து அதைப்பற்றியே பேச தலைவர் அனுமதியளிப்பார் என்று கருதுகிறேன்.   இந்து முஸ்லிம் ஒற்றுமை   இந்தியாவைப் போலுள்ள ஒரு நாட்டுக்கு இன்று முக்கியமாய் வேண்டியது இந்து முஸ்லிம் ஒற்றுமையேயாகும். அது மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜாதி வகுப்பாரின் ஒற்றுமையுமாகும். இந்தக் காரியங்களை செய்யாமல் அரசியல், பொருளாதாரம் முதலிய பெரிய விஷயங்களைப் பற்றி...

ஈரோடு  முனிசிபாலிட்டி

ஈரோடு  முனிசிபாலிட்டி

  மிருகக்  காக்ஷி  சாலை இவ்வூர்  பீபிள்ஸ்  பார்க்கிலிருக்கும்  மிருக  காக்ஷிற்கு  முனிசிபல்  கமிஷனரின்  வேண்டுகோளுக்  கிணங்கி  சென்னை  கார்ப்பொரேஷன்  சங்கத்தார்  2  பெண்  சிங்கங்களும்,  2  மான்களும்  இலவசமாய்  அளித்ததை  இவ்வூர்  முனிசிபாலிட்டியார்  தங்களிடமிருக்கும்  லாரி  மூலம்  சென்னையி லிருந்து  அம்  மிருகங்களை  கொண்டுவந்திருக்கிறார்கள்.  ஏற்கனவே  மிருகக்  காக்ஷியில்  இருந்து  வரும்  கரடி,  முதலை  ஆகிய  நூதன  மிருகங்களுடன்  இம்மிருகங்களையும்  வைத்து  நன்கு  போஷிக்கப்பட்டு  வருவதோடு  பொதுஜனங்கள்  சொற்ப  கட்டணத்தில்  மிருகங்களைப்  பார்வையிடவும்  ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே  இருக்கும்  கரடிகள்  இரண்டும்  பெண்  கரடிகளாக  விருப்பதால்  அவைகளில்  ஒரு  பெண்  கரடியைக்  கொடுத்து  ஒரு  ஆண்  கரடியை  இந்த  சிங்கம்  கொண்டு  வந்த  இடத்திற்கே  கொடுத்து  பெற்றுக்கொண்டால்  மிக  நலமாக  விருக்கும்  அதேபோல்  சிறுத்தையையும்  மாத்திக்  கொள்ளலாமென  நினைக்கிறோம். (பர்) குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  13.01.1935

காங்கிரஸ்  முதலாளிகள்  கோட்டை

காங்கிரஸ்  முதலாளிகள்  கோட்டை

  லாகூரில்  கூடிய  காங்கிரஸ்  அபேதவாதிகள், “”காங்கிரஸ்  திட்டத்தில்  முதலாளிகளுக்கு  நன்மை  இருக்கின்றதே யொழிய பொது  ஜனங்களுக்கு  எவ்வித  பயனும்  கிடையாது”  என்றும் “”காந்தியின்  கிராமப்  புனருத்தாரணத்  திட்டத்தால்  கிராம  வாசிகளுக்கு  எவ்வித  நன்மையும்  ஏற்படப்  போவதில்லை”  என்றும் “”ஒரு  சில  சுயநலக்கூட்டத்தார்களே  அரசியலின்  பேரால்  பலனடைந்து  வருகிறார்களே  ஒழிய  பாமர  ஜனங்களுக்கு  யாதொரு  பலனும்  ஏற்பட  இடமில்லை”  என்றும் “”முதலாளிகளைக்  காப்பாற்றவும்,  சமதர்ம  இயக்கத்தில்  கிராம  ஜனங்கள்  சேராமல்  இருப்பதற்காக  கிராமத்தார்களை  ஏமாற்றவுமே  காந்தியார்  கிராமப்  புனருத்தாரண  சங்கம்  ஏற்படுத்தி  இருக்கிறாரே  ஒழிய  வேறு  இல்லை”  என்றும் “”மதம் என்பதை அடியோடு ஒழிந்தாலொழிய ஜனசமூக  முன்னேற்றமும், பொதுஜன ஒற்றுமையும் ஏற்படாது” என்றும் “”மதத்தில்  ஏமாற்றம்  தவிர  வேறு  ஒன்றுமே  இல்லை”  என்றும்  பட்டவர்த்தனமாக  பல  பொதுக்கூட்டங்களில்  பேசினார்கள். இதைச் சுயமரியாதைக்காரர்கள் சொன்னால் அவர்களை தேசத்  துரோகிகள்  என்றும்,  அரசாங்கக்  கூலிகள்  என்றும்,  நாஸ்திகர்கள்  என்றும்,  தென்னாட்டுக்  காங்கிரஸ்  கூலிகள்  ஊளை ...

மோட்சமும் நரகமும்

மோட்சமும் நரகமும்

மனிதன், உடல், உயிர், மாயை எனும் முப்பொருளாக ஆக்கப் பட்டிருக்கின்றான் என்று சைவர்களும், பிரம்மமே மாயா சம்மந்தப்பட்டு இவ்வுலகில் ஜீவர்களாய்த் தோன்றியிருக்கிறது என்று ஸ்மார்த்தர்களும் “ஆன்மா” என்றொரு பொருளை இறைவன் சிருஷ்டித்து மனித உடலுக்குள் புகுத்தியிருக்கிறான் எனச் சில மதங்களும், இவ்வாறு ஒன்றிற்கொன்று முரணாக, நாம் முன் அதிகாரங்களில் விளக்கிக் காட்டியபடி கூறிவருகின்றன. ஆனால் எல்லா மதங்களும் “ஆன்மா” செய்த நன்மை தீமைக்குத் தகுந்தவாறு மோட்சமும் நரகமும் எய்துமென்பதை அபிப்பிராய பேதமின்றி ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மோட்சமும் நரகமும் எவ்வாறு இருக்கும் என்றால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகவே வர்ணிக்கின்றது. எந்த நாட்டான் நரகத்தைப்பற்றி எழுதியிருந்தாலும் தத்தம் நாட்டிலுள்ள கொடிய பிராணிகளும், பயங்கர உருவங்களும், கஷ்டமான அனுபவங்களும்தான் நரகத்திலேயிருப்பதாகவும், அவ்வாறே மோட்சத்திலும் தத்தம் நாட்டிலுள்ள உயர்ந்த பிராணிகளும், மரஞ் செடி, கொடி, பழ வர்க்கம், உணவு, பெண்கள் முதலிய போக போக்கியங்களுமிருப்பதாகவே எழுதி வைத்திருக்கின்றான். நரகமும் மோட்சமும் பணம் பறிப்பதற்குப் புரோகிதர்களால்...

காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும்  எச்சரிக்கை

காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும் எச்சரிக்கை

  காங்கரசுக்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சி கரமானதுமான காரியங்களைப்பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. காங்கரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக் கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக்கூடாது என்பதுதான் காங்கரஸ்காரர்களின் சுயராஜ்யமாகவும், பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக்குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய் காங்கரஸ்காரர்களின் காலித்தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுவுக்கும் வேண்டுகோள் செய்து கொண்டே வந்திருக்கிறோம். என்ன காரணத்தை முன்னிட்டோ இவ்விஷயத்தில் சர்க்கார் போதிய கவலை செலுத்தாமலே இருந்து வந்திருக்கிறது. ~subhead காலித்தனத்துக்கு காங்கரஸ் பத்திரிகைகள் ஆதரவு ~shend தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றை காங்கரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி காலிகளுக்கு...

