ஒரு சந்தேகம் ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?

ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதி யருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போக லாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டா தார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களை யும் (டைனாமெட்டு) வெடி குண்டு போட்டு உடைத் தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவு ளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்த வர்களா? என்று அறிய விரும்புகின்றோம்.

குடி அரசு – கட்டுரை – 27.11.1927

You may also like...

Leave a Reply