Category: பெரியார் முழக்கம் 2012

நீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்!

நீதி கேட்கும் 21 ஆண்டுகாலப் போராட்டம்!

21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை நேரில் சந்தித்தார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளர் கோபு மோகன். நீதி கேட்டு போராடி வரும் இந்த மூன்று தமிழர்களின் மன உணர்வுகளை நேர்மையாக மனித உரிமைப் பார்வையில் பதிவு செய்திருக்கிறார், செய்தியாளர். ‘இந்தியன் எக்ஸ்பிரசின்’ புதுடில்லி வாரப் பதிப்பில் (பிப்.12-18) வெளியான இந்தக் கட்டுரையின் தமிழாக்கம். அந்த சிறை அதிகாரியின் சிறையில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கிறார்கள். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடை தருகிறார்கள். பிறகு அவர்களுக்கு உடல் அடையாளங்கள் பரிசோதிக்கப் படுகின்றன. சில படிவங்களில் கைரேகையை பதிவு செய்கிறார்கள். சிறைக் கதவு திறக்கப்படுகிறது. அவர்கள் இப்போது சுதந்திரமாக வெளியே போகலாம். இந்தக் காட்சிகளை ஒவ்வொரு நாளும் அதே அறையில் எங்கள் முன்னால் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் இந்த இளைஞன், இப்படி சுதந்திரமாக விடுதலைப் பெற்று வெளியேறு வோரை  பார்த்துக் கொண்டே இருக்கிறார்....

புதுவையில்  சாதி மறுப்பு மண விழா

புதுவையில் சாதி மறுப்பு மண விழா

புதுவை அரியாங்குப்பம் ‘தீர்க்க சுமங்கலி’ திருமண நிலையத்தில் 22.1.2012 காலை 8 மணியளவில் டாக்டர் ம.பா. மதிவாணன், எம்.டி. (த.பாண்டுரங்கன்-பா.மல்லிகா இணையரின் மகன்) – டாக்டர் சு.சிவரஞ்சனி, எம்.எஸ்., (கே.சுப்ரமணியன் – சு.ஜெயா இணையரின் மகள்) ஆகியோர் சாதி மறுப்பு மணவிழா கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிறப்புடன் நடந்தது. புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் வரவேற்றுப் பேசினார். பெரியார் முழக்கம் 16022012 இதழ்

அறிவார்ந்த காதலை வரவேற்போம்

அறிவார்ந்த காதலை வரவேற்போம்

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடி காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும்? திடீரெனறு ஒருவரை ஒருவர் முடிச்சுப் போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.” – பெரியார் (‘விடுதலை’ 24.5.1947) விடலைப் பருவ உணர்ச்சிக் காதல் – வாழ்க்கைக்குப் பயன் சேர்க்காது. அறிவார்ந்த சாதிகளைக் கடந்த புரிந்துணர்வு காதலை வரவேற்போம். அறிவியலுக்கு எதிரான ‘சோதிடப் பொருத்தம்’ வாழ்க்கைப் பயணத்தில் ஒற்றுமையை உருவாக்கி விடாது என்பதற்கு குடும்பநல நீதிமன்றங்களில் குவியும் விவாக ரத்து வழக்குகளே சான்று; அத்தனை திருமணங்களும் நாள்...

தலையங்கம் வகுப்பறையில் வன்மம்!

தலையங்கம் வகுப்பறையில் வன்மம்!

சென்னையில் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பள்ளி ஆசிரியரை குத்திக் கொலை செய்த செய்தி, நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக காட்சி ஊடகங்களும் அச்சுஊடகங்களும் விரிவான விவாதங்களை நடத்தி வருகின்றன. மாணவர்களை வன்முறைக்குத் தூண்டும் சமூகச் சூழல், அவர்கள் மீது திரைப்படங்கள், இணையதளங்கள் திணிக்கும் வன்முறை கலாச்சாரம், குடும்பங்களில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளி, மனப்பாடம் – மதிப்பெண் போட்டிகளை ஊக்குவிக்கும் கல்வி முறை, ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் என்று பல்வேறு தளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. சமூகம் சார்ந்த இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவைதான். இப்படி ஏதேனும் கடுமையாக உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் நேரும்போது மட்டும், இத்தகைய விவாதங்கள் தலைதூக்கி, பிறகு படிப்படியாக மறைந்து போய் விடுவது வாடிக்கையாகிவிட்டது என்பதே உண்மை. முதலில் இப்படி ஒரு நிகழ்வை முன் வைத்து அதையே பொதுவான சமூகப் போக்கு என்ற...

கடவுள் மறுப்பு சிந்தனைக்கு கோயில் கட்டலாமா?

கடவுள் மறுப்பு சிந்தனைக்கு கோயில் கட்டலாமா?

கடவுள் – மதங்களை முற்றாக மறுக்கும் கோட்பாடு நாத்திகம். அது அறிவின் எல்லை. உலகம் முழுதும் கடவுள், மத நம்பிக்கைகளின் இறுக்கம் தளரத் தொடங்கி வருவதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பின்னணியில் நாத்திக சிந்தனையை மறுப்புகளின் தொகுப்பாகவே மாற்றி விடாமல், ஆக்கத்தின் சிந்தனையாக மாற்றிட வேண்டும் என்ற சிந்தனை, கடவுள் மறுப்பாளர் களால் முன் வைக்கப்படுகிறது. அப்படி ஆக்கபூர்வ நாத்திக சிந்தனையை எப்படி முன்னெடுப்பது என்பதில் நாத்திக சிந்தனையாளர்களிடையே உரத்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. பிரிட்டனில் மிகவும் புகழ் பெற்ற நாத்திக சிந்தனையாளர்கள் அலெய்ன் டேபோட்டன் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆகியோர். லண்டனில் சர்ச்சுகள் அதிகம் நிறைந்த, பரபரப்பான நிதிப் பரிமாற்றங்கள் நடக்கும் ‘ஸ்கொயர் மைல் நகரம்’ எனுமிடத்தில் 1 மில்லியன் டாலர் செலவில் 151 அடி உயரத்தில் ‘நாத்திக கோபுரம்’ ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார் அலெய்ன் டெ போட்டன். இதை நாத்திகர்களுக்கான கோயில் என்றே இவர் கூறுகிறார். இந்த கோபுரத்தில் 300...

பணி நீக்கம் ரத்து;  கோரிக்கை வெற்றி!

