பாரத தேசத்துக்கு சரித்திர ஆதாரம் உண்டா?

இந்தியாவை ‘பாரத தேசம்’ என்றும் இந்திய அரசியலை இராம ராஜ்ஜியம் என்றும் காங்கிரஸ்காரர்கள் (ஆரிய-பார்ப்பனர்) சொல்லும் காரணம் என்ன? இவற்றிலிருக்கும் உண்மை என்ன? என்பவை சிந்திக்கப்படத்தக்கவையாகும். நிலப்பரப்புக்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் காட்ட வேண்டுமானால், பூகோளத்திலிருந்து கையாளப்பட வேண்டும். அதுபோலவே, பண்டைய அரசியலுக்கு  எடுத்துக்காட்டும் ஆதாரமும் காட்டப்பட வேண்டுமானால், சரித்திரத்தில் இருந்து கையாளப்பட வேண்டும்.

பெரியார், விடுதலை – 12.6.1933

உண்மையாக இந்த நாட்டை ஆண்ட அரசர்கள், உண்மை சரித்திரப்படி எத்தனையோ பேர்கள் இருக்கும் போது – ஆளாததும் அறிவுக்கும், உண்மைக்கும், உரிமைக்கும் மாறுபாடானதுமான ஒரு பெயரை மக்கள் அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறோம்.  அதிலும் இந்தப் பெயர்களை, போலித் தன்மைகளை வைத்துக் கொண்ட அதன் மூலம் உண்மையான, சரித்திர ஆதாரமான பெயரைக் கொண்டு ஒரு நாட்டை அதாவது திராவிட நாட்டை திராவிட நாடு என்றழைத்து, அது உரிமைபெற வேண்டுமென்று  முயற்சிப்பவர்கள் கூட்டத்தில் புகுந்து கொண்டு, அக்கூட்டத்தில் குழப்பம், காலித்தனம் விளைவிக்க, ‘பாரத நாட்டுக்கு ஜே’ பாரத மாதாவுக்கு  ஜே! என்று கூப்பாடு போடுவது எந்த விதத்தில் யோக்கியமும், மானமும், உண்மையுமான காரியமாகும் என்று கேட்கிறோம்

பெரியார், விடுதலை 12.06.1946

பெரியார் முழக்கம் 14092023

You may also like...