Category: பெரியார் முழக்கம் 2014

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. – செய்தி ஊழலை ஆதரிச்சு நடத்தியிருந்தால், காவல்துறை அனுமதியே தேவைப்பட் டிருக்காதே! புரிஞ்சுகிட்டு, செயல்படுங்க, தோழர்! பிரதமர் மோடி அலுவலகத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையும் சைவத்துக்கு மாறிவிட்டது. – செய்தி அப்ப, இனி, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து மரண தண்டனை அறிவிப்புகள் ஏதும் வராதுன்னு சொல்லுங்க…. கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை சீர்குலைத்து வருவது ஊழல்தான். – உச்சநீதிமன்றம் அதே கங்கையில் முழுக்குப் போட்டா, ‘ஊழல் பாவ’த்திலிருந்து கரை சேர்ந்து விடலாம்னு ஒரு நம்பிக்கைதான்! ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன். – செய்தி ‘கடவுளுக்கே’ ஜாமீன் வழங்கும் அதிகாரத்தை வரலாற்றிலேயே முதன்முதலாக பெற்ற பெருமை நமது ‘பாரத’ உச்சநீதிமன்றத்துக்கே கிடைத்துள்ள பெரும் “பாக்யம்”. அயோத்தியில் இராமன் கோயில் கட்ட பா.ஜ.க. ஆட்சிக்கு 2019 வரை ஆர்.எ°.எ°. கெடு. – செய்தி ஆமாம்! அப்படி கட்டாமல் போனால் ‘இராமனே’ –...

நிர்வாகம்-உண்மையை வெளியிட மறுக்கிறது மீண்டும் முடங்கியது, கூடங்குளம் 0

நிர்வாகம்-உண்மையை வெளியிட மறுக்கிறது மீண்டும் முடங்கியது, கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் திட்டம் மீண்டும் முடங்கி யிருக்கிறது. அணுமின் நிர்வாகம் இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்தாலும் இணைய தளங்கள் வழியாக உண்மைகள் வெளிவந்துவிட்டன. அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியில் அணு உலைக்கலன்போல முக்கிய பங்காற்றுவது ‘டர்பைன்’. டர்பைன் தான் சுழற்சியின் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலைகள் உற்பத்தியைத் தொடங்கிவிட்ட நிலையில், இப்போது முதலாவது உலையில் ‘டர்பைன்’ செயலிழந்து விட்டது, இதை சரி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விஞ்ஞானிகள் வர வேண்டும். அதற்கு குறைந்தது 4 வார காலமாகும். அதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம். இணை யங்களில் வந்துள்ள இந்த செய்தியை முதன்முதலாக ‘சன்’ தொலைக்காட்சி அக்.20 அன்று செய்தியில் ஒளி பரப்பியது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது: “கடந்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

இந்தியாவில் தேசியப் பாதுகாப்புப் படையில் முதல்முறையாக ‘பெல்ஜியம் ஷெப்பர்டு’ நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. – செய்தி இந்து தேசியத்தைக் காப்பதற்கு கிறிஸ்தவ நாட்டு நாய்களா என்று இராம. கோபாலன்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புவோமாக! ‘ஆமென்’. சென்னையில் ‘கத்தி’ படம் ஓடும் திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் சிலை. – செய்தி அப்படியே, சிலைக்கு அர்ச்சனை டிக்கட் போட்டு அதையும் ‘கவுண்டரிலேயே’ விக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுடுங்க… சோனியா, அத்வானி, முலாயம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த 401 எம்.பி.கள், தங்கள் சொத்து விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. – செய்தி அவசரப்படாதீங்க… சொத்துகள் எங்கெங்கே பரவி கிடக்குதுன்னு கண்டுபிடிக்க கால அவகாசம் வேணும்ல. மோடி கூட்டிய தீபாவளி விருந்து விழாவில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தினார். – செய்தி குப்பையைப் பெருக்கி சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீங்கன்னு சொல்லியிருப்பார் போல! திருப்பதி ஏழுமலையான் ‘தரிசன’ டிக்கட்டுகள் இனி அஞ்சலகங்களிலேயே கிடைக்கும். –...

