Tagged: சேரன்மாதேவி

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார். உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம். “வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார். சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள்...