முடிந்து  போன  விஷயமாம்

 

கும்பகோணத்தில்  தேர்தல் கொண்டாட்டம்  கொண்டாட  வந்த  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்களை  கூட்டத்தில்  ஒரு  கேள்வி  கேட்டார்கள்.

அதாவது  “”இந்திய  சட்டசபை  மெம்பர்  ஆகிவிட்டதற்காக  இவ்வளவு  பிரமாதமான  வெற்றிக் கொண்டாட்டம்  கொண்டாடு கின்றீர்களே!  நீங்கள்  எல்லோரும்  அங்கு  போய்  என்ன  செய்யப் போகிறீர்கள்?”  என்று  கேட்டார்கள்.  அதற்க  ராஜகோபாலாச்சாரியார்  ஒரே  வார்த்தையில்  பதில்  சொல்லி  விட்டார்.

அதாவது  “”இது  முடிந்து போன  விஷயம்.  எப்படியோ ஒரு  விதத்தில் நாங்கள்  ஜெயித்து  விட்டோமாகையால்  முடிந்து  போன  விஷயத்துக்கு  இனி  கேள்வி  கேட்கவோ  பதிலளிக்கவோ இடமில்லை”  என்று  சொல்லிவிட்டாராம்.  எந்த  விதத்திலோ  காரியம்  கைகூடின  பிறகு  வெற்றி பெற்றவர்கள் சொல்ல  வேண்டிய  பதில்  இதுதான்.  அவர்களது  தைரியத்தைக்  கண்டு  நாம்   அதிசயிக்காமல்  இருக்க முடியவில்லை.

பகுத்தறிவு  செய்தி விளக்கக் குறிப்பு  02.12.1934

You may also like...