பணி நீக்கம் ரத்து; கோரிக்கை வெற்றி!

பார்ப்பன துணை வேந்தர் மீனா, முனைவர் மணிமேகலையை பணி நீக்கம் செய்து பிறப்பித்த ஆணையை தமிழக ஆளுநர் பல்கலை வேந்தர் என்ற முறையில் ரத்து செய்துள்ளார். கழகம் போராட்டம் நடத்திய அன்றே இந்த வெற்றிச் செய்தி கிடைத்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிகையில் நேரடியாக கோரிக்கை மனுவை வழங்கினர். பல்வேறு தரப்புகளிலிருந்து தரப்பட்ட அழுத்தங்களின் காரணமாக கோரிக்கை வெற்றிப் பெற்றுள்ளது. பெரியார் முழக்கம் 16022012 இதழ்

பாரதிதாசன் பல்கலை கழகத் துணைவேந்தரின் பார்ப்பனப் போக்கைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலை கழகத் துணைவேந்தரின் பார்ப்பனப் போக்கைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் மணிமேகலையை  தற்காலிக நீக்கம் செய்ததைக் கண்டித்தும், தற்காலிக நீக்க ஆணையை ரத்து செய்யக் கோரியும், பாரதிதாசன் உயராய்வு மையம், பெரியார் உயராய்வு மையம் ஆகியவற்றை முடக்க முயற்சி செய்ததைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி புகைவண்டி சந்திப்பு எதிரே பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் எஸ்.எஸ். முத்து தலைமையில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார்ப்பன அம்மையாரான துணைவேந்தர் மீனா அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து செயல்படுத்திவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். பெரியார் தி.க மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய...

இராயப்பேட்டையில் எழுச்சியுடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு-தமிழர் திருநாள்

இராயப்பேட்டையில் எழுச்சியுடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு-தமிழர் திருநாள்

சென்னையில் கழகக் கோட்டையான இராயப்பேட்டையில் வழக்கம்போல் தமிழர் திருநாள் பொங்கல் விழா பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 13.1.2012 அன்று வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் எழில் குலுங்க அமைக்கப் பெற்ற மிகப் பெரும் மேடையில் வீரமங்கை செங்கொடி பறையுடன் நிற்கும் படம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதே பொங்கல் விழா மேடையில் தனது பறை முழக்கத்தை நடத்தியவர் தோழர் செங்கொடி. பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக விழா தொடங்கிற்று. தொடர்ந்து ஆதித் தமிழர் கலைக் குழுவினர் பறை இசை மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பெரியார் அம்பேத்கர், பிரபாகரன் கொள்கை போற்றும் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடந்த வாழ்த்துரையில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், இயக்குனர் கவுதமன், அற்புதம்மாள், கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். அன்பு. தனசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். டிங்கர்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்

உடன்குடி : 17.01.2012 மாலை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்-சோனாபாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீமான் (நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் ஜக்மோகன் (உலக சீக்கிய செய்திகள்), ம.செந்தமிழன் (திரைப்பட இயக்குனர்), பாமரன் (எழுத்தாளர்), அற்புதம் அம்மாள், பேராசிரியர் அறிவரசன், முனைவர் சுப. உதயகுமார் (அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி: 18.01.2012 மாலை 7 மணியளவில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற ஈழம்-கூடங்குளம்-முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் இந்திய அரசின் துரோகத்தை விளக்கி, கழகத்தின் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கோ.அ.குமார் (மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பால் பிரபாகரன் உரையாற்றினார். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இந்திய...

குஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

குஜராத் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா?

குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான இனப் படுகொலையை நடத்தி சர்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளானவர் மோடி.  உச்சநீதிமன்றம் அவரை ‘நீரோ’ மன்னருக்கு இணையானவராக கூறியது. (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, ரோம் மன்னர், அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது ‘பிடில்’ வாத்தியக் கருவியை மீட்டுக் கொண்டிருந்தார் என்று வரலாறு கூறுகிறது) இப்போது, அவர் ‘மதச் சார்பின்மை’ வேடம் போடுகிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவியை தட்டிப் பறித்துவிட கனவு கண்டு வருவதால் இத்தகைய நாடகங்களை நடத்தி வருகிறார். இப்போது முஸ்லிம் மக்களிடம் “கடந்த காலத்தை மறந்து விடுங்கள். உங்களின் தேவைகளுக்கான கோரிக்கைகளை குறைத்துக் கொண்டு பெரும் பான்மை சமூகத்துடன் (இந்துக்களுடன்) கலந்து விடுங்கள்; மத அடையாளங்களை கை விடுங்கள்; பிறகு குஜராத் முன்னேறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று பேசி வருகிறார். உதட்டளவில் முஸ்லிம்களிடம் பரிவு காட்டு வதாக அவர் பேசினாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை. குடியிருப்பு பாதுகாப்பு சட்டத்தில் மோடி...

நன்கொடை

நன்கொடை

4.12.2011 அன்று சேலம் கழகத் தோழர் இரா.வீரமணி – இலட்சுமி இணையரின் மகள் அருள்மொழி-ஸ்ரீதர் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தேறியது. விழா மகிழ்வாக ரூ.10,000/-, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது. 5.2.2012 அன்று சுவாமி மலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த தங்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக கழகத் தோழர் சி.கோடிசுந்தரம்-கனிமொழி (எ) நா. சரசுவதி இணையர் ரூ.10,000/- நன்கொடையாக வழங்கினர். மணவிழா பதிவு 26.1.2012 அன்று கோபியில் கழக அலுவலகத்தில் சொக்கையா – மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்தப் பதிவு, பதிவாளர் மற்றும் கழகத் தோழர்கள் விசய சங்கர் (ஒன்றிய பொறுப்பாளர்), அர்ச்சுனன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), செகநாதன் மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் நடந்தது. கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக்...

