மரணம்  அநுதாபம்

 

நமது  இயக்க  அபிமானியான  கோட்டையூர்  தோழர்  ராம.  அள.  சிதம்பரம்  அவர்களின்  புதல்வன்  திடீரென்று  இறந்த  செய்திகேட்டு  திடுக்கிட்டோம்.  இச்செய்தி  கேட்ட  சில  நாட்களுக்குள்  அவரது  துணைவியாரும்  உயிர்  துறந்தார்  என்ற  செய்தி  கேட்க  பெரிதும்  வருந்துகிறோம்.  “”உலகில்  தோன்றி  மறைவது  இயற்கை”  என்றாலும்,  இத்தகைய  கஷ்ட  நஷ்டத்தைக்  கேட்க  மனம்  வருந்தாமலிருக்க  முடியவில்லை.  உலக  இயற்கையை யுணர்ந்த  தோழர்  ராம.அள. சிதம்பரம்  அவர்கட்கு  நாம்  ஒன்றும்  அதிகம்  கூறத்  தேவையில்லை.  நமது  அனுதாபம்  மட்டும்  அவருக்கு  உரித்தாகுக!

புரட்சி  இரங்கல் செய்தி  27.05.1934

You may also like...