Tagged: கிருஷ்ண தேவராயர்

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி) கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530) 1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். 2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன். 3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான். 4) படையினால்...

அர்த்தமற்ற “தெனாலிராமன்” திரைப்பட எதிர்ப்பு

அர்த்தமற்ற “தெனாலிராமன்” திரைப்பட எதிர்ப்பு

கருத்து மாறுபாடுகள் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தால் அதை வெளியிடவே கூடாது என்ற போராட் டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்து மதம் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தில் வெளிவரும் நூல்கள் இந்தியாவில் வெளியிடவே கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் மிரட்டுகிறார்கள். உடனே நூல் திரும்பப் பெற்று விடுகிறது. ‘இராமன்-கிருஷ்ணன் ஒரு புதிர்’ என்று அம்பேத்கர் எழுதிய நூலை திரும்பப் பெறக் கூறி மராட்டியத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கலவரத்தில் இறங்கினர். ஆனால், பெரும்பான்மை மக்களை “சூத்திரர்கள்”, “அடிமை கள்”, “பிராமணரின் வைப்பாட்டிப் பிள்ளைகள்” என்று கேவலமாக இழிவு செய்யும் மனுசாஸ்திரங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரலை எந்த மானமுள்ள தமிழனும் எழுப்பத் தயாராக இல்லை. கோயில் கருவறைக்குள் கடவுளிடம் நெருங்கி, கடவுளுக்கு அர்ச்சனை செய்யக்கூடிய உரிமை பிறப்பால் இழிவான ‘சூத்திரர்-பஞ்சமர்க்கு’ கிடையாது என்று சட்டப்படி உறுதி செய்யப்பட் டுள்ளதைப் பற்றி எந்த “மற”த் தமிழனுக்கும் மானம் பீறிட்டுக் கிளம்புவதில்லை. அதே கோயிலுக்குள் அதே...