பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

“பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு”

இன்றைய வாட்ஸ் அப்(12.08.2018)செய்தி

அரசியல் பதவி வேட்டை லாபங்களுக்காக துணை போகாமல் எந்த பதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பெரியாரின் சமுதாய தொண்டை மக்களுக்கு ஆற்றப் போகிறோம் என்று சொந்த செலவில், சொந்த உழைப்பில் சமூகத்தில் கல்வி உரிமை, சுயமரியாதைக்காக பகுத்தறிவுக்காக பாடுபடுகின்ற பெரியார் தொண்டர்களை காவல் துறை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் இப்படி பொய் வழக்குகளை போடுகிறது என்பது நமக்கு புரியவில்லை.

அதுவும் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தமிழ் இன கொள்கைகளை மக்களிடையே கொண்டு சொல்வதற்கும், பறிக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை, தமிழ்நாட்டை மதவெறி பூமியாக மாற்றுகிற ஆபத்துகளை எதிர்த்தும், போராடி கொண்டிருக்கிற, களமாடி கொண்டிருக்கிற ஒரு சமுதாய புரட்சி இயக்கத்தை சார்ந்த தொண்டர்களை ஏன் காவல்துறை சமூக விரோதிகளாக பார்க்கிறது. பொய் வழக்குகளை புணைகிறது என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டியிருக்கிறது.

ஒன்றை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்பட கூடாது…”தமிழ்நாட்டில் பெரியார் சிலைக்கு மாலை போடுவதே குற்றமென்று சென்னை மாநகர காவல்துறை வழக்கு போட்டு, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை இப்பொழுது தேடி கொண்டிருக்கிறது. அவர்கள் செய்த குற்றம் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட வந்தார்களாம்”.அதற்கு காவல்துறையில் அனுமதியை பெறவில்லையாம். இப்படி அவசர நிலையில் கூட இல்லாத ஒரு கொடுமை ஏன் தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

“திருமுருகன் காந்தி மீது சைதாப்பேட்டை மேஜிஸ்ட்ரேட் ரீமாண்ட் செய்ய மறுத்துவிட்டது என்ற காரணத்தினால் அவர் மீது இராயப்பேட்டையில் இருக்கிற ஒரு வழக்கை பயன்படுத்தி சிறையிலே அடைத்திருக்கிறார்கள். இராயப்பேட்டையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்னவென்று சொன்னால் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை போட வந்தார் என்பது, அவர் மாலை போடும் போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உடனிருந்தது”. எனவே, திருமுருகன் காந்தி மீது பெரியார் சிலைக்கு மாலை போட வந்தார் என்ற வழக்கில் கைது செய்ய வேண்டும் என்பதற்காக திராவிடர் விடுதலைக் கழக தோழர்களையும் அதில் சேர்த்து காவல்துறை இப்போது அவர்களை தேடி கொண்டிருப்பது என்பது மிக மிக வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு முன் இந்த கருத்தை நாங்கள் வைக்கிறோம். தமிழ்நாட்டில் சமுதாய இயக்கத்திற்காக, சமுதாய மக்களின் மாற்றத்திற்காக போராடி கொண்டிருக்கிற பெரியாரிய இயக்கங்களை தமிழ்நாட்டில் அண்ணா, பெரியார் பெயரை சொல்லி கொண்டு ஆட்சி நடத்துகின்ற ஒரு ஆட்சி இப்படி அலைக்கழிப்பதும், பொய் வழக்கு போடுவதும் நியாயம் தானா?

மக்களின் மனசாட்சி தொட்டு இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “அவசர நிலை காலத்தில் இல்லாத கொடுமை கூட இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது”.

சிந்திக்க வேண்டும்.!

நன்றி…வணக்கம்…

– தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...