இராமகோபாலன்  வெளியிடாத அறிக்கை

இராமகோபாலன் வெளியிடாத அறிக்கை

கருநாடாக சட்டசபையில் மூன்று பா.ஜ.க. அமைச்சர்கள்  அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அதற்காக அவர்கள் பதவி இழந்துள்ளனர். அவர்கள் பக்தி பரவசத்தோடு ‘விநாயகன்’, ‘இராமன்’ பிறந்த கதைகளையும், ‘சிவன்’ திருவிளையாடல் களையும் காட்சி வடிவத்தில் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறோம். அதற்காக இப்படியா அவர்கள் பதவியை பறிப்பது? இது மத விரோதம்! தெய்வக் குற்றம்! பெரியார் முழக்கம் 23022012 இதழ்

‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

பெண்கள் சிறுமியாக இருக்கும் போதே திருமணம் செய்து விடும் ‘பால்ய விவாகம்’ எனும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் ‘இந்து சமூக வாழ்க்கை’ என்ற பெயரில் சமூகத்தில் திணித்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தக் கொடுமை பாhப்பனர் எதிர்ப்பையும் மீறி சட்டத்தால் தடுக்கப்பட்டது. பிறகு பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து, இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்றாலும், பார்ப்பனியம் திணித்த இந்த சமூகக் கொடுமை தொடரவே செய்கிறது. உலகில் நடக்கும் ‘சிறுமிகள்’ திருமணங்களில் இரண்டாவதாக ‘பாரத புண்ணிய’ பூமியான இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 47 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறார்கள். உலகில் இதில் முதலிடம் பெறுவது வங்க தேசம். (66 சதவீதம்) இந்தியாவில் பீகார் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விடு...

மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமாம்

மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமாம்

“மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு தடையில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித் துள்ளார் (“னுடிநள nடிவ யெச யீநசளடிளே றாடி hயஎந சநடபைiடிரள கயiவா கசடிஅ தடிiniபே வாந யீயசவல”). மார்க்சிஸ்ட்டுகள் நாத்திகர்களாக இருந்தாலும், மதம் தோன்றி யதற்கான காரணம் சமூகத்தில் அதன் செயல்பாடு பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி ஏடுகள் மார்க்சிஸ்ட்டுகள், மதச் சடங்குகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், கட்சியின் செயல் பாடுகளில் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. கேரளாவின் சி.பி.அய்.(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். மனோஜ், மத வழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால், தனது மத நம்பிக்கையை கைவிட முடியாது என்று, 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து அவர் விலகினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்த புரத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டை யொட்டி நிறுவப்பட்டிருந்த கண்காட்சியில் மார்க்ஸ், லெனின், சேகுவேரா...

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா?

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா?

வீடுகள், சிறு வணிக-தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக் கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 20 வருடங்களில் அரசுக்கு சொந்தமாக புதிய மின் நிலையங்களை உருவாக்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. மின்சார உற்பத்தி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. தனியார் மின் நிலையங்களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. நம் மின்சாரத் துறை கடுமையான நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. விரிவாகச் சொல்வதானால் 1994-95 இல் தமிழக அரசின் உற்பத்தி, மொத்த தமிழகத் தேவையில் 65ரூ ஆக இருந்தது. மத்திய அரசு தொகுப்பிலிருந்து மீதமுள்ள 34.5ரூ பெறப்பட்டது. தனியாரிடம் இருந்து வெறும் 0.5ரூ மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த காலங்களில் வருவாய் மின்சார வாரியத்திற்கு அதிகமாகவும், உபரியாகவும் இருந்தது. இதைக் கொண்டு புதிய மின் உற்பத்தி திட்டங்களைக் கொண்டு வர இயன்றது. மேலும்...

பெரியார் கருத்து செயல் வடிவம் பெறுகிறது:  ‘போரா’ சமூகத்தின் பொது சமையல் அறைத் திட்டம்

பெரியார் கருத்து செயல் வடிவம் பெறுகிறது: ‘போரா’ சமூகத்தின் பொது சமையல் அறைத் திட்டம்

வீட்டுக்கு வீடு சமையலறைகள் வேண்டாம்; பொது சமையலறை உருவாக வேண்டும் என்று கூறியவர், தந்தை பெரியார். அவரது கருத்து இப்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட பிரிவு ‘தாவூத் போரா’ என்ற சமுதாயப் பிரிவாகும். அவர்களின் மதத் தலைவரான டாக்டர் சையதுனா முகம்மது புர்கானுதீன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் சமையல் அறைத் திட்டத்தை முன் வைத்தார். இதனால் சமையல் அறையில் முடக்கப்படும் பெண்களின் ஆற்றலை வேறு பணிகளில் திருப்பிவிட முடியும் என்றார். புதுடில்லியில் ராஜ்காட் பகுதியில் 2200 போரா சமூகக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் தங்கள் வீடுகளில் சமையலறையை இழுத்துப் பூட்டிவிட்டு, பொது சமையல் கூடத் திட்டத்துக்கு வந்து விட்டனர். நகரத்தில் 5 பொது சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா குடும்பத்துக்கும் ஒரே தரத்திலான உணவு, பொது சமையல் கூடத்தி லிருந்து வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணங்கள் குடும்பத்திடமிருந்து பெறப்படுகின்றன. நிர்ண...

உலகத் தமிழர்கள் சாதியை ஒழிக்க  மலேசியா பகுத்தறிவு மாநாடு அறை கூவல் பினாங்கில் பெரியாருக்கு சிலை

உலகத் தமிழர்கள் சாதியை ஒழிக்க மலேசியா பகுத்தறிவு மாநாடு அறை கூவல் பினாங்கில் பெரியாருக்கு சிலை

மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு ஜன.27, 28, 29 தேதிகளில் கோலாலம்பூரிலுள்ள ‘பேர்ல் இன்டர் நேஷனல்’ ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. மாநாட்டுக் குழுத் தலைவர் முனைவர் பெரு. அ. தமிழ்மணி, செயலாளர் ரெ.சு. முத்தையா உள்ளிட்ட மாநாட்டுக் குழுவினர் மலேசிய அரசு ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்தினர். மலேசியாவில் தமிழ் அமைச்சர்கள் டத்தோ ஜி. பழனிவேலு, டத்தோ சுப்ரமணியம், டத்தோ சரவணன், முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேல் சிறப்பு விருந்தினராக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினர். கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஜன. 28 ஆம் தேதி ‘பெரியார் காட்டிய பகுத்தறிவுப் பாதை’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். மா.பெ.பொ. கட்சி அமைப்பு செயலாளர் தோழர் ஆனைமுத்து, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், வழக்கறிஞர் இள. புகழேந்தி, இயக்குனர் வேலு பிரபாகரன், ஓவியா, பேராசிரியர் அ. மார்க்ஸ், கவிஞர் ஆதவன் தீட்சன்யா, முனைவர் இளங்கோவன்,...

