Tagged: மேதகு பிரபாகரன்

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...

0

மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை நிறுவியதற்காக காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார் ‘முழக்கம்’ உமாபதி முறையான சிகிச்சை தர நீதிமன்றம் உத்தரவு!

‘முழக்கம் உமாபதி’க்கு முறையான சிகிச்சைகளை அளித்து அறிக்கை தர வேண்டும் என்று அரசு மருத்துவமனை தலைவருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர் திராவிடர் விடுதலைக் கழகச் செயல் வீரர் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் நவம்பர் 26 அன்று கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நவ.28ஆம் தேதி வழக்கு தொடர்ந்து, அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தினர். நீதிபதி வி. இராமசுப்பிரமணியன், வழக்கை விசாரணைக்கு அனுமதித்தார். கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு தமிழக அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. உடனடி நடவடிக்கையாக உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றி, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடி பதவி நீக்கம் செய்ய...