நாம் பொறுப்பாளியல்ல

கதர் இயக்கம் நாட்டின் பொருளாதார நிலைமைக்கு போதியதாகாது என்பதோடு அது வெற்றி பெறுவதும் மிகக் கஷ்டமானது என்கிற அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், கதர் கட்டக்கூடாது என்பதோ கதரைக் கொளுத்த வேண்டும் என்பதோ சுயமரியாதை இயக்கக் கொள்கையில் பட்டதல்ல என்பதையும், திருச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் யாரோ கதரைக் கொளுத்தினதாகச் சொல்லப்படும் சங்கதி உண்மை யாயிருந்தால் நாம் அதற்குப் பொறுப்பாளியல்ல வென்றும் அச்செய்கையை வெறுக்கின்றோம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
( ப – ர் )

குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 10.02.1929

You may also like...

Leave a Reply