களப்பணிகளில் கழகத் தோழர்கள் திருச்சியில் கழகக் கூட்டம்

களப்பணிகளில் கழகத் தோழர்கள் திருச்சியில் கழகக் கூட்டம்

கழக சார்பில் திருச்சியில் 21.01.2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பார்ப்பன இந்தியாவின் துரோகம், தமிழீழத்தில், முல்லைப் பெரியாறில், கூடங்குளம் அணு உலையில் – என்ற தலைப்பில் பொதுக் கூட்டம், சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக புதியவன் (மாவட்ட இணைச் செய லாளர்) வரவேற்புரை ஆற்றினார். துரை தாமோதரன் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடத்தினார். பால் பிரபாகரன் உரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார். மாவட்ட அமைப்பாளர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். கூட்டத்திற்கு முன்பு தமிழீழ இனப்படுகொலை, அணு உலையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் முல்லைப் பெரியாறு உரிமைகளை விளக்கும் புகைப்படங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.கொட்டும் பனியை பொருட் படுத்தாமல் பொது மக்கள், கழகத் தலைவரின் நீண்ட ஆழமான உரையை ஆர்வமாக கேட்டனர். மாவட்ட தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து, முத்துச்...

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தனியார் மின் உற்பத்தியை அரசுடைமையாக்குக!

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தனியார் மின் உற்பத்தியை அரசுடைமையாக்குக!

அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டில் மக்கள் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மனித குலத்திற்கு எதிரான அணுசக்தி எனும் பேராபத்திற்கு எதிராக கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை இம்மாநாடு உயர்த்திப் பிடிக்கிறது. கூடங்குளம் அணுஉலையைத் திறக்க விடாமல் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து இயக்கங்களும் உறுதியாகத் துணை நிற்கும். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அணி திரள வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நிலவி வரும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்களின் அளவற்ற சுமையைக் குறைக்கத்தக்க வகையில் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கோரிப் பெற வேண்டும் எனவும், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை நீக்க...

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)

மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் – மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க...

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெருமாள் மலையில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கருப்புச் சட்டைகளின் வரலாற்றில் அழியா புகழ் கொண்ட பெருமாள் மலையில் நடந்தது. பெருமாள் மலைக்கு ஒரு வரலாற்று சிறப்பு உண்டு என்பது 1985 ஆம் ஆண்டு பக்தர்கள் சிலரால் கடவுளின் சக்தி என்ற முழக்கத்தோடு சென்னிமலை கோவில் படிக்கட்டில் மாட்டுவண்டி ஏற்றினார்கள். அதே சென்னிமலையில் இது கடவுளின் சக்தி அல்ல; மனித சக்தி தான் என்று கூறி பெரியாரிஸ்டுகள் மாட்டு வண்டி ஏற்ற முயன்றபோது காவல்துறை தடுத்தது. அதன் பின்னர் சென்னிமலையைவிட செங்குத்தான படிகளைக் கொண்ட பெருமாள்மலையில் தோழர்கள் மாட்டுவண்டி ஏற்றி கடவுள் சக்தி என்ற புரட்டை முறியடித்தனர். அத்தகைய சிறப்பு மலை பெருமாள் மலை பகுதிக்கு உண்டு. கூட்டத்திற்கு பொ.இராசண்ணா தலைமையேற்க, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கிருட்டிணகுமார் வரவேற்புரை நிகழ்த்த, ஈசுவரமூர்த்தி, பகுத்தறிவாளர் பேரவை ப. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவை....

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

ஓடுகிறார்…. ஓடுகிறார்… நாராயணசாமி ஓடுகிறார்

கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் தலைவர் எஸ்.வி. உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் ரூ.150 கோடி வந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். அமைச்சர் நாராயணசாமியின் இந்த அவதூறுக்கு எதிராக உதயகுமார், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு தனது வழக்கறிஞர் இராதாகிருடடிணன் வழியாக தாக்கீது அனுப்பியிருந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாராயணசாமி, தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு பணம் வருவதாகத் தாம் கூறவே இல்லை என்றும், தான் கூறாத ஒன்றை கூறுவதாக உதயகுமார் கூறி, தன்னை களங்கப்படுத்துவதாகவும், தனது வழக்கறிஞர் வழியாக பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம்  ‘வீரம்’ பேசிய நாராயணசாமி, தலைகுப்புற சரணடைந்துள்ளார். “உங்களுடைய கட்சிக்காரர் உதயகுமார் கூறியிருப்பதுபோல், அமைச்சர் நாராணசாமி, அவருக்கு எதிராக, எந்தப் புகாரையும் கூறவில்லை. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் வரியாக ரூ.150 கோடி பெற்றதாக அமைச்சர் நாராயணசாமி ஒரு...

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்:  ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன் கோயில் இடைத் தேர்தல்: ம.தி.மு.க. வேட்பாளருக்கு கழகம் ஆதரவு

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் குறித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம், களத்தில் நின்ற எந்த அணியையும் ஆதரிக்க இயலாத நிலையில் தேர்தலில் விலகி நின்றது. இப்போது சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தனித்தனியாக களம் இறங்கியுள்ளன. போட்டியிடும் கட்சிகளில் முல்லைப் பெரியாறு உரிமை, கூடங்குளம் எதிர்ப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை, தூக்குத் தண்டனை எதிர்ப்பு போன்ற தமிழர் உரிமைகளுக்காக முனைப்புடன் போராடி, வாதாடி வரும் அமைப்பான ம.தி.மு.க., தனது கட்சியின் வேட்பாளரை (தோழர் சதன் திருமலைக்குமார்) நிறுத்தியுள்ளது. தமிழர்களின் உரிமைக்கான களங்களில் உறுதியுடன் முனைப்பாகப் போராடிவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரித்து வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமாய் சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்களை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக் கொள்கிறது. ம.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பு எனக் கருதி...

