திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

மறைந்த திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் பெரியார் தொண்டர் ப.பிர கலாதன் நினைவேந்தல் கூட்டம், 21.11.2021 அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு குருவரெட்டி யூர், தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் நாத்திகஜோதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கு.வேல் முருகன் (அம்மா பேட்டை ஒன்றிய செய லாளர்), காவை ஈஸ்வரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ப. ரத்தின சாமி (மாநில அமைப்பு செயலாளர்), சு. துரைசாமி (மாநில பொருளாளர்), ப. சத்தியமூர்த்தி (திராவிடர் கழகம்), வேணுகோபால் (மாவட்ட செயலாளர்), அரங்க-இராசகோபால் (வழக்குரைஞர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்ட தலைவர்), பெரியநாயகம் (அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் திமுக.), வெ.கிருஷ்ணமூர்த்தி (வழக்குரைஞர்- பாமக), வேங்கை பொன்னுசாமி (தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்), விஸ்வநாதன் (முன்னாள் ராணுவ வீரர் குருவை) ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.

கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

இறுதியாக , பிரகலாதன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை நிகழ்த்தினார். ந.கிருஷ்ணமூர்த்தி (திக), கூட்டத்திற்கு நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு, சூரியகுமார் (சேலம் மாவட்ட தலைவர்), சூலூர் பன்னீர்செல்வம், கோபி நிவாசு, மேட்டூர் மார்ட்டின், ஈரோடு பாலு, மணிகண்டன் திக, தட்சிணா மணிமாறன் திக, பாலசுப்பிரமணி திக, பிரகலாதன் துணைவியார் மாதம்மாள், சகோதரிகள் ஈஸ்வரி, ஜீவா, ஜீவரசன், ஈரோடு பெரியசாமி திமுக, குருவை ராமன் திலீபன், சோ.மகேசுவரி, உமா திலீபன், இசைப்பிரியா ஆகியோர் உட்பட ஈரோடு, நாமக்கல் பகுதி கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் குருவை பகுதி சார்பாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 25112021 இதழ்

You may also like...