திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.

காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக வசந்தி நன்றியுரையாற்றினார்.

நிகழ்விற்கு திருப்பூர் மாவட்ட அமைப் பாளர் சங்கீதா, மாவட்ட அமைப்பாளர் அகிலன்,  தனபால், மாதவன், அய்யப்பன், ராசிபுரம் திலீபன், சிரஞ்சீவி, ஈரோடு பிரபு, அய்யா சுந்தரம், யோகேஷ்வரி முத்துலட்சுமி, மணிமேகலை, சாரதி, சாலினி, கோத்தகிரி பாலு, திருப்பூர் யாழினி, யாழிசை மற்றும் கழகத் தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர் மதியம் பிரியாணியுடன் விருந்து மற்றும் தேனீர் ஏற்பாடும்  செய்யப்பட் டிருந்தது.

நிகழ்வை மாநகர அமைப்பாளர்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

பெரியார் முழக்கம் 13012022 இதழ்

You may also like...