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

‘இடிந்தகரை’ மக்கள் குரல் தமிழகத்தின் போர்க்குரலானது அணுசக்திக்கு எதிராக ஆர்ப்பரித்த மக்கள்

இடிந்தகரை பொது மக்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த பல மாதங்களாக நடத்தி வந்த போராட்டம் தமிழக மக்களின் ஒருமித்த உரிமைப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் சென்னையில் திரண்ட மக்கள் சக்தி இதை உறுதி செய்துவிட்டது. அணுமின் சக்திக்கு எதிராக நடக்கும் போராட்டம் கூடங்குளம், இடிந்தகரை கிராம மக்களின் போராட்டமல்ல; தமிழக மக்களின் போராட்டம் என்பதை சென்னையில் பிப்.26 ஆம் தேதி நடந்த எழுச்சி மிக்க கருத்தரங்கம், மாபெரும் பேரணி, கடலலைபோல் மக்கள் திரண்டிருந்த திறந்த வெளி மாநாடு – ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது. நாட்டில் பணபலம், அதிகார பலத்துடன் உலா வரும் தேர்தல் அரசியல் பகாசுர கட்சிகளின் பங்களிப்பின்றி வெகு மக்கள் இயக்கங்களுடன் இணைந்து மக்கள் நடத்திய இந்த அணுஉலை எதிர்ப்பியக்க மாநாடு, உலகம் முழுதும் நடந்து வரும் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாகும். பல்லாயிரக்கணக்கில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு...

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர்  கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ    வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

கழகத் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

22.1.2012 அன்று காலை 11.30 மணிக்கு சேலம் மேற்கு மாவட்டசெயலாளர் தோழர் இரா. டேவிட் – இரா. தீபாஸ்ரீ இணையரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையேற்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். இவ்விழாவில் ம.தி.மு.க சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக் கண்ணன், சேலம் சங்கீதா மெடிக்கல் பாலசுப்ரமணியன், சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பெரியார் முழக்கம் 08032012 இதழ்

டில்லியின் அதிகார ஆணவம்

டில்லியின் அதிகார ஆணவம்

‘தேசிய பயங்கரவாத தடுப்பு மய்யம்’ ஒன்றை உருவாக்க மத்திய உள் துறை அமைச்சகம் மேற் கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் கடுமையாக எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய உளவு நிறுவனமே மாநிலங் களில் நேரடியாக தலையிட்டு பயங்கர வாத நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காகவே இந்த அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. மாநில முதல மைச்சர்களை கலந்து ஆலோசிக்கா மலே ‘சட்டாம் பிள்ளைத்’தனமாக மத்திய அரசு செயல்பட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரசோ, பா.ஜ.க.வோ, மத்தியில் அமைச்சரவை அமைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகும் காங்கிரஸ் ஏதோ, அகில இந்திய அளவில் செல்வாக்குள்ள கட்சி போல கற்பனைக் கனவில் மிதந்து கொண் டிருக்கிறது. உண்மையில் சோனியா காந்தி, இப்படி ஒரு கற்பனையில் மூழ்க்கிக் கிடந்தவர்தான். 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை யில்லா வாக்கெடுப்பில் கவிழ்ந்தபோது சோனியா, தன்னிடம் 272 நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவு...

நெடுமானூரில் கழகக் கூட்டம்

நெடுமானூரில் கழகக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 12.2.2012  ஞாயிறு மாலை 6 மணியளவில் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நெடுமானூரில் நடைபெற்றது. தெ.செ. நாவாப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. திரு நாவுக்கரசு, பெரியசாமி, ரா. சிவராமன், ச. வசந்தகுமார் ஆகியோர் முன்னலை வகிக்க, ச.கா. இளையராசா வரவேற்புரையாற்றினார். செ. பிரபு, திருமால், நா.வெற்றிவேல், ந. அய்ய னார் ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக காவை இளவரசன் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நிகழ்த்தினார். விழுப்புரம் கணேசன், பெரியார் வெங்கட், கி.ஆசைத்தம்பி, க.இராமர், கல்லை சங்கர் உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அ.ரமேசு நன்றி கூறினார். விழுப்புரம், கடுவனூர் கிளை கழகத் தோழர்களால் உருவாக்கப் பட்டது திராவிடன் சடுகுடு குழு. 18.1.2012 புதன் அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 20 குழுவினர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற அணியினருக்கு முதல் பரிசுத்...

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

திருப்பூரில் கழகம் நடத்திய பொங்கல் விழா

கழகம் சார்பாக திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் மூன்றாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தை பொங்கல் விழா 22.1.2012 காலை நடைபெற்றது. அலமேலு பாலாஜி மருத்துவமனை மருத்துவர் மனோகர் பொங்கல் வழங்கி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முல்லை பெரியாறு நாயகன் கர்னல் பென்னிகுயிக் படத்திற்கு சு. துரைசாமி (மாவட்ட தலைவர்) மாலை அணிவித்து துவக்கி வைத்தார். க. அகிலன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இரவு 7 மணிக்கு முல்லைப் பெரியாறு சிக்கலும் தீர்வும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கழகத் தோழர்கள் மாஸ்கோ நகர் சம்பூகன், விசயன், பாடகர் தியாகு, மாநகரச் செயலாளர் முகில்ராசு, கிளாகுளம் செந்தில், கோபிநாத், மாதவன், தம்பி, பாலு, நீதியரசன், சாமுண்டிபுரம் மூர்த்தி, தண்டபாணி,...

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

உண்மைகளை மறைக்கும் இலங்கை விசாரணை ஆணையம்

இலங்கை தனக்குத் தானே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் சர்வதேச அளவில் உருவான அழுத்தம்தான். டப்ளின் நகரில் செயல்படும் மக்கள் ‘நிரந்தரத் தீர்ப்பாயம்’ – அதைத் தொடாந்து பான்கி மூன் நியமித்த மூவர்குழு விசாரணை அறிக்கைகள் – இலங்கை அரசின் போர்க் குற்றத்தை உறுதிப்படுத்தின. அய்ரோப்பிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பின. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இலங்கை அரசு ஒரு விசாரணை ஆணையம் அமைக்கும் நிலைககு தள்ளப்பட்டது. ஏற்கனவே இலங்கை அதிபர் நியமித்த பல ஆணையங்கள் உருப்படியாக எந்த விளைவுகளையு ம் ஏற்படுத்தாத நிலையில், மீண்டும் இலங்கை ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது கண் துடைப்பு என்றே சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறின. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவரான சி.ஆர். டி.சில்வா, இலங்கை அரசின் தலைமை சட்ட அதிகாரியாவார். 2006-2009 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு...

