கட்சித் துரோகம்

ஜஸ்டிஸ்கட்சியின் உப்பைத் தின்றவர்களில் பெரும்பாலோருக்கு நன்றி விசுவாசம் அறியும் இயந்திரம் அழிந்துபோவதாகத் தெரிகிறது.

கடலூர் ஜில்லாபோர்ட் பிரசிடெண்டாய் இருந்த தோழர் சீதாராம ரெட்டியார் அவர்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஜஸ்டிஸ் உப்பைத் தின்றே ஊறியதாகும். அவர் தனது தகுதிக்கு பலபாகம் மேற்பட்ட பயன்களை அக்கட்சி மூலம் அடைந்தார். கடசியாக ஆயிரக்கணக்கான சம்பளமுள்ள உத்தியோகமும் 4, 5 Mங்களாக ஏன்? 6, 7 வருஷங்களாக அனுபவித்து வந்தார். அப்படிப்பட்டவர் உத்தியோகம் வாய்தா தீர்ந்த எட்டாம் நாளே ஜஸ்டிஸ்கட்சிக்கு எதிர்க்கட்சியில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாகி பட்டத்தையும் விட துணிந்து ஜஸ்டிஸ்கட்சியை ஒழிக்க முயற்சித்து மடிகட்டி நிற்கிறார். காங்கிரசில் காங்கிரசுக்கு விரோதமாய் இருந்தவர்களை சேர்க்கக் கூடாது, அபேட்சகர்களாய் நிறுத்தக்கூடாது என்று “ஐவர்” அறிக்கை இருந்தும் நேற்றுவரை காங்கிரசை வைதுகொண்டு அதன் எதிர்க்கட்சியில் இருந்து வந்த ஒரு உத்தமரை அதுவும் தான் உப்புத் தின்று வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வந்த ஒரு “பெரியாரை” எப்படிச் சேர்த்துக்கொண்டார்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் யோக்கியதையும் மாஜி ராவ்பகதூர் ஜஸ்டிஸ் தூண்கள் யோக்கியதையும் விளங்கும்.

குடி அரசு கட்டுரை 29.11.1936

 

You may also like...