“ஊஹஞஐகூஹடு”                                                 (“மூலதனம்”)

பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்° அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (ஊயயீவையட)  கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்° அவர்கள் 1485 பு°தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார்.

ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.

கொஞ்ச காலத்துக்கு முன் மா°கோவில் காரல் மார்க்° இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும்போது மேல்கண்ட கட்டிட அரை போல் மா°கோவில் ஒரு அரை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485 புத்தகங் களையும் வைத்து அதை ஒரு புத்தகசாலை மாதிரி செய்து யாவரும் வந்து படிப்பதற்கு அனுகூலமாகச் செய்து வைத்திருக்கிறார்கள்.  இந்தக் கட்டிடத் துக்கு “காரல் மார்க்° மனை” (மார்க்° ஹவு°) என்று பெயரிடப்பட்டிருக் கிறது.  இன்றும் யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம்.

குடி அரசு –  செய்தி விளக்கக்குறிப்பு – 23.07.1933

 

 

 

You may also like...