ஒரு சம்பாஷணை

கருப்பண்ணன் :- என்ன சுப்பண்ணா! இந்த பார்ப்பனர் மாத்திரம்
சின்ன பையன்களுக்கெல்லாம் கலியாணம் செய்து விடுகிறார்களே.
அதென்ன சங்கதி?
சுப்பண்ணன் :- ஓ! இது உனக்குத் தெரியாதா? இவர்களுக்கு பிச்சை வாங்கி பிழைப்பதுதானே வேலை. ஆதலால் நம்முடைய பெரிய
வர்கள் கலியாண மானவனுக்கு ஒரு அணா, கலியாணமாகாதவனுக்கு காலணா கொடுக்கிற வழக்கம். ஆதலால் சின்னப் பையனுக்கும் சின்னப் பெண்ணுக்கும் ஒரு அணா கிடைக்கட்டுமென்று கலியாணம் செய்து
விடுகிறார்கள்.

கருப்பண்ணன் :- அப்படியா! இதற்காகத்தானா இவ்வளவு பெரிய
அனியாயம். பிச்சை கொடுப்பவர்களுக்கு எப்படி கலியாணம்
ஆனதும் ஆகாததும் தெரியும்.
சுப்பண்ணன் :- கலியாணமான சின்னப் பையன்கள் வடக் கயிறு போல பூணூலை மொத்தமாகப் போட்டிருப்பார்கள். கோவணம் வைத்து வேஷ்டி கட்டிக் கொள்ளுவார்கள். அந்தச் சிறு பெண்களும் கோவணம் போட்டு சீலை கட்டிக் கொள்ளுவார்கள். தாலியை நன்றாய் வெளியில்
காட்டிக் கொள்ளுவார்கள்.

கருப்பண்ணன் :- சரி,சரி. இப்பொழுது எனக்கு நன்றாய் விளங்கிற்று.
இந்த பிச்சைக் காசுக்காக எத்தனை பார்ப்பனப் பெண் தாலியருப்பது.
அனியாயம், அனியாயம்.
குடி அரசு – உரையாடல் – 05.09.1926

You may also like...

Leave a Reply