பட்டேல்

தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) தோழர் பட்டேல் அவர்களை அழைத்து வந்து அவர் பேரால் பணம் வசூலித்து அதைத் தாங்கள் கைப்பற்றி காலிகளுக்கும் கூலிகளுக்கும் கொடுத்து காலித்தனம் செய்வதின் மூலம் தேர்தலில் வெற்றி பெறவே தோழர் பட்டேலை அழைத்து வரப் போகிறார்கள்.

தமிழ் மக்கள் இக்காரியம் கைகூடாதபடி செய்யக் கடமைப் பட்டவர்களாவார்கள்.

ஆதலால் ஊர்கள் தோறும் பட்டேல் பகிஷ்காரக் கமிட்டி ஏற்படுத்தி அதன்மூலம் அவரது வரவை தமிழ் மக்கள் பஹிஷ்கரிக்கிறார்கள் என்று காட்டவேண்டியதுடன் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்காமலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதும் நியாயமாகும்.

கமிட்டி விபரம் தெரிந்தவுடன் துண்டுப் பிரசுரங்கள் முதலியன அனுப்பிக் கொடுக்கப்படும்.

குடி அரசு வேண்டுகோள் 29.11.1936

You may also like...