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

அணுஉலை ஆபத்து விளக்கக் கூட்டம்

வடசென்னை பெ.தி.க. சார்பில் கடந்த 22.2.12 அன்று புரசைவாக்கம் பகுதியில் அணுஉலை ஆபத்து என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள், சுந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வடசென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் குமாரதேவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட தலைவர் எ.கேசவன் தலைமையேற்க சமர்பா குமரன் மற்றும் நாத்திகன் இன எழுச்சிப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கியது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி

1912 பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட் களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர் பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல், பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுய ஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணி அற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும், மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணி புரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால்தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற...

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள். உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண்...

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

பெண்ணுரிமையை மறுக்கும் தனியுடைமை

இப்போது இங்கு பெண்ணுக்குத் தாலி கட்டப்பட்டது. இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாலி கட்டுவதானது, “இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்தத் தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலி கட்டாத கல்யாணம் நடந்த போதி லும் மணப்பென் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஏனெனில், இத் திருமணத்துக்குச் சம்மந்தப் படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப் பட்டிருக்கிறது. கற்பு என்பதைச் சுகாதாரத்தையும், சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை. உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்னவென்றால் இந்துக் கடவுள்கள் என்பவற்றிற்கும்கூட ஆண் கடவுள்களுக்குக் கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால், அந்த – அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு...

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேசப் பிடி இறுகுகிறது போர்க்குற்றங்கள்: அய்.நா. விவாதிக்குமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவிலுள்ள அய்.நா. அவையில் (அமெரிக்காவின் நியுயார்க்கிலும் அய்.நா. மன்றம் உள்ளது) தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்று வருகிறது. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று தெரிகிறது. அய்.நா.வில் எந்த நேரத்திலும் எந்த மாற்றமும் நிகழலாம் என்பதால்  அந்தத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதுதான் அது உறுதியாகும். ஆனாலும், அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தின் நகல், மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 உறுப்பு நாடுகளுக்கும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கூட இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணையை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நகல் தீர்மானம் கூறுவது என்ன? இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற படிப்பினை மற்றும் பாதிப்பிலிருந்து மீட்டல்’ என்ற (எல்.எல்.ஆர்.சி.)...

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

ஆதாரங்களுடன் அறிவியல் கூறும் ஆராய்ச்சி முடிவுகளின்படி பிக்பேங்க் என்ற பெரிய வெடிச் சிதறல் காரணமாக இந்த ‘அண்டம்’ என்னும் பிரபஞ்சம் தோன்றி 1500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. அதன் தொடர்ச்சியாக விண்மீன் (நட்சத்திர) மண்டலங்களும் (கேலக்ஸி), அவற்றின் விண்மீன்களும் தோன்றின. இந்த அண்டத்தில் கோடானுகோடி விண்மீன்களை உள்ளடக்கிய கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் உள்ளன என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான விண்மீன் மண்டலங்களில் ஒன்றுதான் நமது கதிரவ விண்மீனை (சூரிய நட்சத்திரத்தை) உள்ளடக்கிய பால்வெளி விண்மீன் மண்டலம் (மில்கி வே கேலக்ஸி) ஆகும். நமது இந்தப் பால்வெளி விண்மீன் மண்டலத்தில் மட்டும் நம் கதிரவனைப் போன்ற 20000 கோடி விண்மீன்கள் உள்ளன. பால்வெளி விண்மீன் மண்டலத்திலுள்ள நம் கதிரவ விண்மீன் தோன்றி இன்றைக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகின்றது. இன்னும் 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு ஒளி தந்து நம் உயிருக்கு ஆதாரமாக இருக்கும் இந்தக்...

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம்: படிப்பினையும் தேவையும்

திராவிடர் இயக்கம் குறித்து ‘இந்தியா டுடே’ இதழுக்கு (மார்ச் 14) கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது. சில சிறு மாற்றங்களுடன் ‘இந்தியா டுடே’ வெளியிட் டுள்ளது. இதழுக்கு அனுப்பிய முழுமையான கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். தமிழ்நாட்டின் சமூக வரலாற்றிலிருந்து திராவிடர் இயக்கத்தைப் பிரித்துப் பார்க்க இயலாது. இப்போது மீண்டும் திராவிடர் இயக்கம் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. உண்மையில் ‘திராவிடர் இயக்கம்’ – அன்று சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு நீதி கேட்டு உருவானதுதான். தென்னாட்டில் அடங்கி யிருந்த கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை உள்ளடக்கி எழுந்தது அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உட்பட, பார்ப்பனரலலாதவர்கள் உரிமைக் குரல் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தனி மனிதர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. 1909 ஆம் ஆண்டில் சென்னையில் புருஷோத்தம (நாயுடு), சுப்பிரமணியம் என்ற இரு வழக்கறிஞர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்களின் ‘கல்வி...

புழல் சிறைக் கைதியின் கடிதம்

புழல் சிறைக் கைதியின் கடிதம்

கடந்த சில மாதங்களாக சிறையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டைப் படித்து வருகிறோம். வெளியில் நடக்கும் செய்திகளை அறிந்து மிகவும் உற்சாகம் பெற்று வருகிறோம். 19.1.2012 இதழில் வெளிவந்த ‘25 ஆண்டுகளாக நடக்கும் கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்’ என்ற கட்டுரை மிகச் சிறப்பாக உண்மைகளை விளக்கியது. கூடங்குளம் எதிர்ப்பு திடீரென்று தோன்றியதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தரகு முதலாளிகளுக்கு சேவகம் செய்து வரும் ஏடுகளுக்கு இந்தக் கட்டுரை சரியான பதிலாக இருந்தது. – வே. சுந்தரமூர்த்தி, புழல் மத்திய சிறை பெரியார் முழக்கம் 15032012 இதழ்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு: சென்னை மாவட்டக் கழகம் தீவிரம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்கள் சேர்க்கும் பணியில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். 500 சந்தாக்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக பிப்.23 அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 100 சந்தாதாரர்களுக்கான தொகை, முகவரிப் பட்டியலை தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, கழகத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் இயக்க நூற்றாண்டு  கருத்தரங்குகளை மாநாடுபோல் நடத்துவது என்றும், புரட்சிக் கவிஞர் விழாவை பகுத்தறிவு தமிழ் உணர்வாளர்களை அழைத்து, அறிவியல் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் புரட்சிப் பண்பாட்டு விழாக்களாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேசவன், வழக்கறிஞர் குமாரதேவன், தென்சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தபசி குமரன் உள்ளிட்ட தோழர்கள் பலரும் கருத்தினைக்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

