மன்னார் குடியில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஆர்ப்பாட்டம் !

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி

19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகள் கொண்டப்படுகிறது. அரசு ஆணைகளை செயல்படுத்தவேண்டிய காவல்துறை உள்ளிட்ட அனைத்துதுறைகளும் கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல் மதவழிபாட்டு முறைகளை பின்பற்றுவது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்து அரசு இயந்திரம் இயங்குவது போல் உள்ளது. இதுபோல் நடப்பதை மதசார்பாற்ற நாடு என்பதற்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், அரசு ஆணைகளுக்கு எதிராகவும் உள்ளது என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திராவிடர் விடுதலைக்கழக ஒன்றிய செயலாளர்கள் நீடா முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் பன்னீர்செல்வம், மன்னை ரமேஷ், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், மன்னை நகர செயலாளர் சசிக்குமார், தஞ்சை பெரியார்சித்தன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

12118905_1660904400860120_6388254659775483630_n 12108117_1660904460860114_6746707076590907827_n

 

You may also like...