தெரிவிப்பு

தெரிவிப்பு

  எழுத்து  வடிவங்கள்  திருத்தம் Ù. à. ùண. ùல. ùள. ùன. ஆகிய எழுத்துக்களை  முறையே ணா.  றா.  னா.  ணை.  லை.  ளை.  னை.  என்பதாகத்  திருத்தி  அச்சுக்  கோர்த்திருக்கிறோம். (பர்) குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு” என்னும் பெயரால் மாத வெளியீடு ஒன்று  வெளிப்படுத்த  உத்தேசித்து  உள்ளோம்.  இந்த  உத்தேசமானது  சுமார்  4, 5 வருஷத்துக்கு முன்னாலேயே செய்யப்பட்டதானது குடிஅரசு வாசகர் களுக்குத் தெரியும். அதைப்பற்றிய விபரம் சீக்கிரத்தில் தெரிவித்துக்  கொள்ளுவோம். குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

குடி அரசு”

குடி அரசு”

குடி அரசு  பத்திரிகை  துவக்கப்பட்டு  இன்றைக்கு  11வது  வருஷம்  நடக்கின்றது.  மத்தியில்  ஒரு வருஷ  காலம்  அது  அஞ்ஞாத  வாசம்  செய்ய  வேண்டி  ஏற்பட்டு  அதன்  கொள்கைகள் “புரட்சி’,  “பகுத்தறிவு’  என்னும்  பெயரால்  வெளியிடப்பட்டு  வந்து  இப்போது  மறுபடியும்  1935வது  வருஷம்  ஜனவரி  N  முதல்  பழயபடி  குடி அரசு  என்னும்  பெயராலேயே  அது  வெளியாக்கப்பட்டு  முன்  நிறுத்தப்பட்டதிலிருந்தே  தொடர்ந்து  9ம்  மாலை  23வது  மலராய்  வெளி  வருகிறது.  ஆதியில்  “”குடி அரசு”  மனித  சமூகத்துக்கு  என்ன  தொண்டு  செய்ய  முன்  வந்ததோ,  அதே  தொண்டை  எப்படிப்பட்ட  கஷ்டமான  காலத்திலும்,  நெருக்கடியான  காலத்திலும்  பின்னடையாமல்  செய்து  வந்திருப்பதோடு  இப்போதும்  அதையே  கடைப் பிடித்து  தன்னாலான  தொண்டாற்ற  துணிவுடன்  முன்  வந்திருக்கிறது. குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

* “தங்கள் சுயநலத்துக்கென்றே சர்க்காருடன் ஒத்துழைக்காமல் ஒத்துழையாமை என்னும் பேரால் அரசின் யந்திரத்திற்கு தொந்தரவு கொடுத்தும் பொதுஜன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் விரோதமாகவும் ஒரு சுயநலக் கூட்டத்தார் சண்டித்தனம் முதலிய தொல்லைகள் விளைவித்து வந்த நெருக்கடியான சமயத்தில் நல்ல ஆட்சியையும் பொதுஜன நன்மையையும் கருதி மனப்பூர்வமாக சர்க்காருடன் ஒத்துழைத்தும் அதனால் விளக்கமறியா பாமர மக்கள் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி வருவதையும் லôயம் செய்யாமல் அதற்காக தொண்டாற்றியும் வந்த தமிழ் மக்களுக்கு சிறிதும் நன்றி விசுவாசம் காட்டாமல் சுயநல புரோகித கூட்டத்தாருக்கு வசப்பட்டு நம்மை அவர்களது பழிவாங்கும் தன்மைக்கு ஆளாக்கி விட்டுக் கொண்டிருக்கும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் நடத்தைக்கு ஆக இம்மகாநாடு வருந்துவதுடன் அவரிடம் இம்மாகாண தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இடமில்லையென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது. இம்மாகாண மக்களின் நன்மையையும் சாந்தியையும் சமாதானத்தையும் உத்தேசித்து மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா மந்திரியை கேட்டுக் கொள்கிறது.”

ஜஸ்டிஸ்  கட்சி  செய்த  “”பாவம்

ஜஸ்டிஸ்  கட்சி  செய்த  “”பாவம்

” ஜஸ்டிஸ்  கட்சியை  பார்ப்பனர்கள்  ஆசை  தீர  வைது  விட்டார்கள்.  இனி  வைவதற்கு  வார்த்தைகளும்,  விஷயங்களும்  கிடைக்காமல்  திண்டாடிக்  கொண்டு  திரியும்  இந்த  நெருக்கடியான  சமயத்தில்  ஜஸ்டிஸ்  கட்சியில்  இருந்து  பிரிந்தவர்களும்  விறட்டி  அடிக்கப்பட்டவர்களுமான  ஆசாமிகள்  இன்று  ஜஸ்டிஸ்  கட்சியை  வைவதற்கு  மூன்று  புதிய  காரணங்கள்  கண்டுபிடித்து  பார்ப்பனர்களுக்கு  காணிக்கையாகக்  கொடுத்திருக்கிறார்கள். அதாவது: கமிஷனர்களைநியமித்தது. தாலூக்காபோர்டுகளை  எடுத்தது. ஜில்லாபோர்டுகளை  இரண்டாகப்  பிரிப்பது. இந்தக்  காரியங்கள்  ஜஸ்டிஸ்  கட்சி  சட்டசபை  அங்கத்தினர்கள்  ஏகமனதாய்  அபிப்பிராயம்  கொடுத்தும்,  பார்ப்பனர்களும்,  பார்ப்பன  தாசர்களும்  தாராளமாய்  ஸ்தானம்  பெற்ற  சட்டசபையின்  மெஜாரிட்டியாரால்  தீர்மானங்கள்  செய்யப்பட்டும்,  பிறகுதான்  அமுலில்  செய்யப்பட்டு  வருகின்றனவே  ஒழிய  கட்சித்  தலைவரின்  சர்வாதிகார  முறையில்  செய்யப்பட்ட  காரியங்கள்  அல்ல.  இவை  எப்படி  இருந்தாலும், முனிசிபாலிட்டி  விஷயத்தில்  அனேக  சேர்மென்கள்  யோக்கியதை களும்,  நிர்வாகங்களும்,  நாணையமாகவும்,  நியாயமாகவும்  இல்லை  என்றும்  சொல்லி  அவர்களது  அயோக்கியத்தனங்களையும்,  நாணையக்  குறைவுகளையும்  ஏதேச்சாதிகாரங்களையும்,  புள்ளி  விவரங்களோடு  காட்டி  வந்ததுடன்  கண்ட்ராக்ட் ...

வரி  குறைப்பும்  சம்பளக்  கூடுதலும்

வரி  குறைப்பும்  சம்பளக்  கூடுதலும்

  சென்ற  வாரம்  தஞ்சை  ஜில்லா  மிராசுதார்கள்  மகாநாடு  கூட்டி  நஞ்சை  பூமி  வரிகளை  100க்கு  50  பாகம்  வீதம்  குறைக்க  வேண்டுமென்று  தீர்மானம்  செய்திருக்கிறார்கள். மகாநாட்டில்  கலந்து  கொண்ட  தோழர்கள்  எல்லோரும்  அதாவது  யார்  யாருடைய  பெயர்கள்  மகாநாட்டு  நடவடிக்கையில்  காணப்பட்டனவோ  அவர்கள்  பெரிதும்  மிராசுதாரர்கள்,  லட்சாதிபதிகள்,  கோடீஸ்வரர்கள்  என்று  சொல்லத்தக்க  பிரபுக்களே  யாவார்கள். இன்னும்  சற்று  விபரமாய்ச்  சொல்ல  வேண்டுமானால்  நிலத்தை  உழுவதும்,  விதை  விதைப்பதும்,  மண்வெட்டி  கொண்டு  வரப்பு  வெட்டி  நீர்  பாய்ச்சுவதும்,  அறுப்பதுமான  காரியங்கள்  செய்வது  மகா  பாவமானது  தோஷமானது என்று  எந்த  எந்தக்  கூட்டத்தாருக்கு  மனுதர்மத்தில்  விதி  விதிக்கப்பட்டிருக்கிறதோ  அந்தக்  கூட்டத்தார்களும்  ஆளைத்  தூக்கி  ஆள்  மேல்  போட்டு  வீண் கலகங்களையும்,  வம்புகளையும்,  வழக்குகளையும் உண்டாக்கி  மக்களின்  சமாதானத்தையும்,  சாந்தியையும்  பாழாக்கி  நோகாமல்  வாழ்ந்து வக்கீல்,  வைத்தியம்,  உத்தியோகம்  முதலிய  பேர்களால்  மாதம்  10000,  20000  போல்  சம்பாதிக்கும்  கூட்டத்தார்களுமான  அய்யர்,  ஆச்சாரியார்,  பந்துலு, ...

