நமது துணை ஆசிரியர் விலகுகிறார்

“குடி அரசு”க்குத் துணை ஆசிரியராயிருந்து வரும் திருவாளர் மணவை ரெ. திருமலைசாமி செப்டெம்பர் மாதம் 1-ம் தேதி முதல் நமது ஆசிரியர் குழாத்திலிருந்து விலகுகிறார். இனி அவர் ஐப்பசி மாதம் முதல் திருசிரபுரத்திலிருந்து அரசியல், இலக்கியம், சமத்துவம் ஆகிய துறைகளில் நின்று “சிவாஜி” என்ற பெயரை மருவி ஏழை மக்களின் தோழனாய் வெளி வரப் போகும் வாரப் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை ஏற்றுக் கொள்ளுவார்.
இற்றைவரை “குடி அரசு” காரியாலயமிட்டு அவருக்குக் கடிதம் முதலியன எழுதி வந்த அன்பர்கள் இனி திரு. மணவை. ரெ. திருமலைசாமி, காஜாப்பேட்டை, திருச்சிராப்பள்ளி என்ற விலாசத்திற்கு எழுதுமாறு தெரி வித்துக் கொள்ளுகிறோம்.
( ப.ர் )

குடி அரசு – செய்திக் குறிப்பு – 29.08.1926

You may also like...

Leave a Reply