1913  சென்னை அய்க்கிய சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. ஓரிருவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டதானது பார்ப்பனர் தம் ஆதிக்கம் ஏனையோரை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது என்பதைக் காட்டியதுடன், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் ஒருமித்த வலிவையும் உணர்த்தியது. “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயர் இச்சங்கத்தின் நோக்கத்தையும், ஆற்றும் பணியையும் குறிக்கும் வகையில் இல்லாமல், பொருத்தமற்றதாகக் காணப்படுவதால் ‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர்மறைப் பெயரால் குறிக்க வேண்டும்? திராவிடர் சங்கம் என்றே பெயரிடலாம் என்ற கருத்து பெரும்பான்மையோரால் முன்மொழியப்படவே சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரானது, ‘திராவிடர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. சென்னைக்கு வருகை தந்த ராயல் கமிஷனின் முன் அன்றைய அரசுத் தலைமைச் செயலாளராயிருந்த அலெக்ஸாண்டர் கார்டியூ சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலை...

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

தலையங்கம் தேசிய கட்சிகள் விடை பெறுகின்றன!

இந்தியாவில் அய்ந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு தேசியக் கட்சி களுக்கும் எதிராகவே வந்துள்ளன. உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்தி, சமாஜ்வாடி கட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளது.  இராகுல் காந்தி களமிறங்கியும் உ.பி.யில் காங்கிரஸ், நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சாபில் அகாலிதளத்தின் பிரகாஷ்சிங் பாதல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க., அகாலிதளத்தின் கூட்டணி கட்சியாகும். கடந்த முறை ஊழல் புகார்களில் பா.ஜ.க. அமைச்சர்கள் பதவி விலகிய நிலையிலும் ஆட்சியின் எதிர்ப்புகளை காங்கிரஸ் கட்சியால் அறுவடை செய்ய முடியவில்லை. முலாயம்சிங் மகன் அகிலேஷ், உ.பி. தேர்தலுக்கு பொறுப்பேற்றதுபோல் பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் மகன் சுக்பீர்சிங் பாதல் தேர்தல் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இந்து வாக்கு வங்கி, பா.ஜ.க.வுக்கும் ஜாட் சீக்கியர் வாக்கு வங்கி அகாலிதளத்துக்கும், பிற்படுத்தப்பட்ட சீக்கியர், ஜாட் அல்லாத சீக்கியர், தலித் சீக்கியர் வாக்கு வங்கி காங்கிரசுக்கும் இருந்த நிலையை மாற்றி, சுக்பீர்சிங்,...

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

மரணதண்டனைக்கு எதிராக வடாற்காடு மாவட்டம் சோலையார் பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் உள்ள 84 ஊர்களில் பரப்புரைப் பயணம் நடந்தது. பிப்.15 இல் தொடங்கி பிப். 22 வரை 8 நாட்கள் நடந்த பரப்புரை பயணத்தில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக முன் வைத்த கருத்துகளை நியாயங்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவிமெடுத்தனர். பரப்புரைப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு: தோழர்கள் சிவலிங்கம் மற்றும் குட்டிமணி (பா.ம.க. ஒன்றிய செயலாளர்) ஆகியோர் வழிகாட்டுதலில் எட்டு நாட்கள் தெருமுனைப் பிரச்சாரப் பயணம் திருப்பத்தூர், சோலையார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பல்வேறு சிற்றூர், பேரூர் மற்றும் நகரங்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. குமரேசன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் நிதியும், கே.சி.காமராஜ் திருமண மண்டபமும், வ.கி.அருணா மகிழுந்தும், ப.அன்பழகன் (தி.மு.க.) ஓய்விட அறையும் கொடுத்துதவினர். உணவு வழங்கியோர்: வ. கண்ணதாசன் (ம.தி.மு.க.), திருப்பத்தூர்அய்யம்பேட்டை பாலு (விடுதலை சிறுத்தைகள்), சா.பெரியார்தாசன்...

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர்  விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறையில் அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை சார்பில் 7.3.2012 அன்று பிற்பகல் 3 மணியளவில் பவள விழாக் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் மனித நேயம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவரும், பெரியார் நாத்திகக் கருத்துகளில் தீவிர ஈடுபாடு கொண்டு   பணி ஓய்வு பெற்ற பிறகு தனது இல்லத்தில் மாதம் தோறும் மனித நேய பகுத்தறிவுக் கூட்டங்களை நடத்தியவருமான மருத்துவர் பேராசிரியர் கே. நடராசன், தனது துணைவி யார் நினைவாக நிறுவிய அறக்கட்டளையே அன்னை சரோஜினி நினைவு அறக்கட்டளை யாகும். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு வரவேற்புரையைத் தொடர்ந்து, விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் உரை யாற்றினார். ஆன்மீகவாதிகள், அறநெறி யாளர்கள், சான்றோர்கள் என்று எல்லோரும் மனித நேயத்தை வலியுறுத்தினாலும், பெரியாரின் மனித நேயம் உள்ளடக்கத்திலும் பண்புகளிலும்...

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள் கருவறை பார்ப்பன ஆதிக்கம் ஒழிகிறது!

கேரளாவில் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பனர் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற ‘பிறப்பு ஆதிக்கம்’ ஒழிந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அமைதிப் புரட்சி நடந்து முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கேரள தேவஸ்வம் போர்டு காலியாக இருந்த 100 அர்ச்சகர் பதவிகளில் 50 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக நியமனம் செய்துள்ளது. கேரள தேவஸ்வம் போர்டு சார்பாக அர்ச்சகர் பதவிக்கு அனைத்து சாதியினரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பிறகு அவர்கள் நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டனர். மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பார்ப்பனரல்லாத அனைத்து சாதிப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.  கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார் கூறுகையில்: “ஒருவர் உள்ளத்தாலும் செயல்களாலும் தான் ‘பிராமணர்’ ஆக முடியுமே தவிர, பிறப்பால் அல்ல இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்றார். மலையாள இந்துவாகவும் ‘தந்திர சாஸ்திரங்கள்’ – பூசை முறைகள் பற்றி தெரிந்தவர் களாகவும் உள்ளவர்கள்...