ஒழுக்கம்

ஒழுக்கம்

  உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே யல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் “பூச்சாண்டி” “பூச்சாண்டி” என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச்செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும். எப்படி குழந்தைப்பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அதுபோலவேதான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்கம் முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது. உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கிற ஆட்களின் வலிமையையும், அறிவையும்கொண்டு மதிக்கப்படுகிறதே யல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு...

200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை

200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை

  இரண்டு லக்ஷம் பேர் சுயமரியாதைக்காக இந்து மதத்தில் சேரப் போகின்றார்களாம். கோவாவில் உள்ள கத்தோலிக்க கிருஸ்தவக் கோவில்களில் வகுப்பு வேற்றுமையும், ஜாதி வித்தியாசமும் பாராட்டப்படுவதை சகிக்கமாட்டாமல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் பூனாவில் கூடப்போகும் இந்திய கத்தோலிக்கக் கிறிஸ்தவர் மகாநாட்டுக்கு ஒரு தீர்மானம் அனுப்பப் போகிறார்கள்.  அதாவது: “”இப்பொழுது நடமுறையில் இருந்து வரும் வகுப்பு வேற்றுமையில் இரண்டு லக்ஷம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மதத்தின்  மீதும் துவேஷம் ஏற்பட்டிருக்கிறது.  இதை மாற்றாவிட்டால் இரண்டு லக்ஷம் பேரும் இந்து மதத்தில் சேர்ந்து விடுவோம்”  என்று சொல்லப்போகின்றார்களாம்.  இந்து மதத்தில் பார்ப்பனர்கள் எப்படியோ, அப்படியே நமது ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களும் ஆவார்கள். அவர்கள் இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள்.  ஒரு இந்து  இருந்தாலும் போதும் அவனை புழுமாதிரி அரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் என்று எப்படி நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத முறைகளை வைத்து  வாழுகின்றார்களோ அதுபோலவே ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன்...

எழுத்துக்கள்  மாற்றம்

எழுத்துக்கள்  மாற்றம்

  சென்ற  வாரம்  பகுத்தறிவில்  எழுத்தில்  சீர்திருத்தம்  என்று  ஒரு சிறு  உபதலையங்கம்  எழுதி  இருந்ததில்  இவ்வார  முதல்  கொண்டு  நமது  பத்திரிக்கை  பழய  பெயராகிய  குடி அரசு  என்னும்  பெயராலேயே  வெளியிடலாம்  என்று  கருதி  அதில்  t, Ù, à, ùண, ùல, ùள, ùன  என்கின்ற  எழுத்துக்களை  முறையே  ணா  றா  னா  ணை  லை  ளை  னை  என்று  அச்சில்  பிரசுரிக்கப்படும்  என்பதாக  எழுதி  இருந்தோம்.  அந்தப்  படிக்கே  விஷயங்களை  எழுத்துக்  கோர்த்து  இருந்தோம்.  எவ்வளவோ  முயற்சி  எடுத்தும்  குடி அரசுக்கு  இன்று  வரை  போஸ்டல்  உத்திரவு  கிடைக்காததால்  சனிக்கிழமை  இரவு  வரை  தந்தியை  எதிர்பார்த்தும்  கடைசியாக  இவ்வாரம்  பகுத்தறிவு  என்னும்  பெயராலேயே  பிரசுரித்து  அனுப்ப  நேர்ந்தது.  வாசகர்கள்  விஷயத்தைப்  படிக்கும்போது  ணா  றா  னா  என்கின்ற  எழுத்துக்கள்  வரும்  போது  அவற்றை  t, Ù, à  என்ற  உச்சரிப்புப்  போலவும்  ணை  லை  ளை  னை ...

கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  மந்திரிக்கு வேண்டுகோள்

கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  மந்திரிக்கு வேண்டுகோள்

  தலைவரவர்களே! தோழர்களே! நான்* இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்க எழுந்ததில் எனக்கு உற்சாகமில்லை. மிகவும் சங்கடத்துடன் முன் வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சி நம் பழங்கால ஆட்சியைவிட மேலானது என்று எண்ணுபவர்களில் நான் ஒருவன். பிரிட்டிஷார் உலகில் உள்ள மற்ற மக்களைவிட யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்பதை நான் உலகம் சுற்றிப்பார்த்துப் பிரிட்டிஷார் வாழும் இங்கிலாந்து முதலிய நாடுகளில் கிராமங்கள் தோறும் சுற்றிப்பார்த்து நேரில் அறிந்தவன். இந்தியா நாடானது இந்தியர்களால் ஆளப்பட முடியாமல் அன்னிய நாட்டார்களால் தான் ஆளப்பட வேண்டும் என்கின்ற நிலைமை நிரந்தரமாக ஏற்பட்டால் நான் பிரிட்டிஷாருக்குத்தான் ஓட்டுக் கொடுப்பேன். ஏன்? மற்ற நாட்டார்களையும் அவர்களது ராஜரீகத்தையும் நான் அறிவேன். ராமராஜ்யம், சேர, சோழ, பாண்டியன், நாயக்கர் ராஜ்யம் ஆகிய கதைகளையும் புராணங்களையும் அவர்களது ராஜரீக முறைகளையும் பற்றி சிறிதாவது உண்மையை உணர்ந்திருக்கிறேன்.   ஏகாதிபத்தியத்து விரோதமல்ல   ஆதலால் இத்தீர்மானம் பிரிட்டிஷ் ராஜ்யபாரத்துக்கு விரோதமாக நான் இப்போது கொண்டு வந்ததாக நீங்கள் கருதாதீர்கள்....

மத வெறி

மத வெறி

  உலகில் மதங்கள் என்பவைகள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தியவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்கதரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரச்சாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்துபோய்விடுமே என்கின்ற பயம் உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதி முதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை. சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு...

சனாதனப்  பார்ப்பனர்  மகாநாடு

சனாதனப்  பார்ப்பனர்  மகாநாடு

  சென்ற வாரம் தஞ்சையில் சனாதனப் பார்ப்பனர்கள் மகாநாடு  ஒன்று கூட்டப்பட்டு அதில் அடியில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. “”சனாதன  தர்மத்தை  நிலைபெறச்  செய்யத்தக்க  சுதேசி  கைத்தொழில்களை  ஆதரிக்க  வேண்டும்.  சனாதன  தர்மத்தை  பாதுகாக்க  ஒரு  நிதி  திரட்ட  வேண்டும். குருகுலங்கள்  ஆரம்பித்து  புராணங்களை  போதிக்க  வேண்டும்.  பார்ப்பனர்கள்  சமுதாயப்  பழக்க  வழக்கங்களுக்கும்,  சாஸ்திரங்களுக்கும்  விரோதமில்லாமல்  நடக்க  வேண்டும். பிராமணர்களுக்கு  சாகுபடிக்காக  சர்க்காரார்  நிலங்கள்  வழங்க  வேண்டும். பிராமணர்களிடையே ஏற்பட்டுள்ள வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  வேண்டும். பிராமணர்களுக்கு  வேலையில்லாத்  திண்டாட்டத்தைப்  போக்க  மற்ற  ஜாதியார்கள்  அடியில்  கண்ட  முறைகளால் ஏற்பாடு  செய்ய  வேண்டும். (அ)       திண்ணைப்  பள்ளிக்  கூடங்கள்  வைக்க  வேண்டும். (ஆ)      அறுவடையின்போது  பிராமணர்களுக்கு  தானியங்கள்  கொடுக்க  வேண்டும். (இ)       விசேஷ  தினங்களில்  பிராமணர்களுக்குச்  சன்மானங்கள்  வழங்க  வேண்டும். (ஈ)        கிராமங்களில்  பிராமணர்களைக்  கொண்டு  புராணக்  காலச்÷க்ஷபங்கள்  செய்விக்கச்  செய்ய  வேண்டும். (உ)       பிராமணர்களை  ஆயுர்வேத  வைத்தியர்களாக  தர்ப்பித்து ...

