ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பெரியார்முழக்கம் 07092023

You may also like...