Tagged: மணக்குப்பம்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மணக்குப்பம். இக்கிராமத்தின் இளைஞர்கள் தாங்களாகவே ‘பெரியார் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களைத் திரட்டி, பெரியார் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தனர். பின்னர், ‘இளம் திராவிடர்’ என்ற பெயரில் இயங்கும் இணையதளக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகத் தோழர் செந்தில் வழியாக பேரவையை வழி நடத்திய ஆனந்த் பெரியார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டார். மணக்குப்பம் கிராமத்தில் இளைஞர் களைத் திரட்டி, ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, ‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைத் தொடங்க முடிவு செய்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு உதவிட விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கரு. அசுரன், முழக்கம் உமாபதி, எப்.டி.எல். செந்தில் ஆகியோர் முன்கூட்டியே மணக்குப்பம் சென்றனர். கடும் மழை காரணமாக நிகழ்ச்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. மணக்குப்பம் தோழர்கள் கிராமத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கூட்டத்தின்...