வருஷப்  பிறப்பு

வருஷப்  பிறப்பு

  இங்கிலீஷ்  புது  வருஷம்  பிறந்தது  என்று  மக்கள்  அதை  ஒரு  பண்டிகை  போல்  கொண்டாடினார்கள்.  “”புதிய  வருஷம்  உங்களுக்கு  ஒரு  சந்தோஷகரமான  வருஷமாய்  கழிய  வேண்டும்”  என்று  ஒருவருக்கொருவர்  வாழ்த்துச்  சொல்லிக்  கொண்டார்கள். தமிழ்  வருஷப்  பிரப்புக்கும்  கூட  சில  இடங்களில்  இம்மாதிரி  வாழ்த்துச்  சொல்லிக்  கொள்வதும்,  சன்மானம்  வழங்கிக்  கொள்வதும்  உண்டு. இவை  ஒருவருக்கொருவர்  கடிதம்  எழுதிக்  கொள்ளும்போது  தலைப்பில்  மகா„„ஸ்ரீ  என்று போடுவதும்,  மேல்  விலாசம்  எழுதும்  போதும்  ஒருவருக்கொருவர்  மகா„  என்று  போடுவதும்  எப்படி  ஒரு  பத்ததியாகவும்,  வழக்கமாகவும்  இருந்து  வருகின்றதோ  அதுபோல்  தான்  புதிய  வருஷப்  பிறப்பு  வாழ்த்தும்  இருந்து  வருகின்றது. அனுபவத்தில்  எவ்வித  வாழ்த்தும்  மக்களுக்கு  யாதொரு  பயனும்  அளிப்பதில்லை.  அவனவனுடைய  நிலைமையில்  இவ்  வாழ்த்துக்களால்  எவ்வித  மாறுதலும்  ஏற்படுவதுமில்லை. ஆகவே  இவ்வாழ்த்துக்களையும்,  புது  வருடப்  பிறப்புக்  கொண்டாட்டங் களையும்  பலவித  மூடப்  பழக்க  வழக்கங்களில்  ஒன்றாகத்தான்  கருத  வேண்டுமே  யொழிய  மற்றபடி ...

“விடுதலை” நாளேடாகியது!

“விடுதலை” நாளேடாகியது!

    1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி போட்டியிட்டு சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்ற உறுதிமொழியைக் கேட்டது. சில மாதங்கள் அமைச்சரவை அமைக்க மறுத்து நாடகமாடியது. ஆளுநர் உறுதிமொழி ஏதும் தராத நிலையிலேயே காங்கிரஸ் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைச்சரவை அமைக்க முன் வந்தது. எனவே இதற்கு “சரணாகதி” அமைச்சரவை என்று பெரியார் பெயர் சூட்டினார். சரணாகதி அமைச்சரவை நடத்திய பார்ப்பன ஆட்சியை எதிர்த்து பெரியார் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் போர் முரசு கொட்டிய காலம் இது. சரணாகதி அமைச்சரவையையும், காங்கிரசையும் – காங்கிரசிடம் அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்ட பார்ப்பனரல்லாதார்களையும் அனல் பறக்கும் விவாதங்களால் அம்பலப்படுத்தி, காங்கிரசின் சூழ்ச்சிக்குப் பலியாகி விடாதீர்கள் என்று பார்ப்பனரல்லாத மக்களை எச்சரிக்கும் பெரியாரின் தலையங்கங்களும் எழுத்துக்களுமே இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. பெரியார் தனது இளமைக்கால வரலாற்றை தன் வரலாறாகப் பதிவு செய்துள்ள முக்கியத்துவமிக்க...

காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்

காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்

1937 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜüன் முடிய “குடி அரசு” ஏட்டில் இடம் பெற்றிருந்த பெரியார் எழுத்து பேச்சுகளைக் கொண்டுள்ள இந்த முதல் தொகுதி 424 பக்கங்களைக் கொண்டுள்ளது. தலையங்கங்கள் உரைகளாக 117 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகள் பதிவாகியுள்ளன. “குடி அரசு” வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த இதே காலகட்டத்தில் “பகுத்தறிவு” மாத இதழாகவும், “விடுதலை” வாரம் இரு முறை இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்காக உருவாக்கிய அரசியல் சட்டத்தின் கீழ் காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நீதிக்கட்சி தோல்வியை சந்தித்த காலகட்டம்; இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான பெரியார் எழுத்து – பேச்சுகள் – இந்த பின்னணியில் சுழலுவதால், பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த புதிய அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான சுருக்கமான ஓர் அறிமுகத்தை முன் வைக்கிறோம். 1919 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த இரட்டை ஆட்சி முறை...

“விடுதலை’ ஏடு வெளிவரத் தொடங்கியது

“விடுதலை’ ஏடு வெளிவரத் தொடங்கியது

  “”வாழ்துக்களையும், புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங்களையும் பலவித மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகத்தான் கருத வேண்டுமே யொழிய மற்றபடி இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் இதை நாம் கொண்டாடவில்லை என்பதோடு புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்த்தவும் போவதில்லை” என்று புத்தாண்டு வாழ்த்து மறுப்புடன் இத்தொகுதி தொடங்குகிறது.  6.1.1935 “பகுத்தறிவு’ வார ஏட்டில் தான் முதன்முதலாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகமாகிறது. இடையில் ஓராண்டு காலம் நிறுத்தப்பட்டிருந்த “குடி அரசு’ மீண்டும், 13.1.1935 முதல் பயணத்தைத் தொடருகிறது. “குடி அரசு’க்கு இது 11 ஆவது வருடம். வார ஏடான “பகுத்தறிவு’ நிறுத்தப்பட்டு, அறிவியல் பரப்பிடும் மாத ஏடாக மே மாதம் முதல் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் “பகுத்தறிவு’ வெளியிட்ட இலக்கியச் செறிவுள்ள எட்டு “படைப்புகள்’ இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சமதர்மத்தை வலியுறுத்தியும், பொருளாதாரம் பற்றியும் பெரியார் பல தலையங்கங்களைத் தீட்டியுள்ளார். விருதுநகரில் கூடிய நீதிக்கட்சியின்...

