இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழ்நிலையால், தலைமைக் குழு மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் ‘Team Link’ வாயிலாகவே நடைபெற்றது.  30.06.2020 அன்று காலை 10:30 மணியளவில் தலைமைக் குழு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்,  12.07.2020 –  ஈரோடு தெற்கு மாவட்டம், 14.07.2020 –   சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங்கள், 19.07.2020 –  திருப்பூர் மற்றும் கோவை, 21.07.2020 –  தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி, 23.07.2020 –  வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 26.07.2020 –  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், 28.07.2020 –   திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 29.07.2020 –  தஞ்சாவூர், நாகை, 30.07.202 –  மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், 31.07.2020 –  நாமக்கல், ஈரோடு வடக்கு மாவட்டம், 02.08.2020 –   தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி, 09.08.2020 –  தென் சென்னை, வடசென்னை ஆகிய தேதிகளில் கழகத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாவட்ட கலந்துரையாடல்கள் இணையம் வழியாக நடைபெற்றன.  கலந்துரையாடல்கள் அனைத்தும் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

பெரியார் முழக்கம் 08102020 இதழ்

You may also like...