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரி யாதைப் பேரவை சார்பில் 1.4.2012 காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம், 132 வால்மீகி தெரு, இரண்டாம் தளம்) சுயமரியாதை சுடரொளிகள் நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குத்தூசி குருசாமி, குருவிக்கரம்பை வேலு, சென்னை தே.மு.சண்முகம், த. லோகநாதன் படங்களை முறையே கவிஞர் தமிழேந்தி, முனைவர் வளர்மதி, ம.அருள்முகம், மருத்துவர் சவுந்தர பாண்டியன் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள். பெரியார் முழக்கம் 22032012 இதழ்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத்  தாக்கிய சிங்கள குண்டர்கள்

அய்.நா. அலுவலகம் முன் தமிழர்களைத் தாக்கிய சிங்கள குண்டர்கள்

ஜெனிவாவில் நடக்கும் அய்.நா. கூட்டத்தில் பங்கேற்று வரும் மக்கள் உரிமை கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி டிஃபேன் ஜூனியர் விகடன் ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து: “இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ‘ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதே சமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி ஐரோப்பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள் தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்...

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

சர்ச்சையைக் கிளப்பும் அமெரிக்கத் தீர்மானம்: முதலில் சர்வதேச விவாதம் தொடங்கட்டும்!

அமெரிக்க தீர்மானத்தின் மீது கடைசியாக நாடாளுமன்றத்தில் வாய் திறந்த பிரதமர் மன்மோகன் சிங், அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் இறுதி நகல், தம்மிடம் இல்லை என்றும், அதை ஆதரிக்கும் மனப்போக்கில் இந்தியா இருப்பதாகவும் (ஐnஉடiநேன வடி எடிவந) கூறியுள்ளார். போருக்குப் பிறகு இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமும் அந்த ஆணையத்தின் பரிந்துரையை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததும் அவசர நிலை அங்கே தளர்த்தப்பட்டதும், உள்ளாட்சித் தேர்தலுக்கு இலங்கை அரசு தயாராகி வருவதும் உறுதியான நடவடிக்கைகள் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இலங்கை அரசின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்க மன்மோகன் சிங் தயாராக இல்லை. இது பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “பிரதமர் உரையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமை மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின்...

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ அறிக்கையால் மேலும் நெருக்கடி போர் முடிந்த பிறகு இலங்கையின் கொடூரமான மனித உரிமை மீறல்கள்

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. ‘ஆம்னஸ்டி இன்டர் நேஷனல்’ எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, போர் முடிந்த பிறகு இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை, கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வின் அறிக்கையாக சமர்ப்பித்தது. இலங்கை அரசுக்கு உலக அரங்கில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ள அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் இவை: சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 9வது பிரிவு, “எந்த ஒரு நபரையும் சட்ட விரோதக் காவலிலோ, கைது செய்தோ, அடையாளம் தெரியாத ரகசிய இடத்திலோ தடுத்து வைக்கக் கூடாது” என்று திட்டவட்டமாக கூறுகிறது. இது சர்வதேச சட்டமாக ஏற்கப்பட்டுள்ளது. எல்லா அரசு களையும் இது கட்டுப்படுத்தும்; சாக்கு போக்குகள் எதையும் கூறி அரசு இந்த பிரகடனத்திலிருந்து விலகி நிற்க முடியாது. ஆனால், சட்ட விரோதமாக பல்வேறு அடக்கு முறை சட்டங்களின் கீழ் காவலில் தடுத்து வைப்பது சிறீலங்காவில் தொடர் கதையாகும். 1971 ஆம்...

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’

1915 பார்ப்பனரல்லாத இளைஞர்களின் இன எழுச்சியின் வெளிப்பாடாக திராவிடர் சங்கத்தின் சார்பில் ‘திராவிடப் பெருமக்கள்’ மற்றும் பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் ஆகிய இரு வெளியீடுகள் வந்தன. பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை ஊக்குவித்தும், பார்ப்பனருடன் போட்டியிட்டு முன்னேறும் வகையில் ஒன்று சேர்ந்து உழைக்கும்படி தூண்டும் வகையில் அமைந்த 21 கடிதங்களைக் கொண்டது, ‘பார்ப்பனர் அல்லாதார் கடிதங்கள்’ என்ற நூலாகும். இவ்விரு நூல்களும், எஸ்.கே.என். என்னும் சுருக்கப் பெயர் (முழுப் பெயர் தெரியவில்லை) உள்ளவரால் எழுதப்பட்டு, ‘இந்தியன் பாட்ரியாட்’ எனும் இதழாசிரியர் சி.கருணாகரமேனனால் வெளியிடப்பட்டவை ஆகும். செப்டம்பர் 25 இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார், அதனை முற்றிலும் பார்ப்பனர் நலனுக்கே அர்ப்பணித்தமையினை உணர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேலும் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கனவே காங்கிரசில் ஈடுபட்டு உழைத்து வந்த தியாகராயர், நாயர் ஆகியோர், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் வடநாட்டு ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வரும் ஓர் அமைப்பே காங்கிரஸ்...

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

டெல்லி பல்கலையில் ‘இந்து’ ராம் திணறல்; மாணவர்கள் அதிரடி கேள்விகள்

ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எதிராக நஞ்சை கக்கி எழுதியவரும், ராஜபக்சேயின் தமிழகப் பிரதிநிதியாக செயல்பட்டவருமான ‘இந்து’ ராம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். கடந்த 14.3.2012 அன்று மாலை ஜவகர்லால் நேரு பல்கலை விடுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் ‘ஊடகங்களின் ஒழுங்கு’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்திருந்தார். உரை முடிந்தவுடன், மாணவர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர். “நீங்கள் ஊடக ஒழுங்கைக் காப்பாற்றினீர்களா? ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் பத்திரிகை ஒழுங்கைப் பின்பற்றாமல், ராஜபக்சேயின் முகவராக செயல்பட்டது தான், ஊடக ஒழுங்கா? கண்மூடித்தனமாக சீனாவை விமர்சனமின்றி ஆதரிப்பது சரியா? ‘இலங்கா ரத்னா’ விருதை இலங்கை அரசிடமிருந்து பெற்றது ஏன்? கொலைக் குற்றம் சாட்டப் பட்ட இளைய சங்கராச்சாரி விஜயேந்திரனை ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும்போது எல்லையில் நீங்களே காரில் சென்று அழைத்து வரலாமா? என்ற கேள்விகளை சரமாரியாகத் தொடுத்தனர். “போருக்குப் பிறகு தமிழர்...