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அசூயை                          பொறாமை,  அவதூறு அத்தியந்தம்                               மிகவும் அந்தர்                               தலைகீழாய்  பாயும்  செயல் ஆத்மீகம்                       தன்வினை  பற்றி  வரும்  துன்பம் ஆஸ்பதம்                     இடம்,  பற்றுக்கோடு இத்யாதி                         இவை  போன்ற உதார  குணம்                            பெருங்கொடைத்  தன்மை உபமாக                           இரண்டாவதாக உற்பவித்தல்                             தோன்றுதல்,  பிறப்பித்தல் ஒரு  அம்மன் காசு  அளவு                  புதுக்கோட்டை  அரசர்கால  நாணய  வகை 320  அம்மன்  காசு = 1  ரூபாய் கண்டனை                    மறுப்பு கல்லுக்கும்                 இரத்தினத்துக்கும் காயம்                               உடல் குண்டுணி                     கலகமூட்டுகை சம்சயம்                          அய்யம்,  சந்தேகம் சரீராப்பியாசம்                         உடற்பயிற்சி சவுத்தல்                        விலைபடாமலிருத்தல் சாய்கால்                        செல்வாக்கு சாவோலை                 இழவோலை  (சாவை  அறிவிக்கும்  மடல்) சுங்கான்                          கப்பல்  திருப்பும்  கருவி தர்பித்தல்                     நிலைபெறச்  செய்தல்,  பிரதிட்டை  செய்தல்,  பயிற்சி  கொடுத்தல். திருஷ்டாந்தம்                         எடுத்துக்காட்டு தியங்க                            கலங்க திரேகப்பிரயாசை                  உடலுழைப்பு துரபிமானம்                                வீண்செருக்கு,  வெறுப்பு தூஷணம்                      பழிப்பு நாதனற்று                    தலைவர்  இல்லாமல் நிர்த்தாரணம்                             நிலையிடுகை,  அழிதல்,  சிதைதல் பச்சகானாக்கள்                        கூத்தாட்டுச்  சிறார்கள் பஞ்சேந்திரியம்                       மெய், ...

எழுத்தில்  சீர்திருத்தம்

எழுத்தில்  சீர்திருத்தம்

  தமிழ்பாஷை  எழுத்துக்கள்  வெகு  காலமாகவே  எவ்வித  மாறுதலும்  இல்லாமல்  இருந்து  வருகின்றன. உலகில்  உள்ள  பாஷைகள்  பெரிதும்  சப்தம்  ,  குறி,  வடிவம்,  எழுத்துக்கள்  குறைப்பு,  அவசியமான  எழுத்துக்கள்  சேர்ப்பு  ஆகிய  காரியங்களால்  மாறுதல்  அடைந்து  கொண்டே  வருகின்றன. கால  வர்த்தமானங்களுக்கு  ஏற்ப  பாஷைகளும்,  சப்தங்களும்,  உச்சரிப்புகளும்,  வடிவங்களும்  மாறுவது  இயல்பே  யாகும். வார்த்தைகள்  கருத்தை  வெளியிடுவதற்கு  ஏற்பட்டவைகள்  என்பது  போலவே  எழுத்துக்கள்  சப்தத்தை  உணர்த்த    ஏற்பட்டவைகளேயாகும். ஆனால்  நம்  பண்டிதர்களுக்கு  தாராளமாய்  அறிவைச்  செலுத்த  இடமில்லாமல்  மதம்  பழக்க  வழக்கம்   ஆகியவைகள்  குறுக்கிட்டு  விட்டதால்  எழுத்துக்களுக்கும்,  அதன்  கோடுகளுக்கும்,  வடிவங்களுக்கும்  தத்துவார்த்தம்  கற்பிக்க வேண்டிய  அவசிய மேற்பட்டு  எழுத்துக்களையே  தெய்வமாகவும்  தெய்வ  வடிவமாகவும்  கருத வேண்டிய  நிலை  நம்  நாட்டில்  ஏற்பட்டு  விட்டது. தற்காலம்  எத்தனையோ  புதிய  வார்த்தைகள்  வந்து  நமது  தமிழ்  பாஷையில்  புகுந்து  கொண்டன.  அவைகளை  இனி  விலக்க முடியவே  முடியாது.  விலக்குவதும்  புத்திசாலித்தனமாகாது.  அப்பேர்ப்பட்ட ...

தோழர்  சிவலிங்கம்  மரணம்

தோழர்  சிவலிங்கம்  மரணம்

  நமது நண்பரும்,  சுயமரியாதை  இயக்க  பிரமுகருமான  ஜலகண்டாபுரம்  தோழர்  சி.கு.சிவலிங்கம்  அவர்கள்   221234ந்  தேதி  தமது  58  வது  வயதில்  காலஞ்  சென்றாரென்ற  செய்தி  கேட்டதும்  திடுக்கிட்டுப் போனோம். தோழர்  சிவலிங்கம்  அவர்கள்  வயது  சென்றவராயிருந்தாலும்  அங்குள்ள  சுயமரியாதை  தோழர்கட்கு  ஊக்கமளித்து  சுயமரியாதை  பிரசாரம்  செய்து  வந்தார். இவர்  ஜலகண்டாபுரம்  யூனியன்  போர்டிற்கு  ஆறாண்டு  தலைவராகவிருந்து  பல  அரிய  வேலைகள் செய்து  வந்தார்.  இப்படிப்பட்ட  பெரியார்  காலஞ்  சென்றதற்கு  வருந்துவதுடன்  நமது  அனுதாபத்தை  அவரது  குடும்பத்தாருக்கும்  அவருடைய  நண்பர்கட்கும்  தெரிவித்துக் கொள்ளுகிறோம். பகுத்தறிவு  இரங்கல் செய்தி  30.12.1934

குடி  அரசு

குடி  அரசு

அடுத்த  வாரம்  அதாவது  ஜனவரி  மாதம்  6 ந் தேதி  வெளியாகும்  பத்திரிகை   “குடி  அரசு’  என்னும்  பேரால்  (அது  நின்று  போன  9வது மாலை 22வது  மலரிலிருந்து 23வது  மலராக) வெளியிடலாம்  என்று  கருதி  இருக்கிறோம்.  அதற்கு  வேண்டிய  ஏற்பாடுகள் அவசரமாய்  நடைபெறுகின்றன. தபால் அதிகாரிகள் அனுமதி அவசரமாய்  எதிர்பார்க்கப்படுகிறது. பகுத்தறிவு  அறிவிப்பு  30.12.1934

பார்ப்பன  விஷமம்

பார்ப்பன  விஷமம்

  ஜஸ்டிஸ்  கட்சி மீது மக்களுக்கு  நம்பிக்கை  இல்லையா? இந்திய  சட்டசபைத் தேர்தலில்  பார்ப்பனர்கள் காங்கிரஸ்,  காந்தி  என்கின்ற  பேர்களால்  செய்யப்பட்ட  ஏமாற்றுப் பிரசாரத்தின்  பயனாயும்,  இந்திய  சட்டசபை  ஸ்தானத்தைப்  பற்றி   ஜஸ்டிஸ்  கக்ஷியார்  தக்கபடி  கவலைப்படாத  காரணத்தாலும்  பார்ப்பனர்கள்  தாங்கள்  வெற்றி  பெற்று விட்டோம்   என்கின்ற ஆணவத்தால்  தலைகால்  தெரியாமல்  குதிக்கிறார்கள். தோழர்  சத்தியமூர்த்தி  ஐயர்  அவர்கள் மேடையில்  வாயைத் திறந்தால் யாரையும்  அவன்,இவன், அயோக்கியன் என்று இழி தன்மையாய்ப்  பேசுவதும், ஹோம்  மெம்பரை  ராஜீனாமா  செய்ய  செய்ய வேண்டு மென்றும்,  லாமெம்பரை  ராஜீனாமாச்  செய்யச்  செய்ய  வேண்டுமென்றும்  கவர்னரை  உத்திரவு  போடச்  சொல்லுவதும், சட்டசபைகளைக்  கலைக்க வேண்டுமென்பதும் தோழர்  ராஜகோபாலாச்சாரி கவர்னராகவும்,  தான்  சீப் செகரட்டரியாகவும்  (பிரதானக்   காரியதரிசியாகவும்)  வரப் போகிறோம்  என்பதுமான தலை  கிருகிருத்த  பேச்சுகளாகவே  பேசி  வருகிறார். இதற்கும் சில பார்ப்பனக்  கூலிகள்  பின்  பாட்டு  பாடுவதும் கை தாளம்  போடுவதுமான  மானங்கெட்ட  செய்கைகளுக்கு  உட்பட்டு ...

சுயமரியாதை  மகாநாடுகள்

சுயமரியாதை  மகாநாடுகள்

  சுயமரியாதை  மகாநாடுகள்  தமிழ்நாட்டில்  ஜில்லாக்கள்,  தாலூக்காகள்  தோறும்  வாரம் தவறாமல்  அடுத்துஅடுத்து நடந்து வந்தது  நேயர்கள்  அறிந்ததாகும். தோழர் ஈ.வெ. ராமசாமி  ராஜத் துவேஷக் குற்றத்திற்காக  சிறைசென்ற  பின்  சுயமரியாதை  சங்க  நிர்வாகக் கமிட்டியார்  கூடி மகாநாடுகள்  கூட்டக்கூடாது  என்று கண்டிப்பான  உத்திரவு  போட்டதான  தீர்மானம்  நிறைவேற்றியதையே  காரணமாய் வைத்து,  5, 6  மாத காலமாக  மகாநாடுகளே  எங்கும் நடக்காமல்  போய்விட்டது  என்பது  ஒரு காரணமாய்  இருந்தாலும்  அந்தத் தீர்மானம்  திருச்சி நிர்வாக  சபைக்  கூட்டத்தில்  ஓரளவு  தளர்த்தப்பட்டு  இருந்தும்  வேறு  பல காரணங்களால் தீர்மானம் தளர்த்தப்பட்டதை  வெளியிடாமலும்,  பல இடங்களில்  இருந்து மகாநாடு  நடத்தவேண்டும்  என்று முயற்சித்த  முயற்சிகளையும்  உற்சாகப் படுத்தாமல்  இருந்து வந்திருக்கிறது.  அதாவது  சுமார் நான்கு   மாதங்களுக்கு  முன்  பகுத்தறிவு   3வது  மலரின்  தலையங்கமொன்றில்  “”நாம்  எப்படி நடந்து  கொள்ள  வேண்டும்”  என்கின்ற  தலைப்பு கொண்ட  தலையங்கத்தில்  “”சமீபத்தில்  நடைபெறப் போகும்  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடும், ...

ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப்  பத்திரிகைகளும்

ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

  விருதுநகரில்  தலைவர்கள்  மகாநாடு ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்ட சபைத்  தேர்தலில்  தோல்விஅடைந்து  விட்டது. அதற்குக் காரணம்  இருவகைப்படும். ஒன்று  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  எல்லா இந்திய அரசியல்  கிளர்ச்சியில்  விசேஷ  கவனம் செலுத்த  அவசியமில்லை.  அது  செலுத்தவும் முடியாது.  ஏனெனில்  ஜஸ்டிஸ் கட்சிக்கு  எல்லா  இந்திய  ஸ்தாபனம் என்பதாக ஒரு ஸ்தாபனம்   இல்லை என்பதோடு  ஜஸ்டிஸ்  கட்சி  ஏற்படுத்தப் பட்டதற்குக் காரணமே  தென் இந்திய  பார்ப்பனர்களின் கொடுமையைத்  தாங்க மாட்டாமல்  அதிலிருந்து தப்பி  ஒருவாறு  விடுதலை  பெற  வேண்டிய அவசியமேயாகும். ஆனால்  அதன்  எதிரிகளாகிய  பார்ப்பனர்கள்  அக்கட்சியை  ஒழிக்க  அரசியல்  போர்வையை  போத்திக்  கொண்டு  அதற்குள் இருந்து எதிர்த்து  வந்ததால்,  ஜஸ்டிஸ்  கட்சியும்  தனது லட்சியத்திற்கு  அரசியல் சம்மந்தமும்  வைத்துக்  கொள்ள  வேண்டியதாயிற்று  என்றாலும்  பார்ப்பனர்களுடைய  அரசியல் வேஷம்  எல்லா இந்தியாவைப்  பொருத்ததாகவும்,  ஜஸ்டிஸ்  கட்சியாருடைய அரசியல் சம்பந்தம் சென்னை மாகாணத்தை மாத்திரம் பொருத்ததாகவும் இருந்ததால் அரசியலில்   பார்ப்பனர்களோடு  சரியாய்ப் ...

விருதுநகரில் காலித்தனம்

விருதுநகரில் காலித்தனம்

  காங்கிரஸ்  பிரமுகர்கள்  விருதுநகர்  சென்றிருந்த சமயம்  ஊர்வலத்தில்  செருப்பு  வீசி  எறியப்பட்டதாகவும்,  பொதுக்  கூட்டத்தில்  கற்கள்  வீசி  எறியப்பட்டதாகவும் தமிழ்நாடு,  ஜஸ்டிஸ்  முதலிய பத்திரிக்கைகளில்  காணப்பட்டது. இது உண்மையாய்  இருக்குமானால்  அதை ஒரு பக்காகாலித்தனம்  என்றும், இதற்கு ஆதரவாய்  இருந்த விருதுநகர்  தோழர்களுக்கு  இது  ஒரு  பெரிய  அவமானகரமான  காரியமென்றும் வலிமையாய்க்  கூறுகிறோம். நம் நாட்டு அரசியல்  வாழ்க்கை  என்பது எவ்வளவு  கேவல மானதாக  இருந்தாலும்  அது  பெரிதும்  வகுப்பு  போராட்டத்தன்மையை  உட்கருத்தாய்க்  கொண்டு  வெளிப்படையான  போட்டி  முறையில்  நடந்து வருகின்றது  என்பதை  எவரும்  மறுக்க  முடியாது. இந்நிலையில்  இருபுறமும்  போட்டியில்  கலந்து கொள்ள  எவருக்கும்  உரிமை இருக்கின்றது  என்பதை  நாம் மறுக்க வரவில்லை. அப்போட்டிகளில்  பல  சூட்சிகள்,  பொய்,  புரட்டுகள்  உபகருவிகளாய்  பயன்படுத்தப்பட்டு  வருவதும்  சகஜமான  காரியமாய் இருந்து  வருகிறது.  கால நிலையில்  இவைகள் எல்லாம்  அனுமதிக்கத்தக்கதாக  இருந்து வந்தாலும்  காலித்தனங்கள்  என்பவைகளைக்  கண்டிக்காமல்  இருக்க முடியவில்லை.  கூட்டத்தில் ...

திருச்சி  நகரத்தின்  பெருமை

திருச்சி  நகரத்தின்  பெருமை

  திருச்சிக்காரர்கள்  தாங்களே  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  என்று  ஜம்பம்  அடித்துக் கொள்வதோடு  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  தாங்களே  கோட்டை  காவலர்கள்  என்றும்  பெருமை பேசிக் கொண்டு  அடிக்கடி  அக்கட்சியின் மீது  அதிகாரம்  செய்யும் விஷயத்திலும்  சிறிதும்  பின்வாங்குவதில்லை  என்பதோடு  எல்லோருக்கும்  முன்னணியில்  வந்தும்  நின்று கொள்ளுவார்கள். ஆனால்  காரியத்திலோ  என்றால்  லொட்டையையே தான்  காண  முடிகின்றது. நாம்  இப்படிச் சொல்வதற்குக்  கூட  கோபித்துக் கொண்டு  நமக்கும்  புத்தி  சொல்ல  வந்துவிடுவார்கள்.  அதனால்  உள்ள நிலைமையை  மறைத்துவிடமுடியாது. புதிய  சீர்திருத்தம்  ஏற்பட்ட காலம் முதல்  ஒரு  ஆசாமியையாவது  திருச்சி  தொகுதியானது  இந்திய சட்டசபைக்கு  நிறுத்தியதும் கிடையாது,  அனுப்பியதும் கிடையாது  என்ற  பெருமை  திருச்சிக்கு  உண்டு  என்று  சொல்வதற்கு  யாரும் கோபித்துக்  கொள்ள மாட்டார்கள். அது மாத்திரமல்லாமல்  இந்த  10  வருஷ  காலமாய் சென்னை  சட்டசபைக்கு  கூட ஜஸ்டிஸ்  கட்சியின்  பேரால்  ஒருவரையாவது  அனுப்ப  அவர்களுக்கு  முடியவில்லை  என்று  சொல்வதற்கும்  கோபித்துக் கொள்ளமாட்டார்கள்  என்றே நினைக்கிறோம். ...

ஆசிரியர்கள்  மகாநாடு

ஆசிரியர்கள்  மகாநாடு

  பிள்ளைகளைப்பற்றிய  கவலை  இல்லை எங்கு  பார்த்தாலும்  ஆசிரியர்கள்  மகாநாடுகள்  கூட்டப்படுவதும்,  ஆசிரியர்களின்  சம்பளங்கள் போதாது  என்று  தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுவதும்,  மந்திரிகள் முதலிய  பெரிய  சம்பளக்காரர்களும்,  செல்வவான்களும்  ஆசிரியர்களை  வாழ்த்தி  ஆசீர்வதிப்பதுமாகவே  இருந்து  வருகின்றதே  ஒழிய, பிள்ளைகள்  சம்பளம்   கொடுக்கச் சக்தி இல்லாமல்  பள்ளிக்குப் போக  முடியாமல்  கல்விப் பட்டினியாய்  இருந்து  தற்குறிகளாகி  100க்கு  92  பேர்  எழுத்து  வாசனை  அற்ற குருடர்களாக  இருந்து இந்திய நாட்டை  “”அலங்கரித்து”க்  கொண்டிருக்கின்றார்களே  என்ற கவலை  ஒருவரிடத்திலாவது  இருந்ததாகவோ,  இதற்காக  ஒரு  மகாநாடாவது  கூட்டப்பட்டதாகவோ,  ஒரு  மந்திரியாவது,  ஒரு  பிரபுவாவது,  ஒரு  ஆச்சாரிய  ஸ்வாமிகளாவது  கவலைப்பட்டதாகவோ  தெரியவேயில்லை.  இந்தக் காலம்  செல்வவான்கள்  காலமானதால்  பணம் சம்பாதிப்பதைப்  பற்றியே  உலக நிகழ்ச்சிகள்  நடைபெறுவதும்,  செலவிடவேண்டியவர்கள்  கஷ்டத்தைப் பற்றி  கவலைப்படாமல்  இருக்கவும்  ஆன காரியம்  நடக்கின்றது. இதற்காக  யார்  என்ன  செய்யக்கூடும்? “”எல்லாம்  பகவான்  செயல்”  அல்லவா? பகுத்தறிவு  செய்தி விளக்கம்  23.12.1934

ராமராஜ்யம்  திரும்பி  வருகிறது 

ராமராஜ்யம்  திரும்பி  வருகிறது 

  பலாத்கார  உடன்கட்டை வடநாட்டில்  தாமோ  என்ற  தாலூகாவைச்  சேர்ந்த  நோஹ்டோ  என்ற கிராமத்தில்  ஒரு புருஷன்  காயலாவாக  இருந்து  இறந்து போனார்.  அவரது  மனைவியை  உடன்கட்டை  ஏறும்படி  அவரின் உறவினர்கள் கட்டாயப்படுத்தி  நெறுப்புக்குள்  பிடித்து  தள்ளிவிட்டார்களாம்.  மனைவி தப்பி  ஓட  எவ்வளவோ  முயற்சித்தும்  பயன்  இல்லாமல்  சாம்பலாகிவிட்டதாக  அசோசியேட்  பிரஸ்  கூறுகிறது. இந்து மதத்தின்  பெருமையும்,  ராமராஜியத்தின்  அருமையும்  சுயராஜியத்துக்கு  எவ்வளவு  தகுதி  உடையது  என்பதை  இந்தியர்கள்  உணர்வார்களாக. பகுத்தறிவு  செய்தி விமர்சனம்  23.12.1934

கான் அப்துல்  கபூர்கான்

கான் அப்துல்  கபூர்கான்

  எல்லைப்புறக் காந்தி  என்று பட்டம் சூட்டப்பட்ட  தோழர் அப்துல்கபூர்கான்  அவர்கள்  ராஜத்துவேஷ  குற்றத்துக்காக   இரண்டு வருஷம்  தண்டிக்கப்பட்டுவிட்டார். தான்  செய்த காரியத்துக்காகவோ,  பேசிய  பேச்சுக்காகவோ  வருத்தம்  தெரிவிப்பதன் மூலம் மன்னிப்புக் கேட்டும் அரசாங்கம் மனமிரங்காமல் இரண்டு வருஷம் தண்டித்துவிட்டது. வெள்ளை அறிக்கையையும், பார்லிமெண்டு கூட்டுக் கமிட்டி அறிக்கையையும்  நிராகரிக்கிறது  என்கின்ற  காங்கிரஸ்  திட்டத்தில்  அரசாங்கத்தை மன்னிப்புக் கேட்டுக் கொள்வது  என்பதும்  ஒரு பிரிவு  போல் காணப்படுகின்றது.  ஐயோ  பாவம்  காங்கிரசே!   நீ  இன்னமும்  என்ன கதிக்கு  ஆளாகப்  போகின்றனையோ!! உனது  வீரமே  வீரம்!!! பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  23.12.1934

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சியைப் பற்றி  பார்ப்பனர்கள் குறை  கூறி வருவதையும்,  அதை  “”வெட்டி  500  கஜ  ஆழத்தில்  புதைத்துவிட  வேண்டு”மென்று  தோழர்கள்  சத்தியமூர்த்தி,  ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள்  சொல்லுவதையும் நமது பார்ப்பனரல்லாத  மூடப் பாமர  ஜனங்கள்  நம்பிவிடுகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல்  பார்ப்பனரல்லாதாரிலேயே படித்த  பகுத்தறிவுள்ள  மக்கள் என்பவர்களும்  கூட  அப்பார்ப்பனர்களுடன்  கூடிக் கொண்டு  குலத்துரோகிகளாய்  நடித்து  வருவதைப் பார்த்து  வருகிறோம். பார்ப்பனரல்லாதார்  இயக்கம்  ஏற்பட்டு சுமார்  15  வருஷ  காலமே ஆயிருந்தாலும்  கூட  அது  ஏற்பட்ட  பிறகு  இந்த நாட்டுக்கு  100க்கு  97  பேர்களாய்  உள்ள  பார்ப்பனரல்லாதார்  சமூகத்துக்கும்,  சிறப்பாக  தாழ்த்தப்பட்ட  சமூகத்துக்கும்  எவ்வளவு  பயன் அளித்து  வந்திருக்கின்றது  என்பதை உணர்ந்தால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும், அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும்  கூலிகளுடையவும், குலத்துரோகிகளுடையவும்  யோக்கியதையும்  சிறிதாவது விளங்காமல் போகாது. இதற்குச்  சமீபத்தில் நடந்த ஒரு  விஷயத்தை  சின்ன  உதாரணமாகக்  காட்ட   ஆசைப்படுகின்றோம். அதாவது  இவ்வருஷம்  போலீஸ்  சப்இன்ஸ்பெக்டர்  உத்தியோகத்துக்கு  87  பேர்கள்  சர்க்காருக்கு  தேவை ...

தற்கால  அரசியல்  நிலைமை

தற்கால  அரசியல்  நிலைமை

  தொழிலாள  சோதரர்களின்  ÷க்ஷமத்திற்கு  இவ்வூரில்  மாதம்  ஒரு முறை  பூர்ண  ஓய்வு  ஏற்படுத்தி  இருப்பது  போற்றத்தக்கதாகும்.  இவ்விழாவைக்  கண்டு  நான்  பெரிதும்  சந்தோஷம்  கொண்டேன்.  அவர்களுடைய  நாளில்  அவர்களைப்  பற்றியே  பேச  நான்  விரும்பி  வந்தேன்.  ஆனால்  இங்கு  வந்த  பின்னர்  விருதுநகர்  வாசிகள்  “தற்கால  அரசியல்  நிலைமை’  ஜஸ்டிஸ்  கட்சி  ஆகியவைகளைப்  பற்றியும்  எடுத்துக்  கூறும்படி  கேட்பதால்  அதைக்கூற  வேண்டியவனாய்  இருக்கிறேன்.  இந்த  சமயத்தில்  இவைகள்  எவ்வளவு  முக்கியமானவைகளாக  இருக்கின்றதோ,  அவ்வளவு  குழப்பமான  விஷயங்களாகவும்  இருக்கின்றன. “அரசியல்  என்பது  மக்களை  ஏமாற்றும்  இழிவான  சூட்சி’ அரசியலின்  பெயரால்  இன்று  உலகில்  எங்கும்  திருட்டு,  புரட்டு,  கொள்ளை,  கொலை,  பாமர  மக்களை  ஏமாற்றுதல்  முதலாகிய  இழிகாரியங்கள்  எல்லாம்  நடக்கின்றன.  கலகங்கள்  கூட  சிலவிடங்களில்  நடக்கின்றன.  எப்படி  என்றால்  அரசியல்  சம்பந்தமான  பிரசார  கூட்டங்களில்  கலகம்  ஏற்பட்டு  விடுகின்றது.  மதத்தின்  பெயரால்  þ  திருட்டு,  புரட்டு  சகலமும்  நடந்த  காலத்தில்  மக்கள் ...

மோதிரம்  மாற்றுவது  மூடநம்பிக்கை

மோதிரம்  மாற்றுவது  மூடநம்பிக்கை

  லண்டன்  நகரத்தில்  சமீபத்தில்  நடந்த  இரண்டொரு  கல்யாணங்களில்  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  கூட  மூடநம்பிக்கையில்  சேர்ந்தது  என்று  கருதி  மணவினையின்  போது  மணமகன்  மோதிரம்  மாற்றிக்  கொள்ள  சம்மதிக்க  மாட்டேன்  என்று  சொல்லி  விட்டாராம். “”நாங்கள்  ஒருவரை  ஒருவர்  வாழ்க்கைத்  துணைவர்களாக  ஏற்றுக்  கொண்டோம்  என்று  சொல்லி  இருவரும்  கையொப்பமிட்டு  பிறகு  மோதிரம்  மாற்றிக்  கொள்வது  எதற்காக”  என்று  மணமக்கள்  கல்யாணப்  பதிவு  ரிஜிஸ்டராரை  கேட்டார்கள்.  அதன்  மேல்  கல்யாணப்பதிவு  ரிஜிஸ்டராரும்  பாதிரியும்  ஒன்றும்  பேசாமல்  கல்யாணத்தை  பதிந்து  கொண்டார்களாம்.  இந்த  விஷயம்  சென்ற  வாரத்திய  கிராணிக்கல்  வாரப்பத்திரிகையில்  காணப்படுவதுடன்  தம்பதிகளின்  உருவப்  படங்களும்  அதில்  பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  நமது  நாட்டில்  நடத்தும்  சுயமரியாதைத்  திருமணங்களில்  தாலி  கட்டவில்லையே  என்று  அழுவாரும்,  விளக்குப்  பற்ற  வைக்கவில்லையே  என்று அழுவாரும்,  சாணி  உருண்டை  பிடித்து  வைத்து  தேங்காய்  பழம்  உடைக்கவில்லையே  என்று  அழுவாரும்,  பார்ப்பான்  காலில்  விழுந்து  அம்மிக்கல்லில்  முட்டிக்  கொள்ளவில்லையே ...

நிர்வாக  சபையை  ஏன்  கூட்டவில்லை

நிர்வாக  சபையை  ஏன்  கூட்டவில்லை

  தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  கவுன்சில்  பார்ட்டி  மீட்டிங்கில்  கொண்டுவரப்பட்ட  நம்பிக்கை  இல்லாத்  தீர்மான  விஷயமாய்  “”முதலில்  நிர்வாக  சபைக்  கூட்டம்  கூட்டி  அதில்  ஒரு  முடிவு  செய்து  கொண்டு  பின்பு  கவுன்சில்  பார்ட்டி  கூட்டம்  கூட்டலாம்”  என்று  அநேக  தந்திகளும்,  கடிதங்களும்  அனுப்பப்பட்டன.  அவைகள்  எதையும்  கவனிக்காமல்  கவுன்சில்  பார்ட்டியில்  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டு  விட்டது”  என்பதாகச்  சிலர்  குறை  கூறுகிறார்கள்.  இதற்கு  சமாதானம்  சொல்ல  கட்சி  கடமைப்பட்டிருக்கிறது. அச்சமாதானம்  என்னவென்றால்  ஜஸ்டிஸ்  கட்சி  நிருவாக  சபைக்கு  அக்கிராசனர்  குமாரராஜா  முத்தய்ய  செட்டியார்  அவர்கள்  அல்ல  என்பதையும்  கவுன்சில்  பார்ட்டி  (சட்டசபைக்  கட்சி  கொரடா)  அறிவிப்புதான்  சேர்மென்  என்பதையும்  ஞாபகப்படுத்திக்  கொள்ள  வேண்டுமாய்  கோருகிறோம். ஏனெனில்  தோழர்  குமாரராஜா  அவர்கள்  கவுன்சில்  பார்ட்டி  கொரடா  என்கின்ற  முறையில்  தான்  நிர்வாக  சபைக்கு  தலைமை  வகிக்கின்றார்.  ஆதலால்  நிர்வாக  சபையில்  தோழர்  முத்தைய  செட்டியார் ...

ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்களுக்கு  ஒரே  வார்த்தை

ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்களுக்கு  ஒரே  வார்த்தை

  ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்டசபை  தேர்தல்  அடைந்த  தோல்வியால்  “”குதிரை  கீழே  தள்ளியது  மல்லாமல்  குளியும்  பரித்தது”  என்று  சொல்லும்  பழமொழி  போல்  தோல்வி  அடைந்ததோடு  கட்சிக்கே  ஆட்டம்  வரும்  நிலைமையையும்  ஏற்படுத்திக்  கொண்டது. அதாவது  கட்சிக்கு  உள்ளுக்குள்ளாகவே  மகத்தான  எதிர்ப்பு  ஏற்பட்டு  விட்டது.  தக்கதொரு  பணக்காரரை  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதால்  பணக்காரர்களை  நம்பி  வாழும்  தொண்டர்களையும்  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதாகத்தான்  அருத்தம். “”கொள்கை”  “”கொள்கை”  என்று  மாத்திரம்  கூப்பாடு  போடுவது  பயனற்ற  பேச்சாகும்.  பணமும்,  பிரசாரமும்,  தந்திரமும்  உள்ளவர்கள்  தான்  வெற்றி  பெருவார்களே  தவிர  வெறும்  கொள்கைகளே  வெற்றி  யளித்து  விடாது. ஆகவே  இனி  நடக்கப்போகும்  காரியத்துக்கு  நல்லதொரு  கொள்கையும்,  அதற்குத்  தகுந்த  பணமும்,  பிரசாரமும்  இல்லாமல்  ராஜா  சர்  அண்ணாமலையாரையும்  குமாரராஜாவையும்  விரட்டியடித்து  விட்ட  பெருமையை  நினைத்து  மகிழ்ந்து  கொண்டே  இருப்போமானால்  அழிப்பாரில்லாமல்  கட்சி  அழிந்து  போகும்  என்பது  உறுதி. இன்று  சென்னை  சட்டசபைத்  தேர்தலுக்கு  காங்கிரஸ்காரர்களுடன் ...