கழகத் தோழர்கள் உடனடி எதிர்ப்பு எதிரொலி:  வானொலியில் இந்தி திணிப்பு நிறுத்தம் 0

கழகத் தோழர்கள் உடனடி எதிர்ப்பு எதிரொலி: வானொலியில் இந்தி திணிப்பு நிறுத்தம்

அகில இந்திய வானொலி தமிழ் ஒலிபரப்பில் நாள்தோறும் 7 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கான சுற்றறிக்கையை மோடி அரசு அனுப்பியது. இந்த செய்தி வந்தவுடன் கழகத்தினர் செயலில் இறங்கினர். தொலைக்காட்சி ஒன்று இந்த செய்தியை ஒளிபரப்பியவுடன் கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, தலைவர் பா.ஜான், விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட 15 தோழர்கள், தபசி குமரன் தலைமையில் 25.10.2014 பகல் 11 மணிக்கு வானொலி நிலைய இயக்குனரை சந்தித்து, கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை அளித்தனர். கழகத் தோழர்கள் வரவிருக்கும் செய்தியை உளவுத் துறை வழியாக அறிந்த காவல்துறையினர் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கை மனு விவரம்: “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அந்தந்த மாநில மக்களின் தாய்மொழிக்கென உள்ள உரிமையைப் பறிக்கும் வகையிலும், தென்னிந்தியாவில் அலுவல் மொழிச் சட்டத்தின் அட்டவணை ‘சி’ பிரிவில் கூறியுள்ள மாநில மொழி தமிழும் தொடர்பு மொழி ஆங்கிலமும்...

பெரியார் சிந்தனை சுதந்திரத்துக்கு எதிரானவரா? 0

பெரியார் சிந்தனை சுதந்திரத்துக்கு எதிரானவரா?

தமிழக அரசியல் தலைவர்கள் தொண்டர்களை ‘அடிமை’களாக வைத்திருக்கும் சர்வாதிகாரம், பெரியாரிடமிருந்து வந்தது என்று ‘தமிழ் இந்து’ நாளேட்டில் அக்டோபர் 22 அன்று க. திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு அல்ல) எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து, விடுதலை இராசேந்திரன் எழுதிய மறுப்பு கட்டுரையை நவம்பர், 25 அன்று அந்த ஏடு சில மாற்றங்களுடன் வெளியிட்டது. அந்த மறுப்புக் கட்டுரை எழுதியனுப்பிய வடிவத்தில் இங்கே வெளியிடுகிறோம். ‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா!’ என்ற கட்டுரை ‘பெரியார் அவமதிப்பு’ என்ற உள் நோக்கத்தை மட்டுமே கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ‘அரசியல் அதிகாரம்’ என்ற ஒற்றை இலட்சியத்தோடு செயல்படும் அரசியல் கட்சிகளின் ‘தலைமை பக்தி’யையும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் ஒப்பிடுவதே தவறு. பெரியார் – தேர்தலுக்காக அரசியல் கட்சி நடத்தவில்லை. சமுதாய மாற்றத்துக்காக இயக்கம் நடத்தினார். “சுயமரியாதை அழித்தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம், பெரியார் உருவாக்கி வளர்த்த...

திருச்சியில் கூடிய செயலவை தீர்மானங்கள் 0

திருச்சியில் கூடிய செயலவை தீர்மானங்கள்

‘தீண்டாமை’ குறித்த கணக்கெடுப்பு, தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு இயக்கம், ‘ கவுரவ’க் கொலையை எதிர்த்தும், வேளாண் பல்கலை ‘பஞ்சாங்க’ ஆதரவை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள், மதத்தை அரசியலில் கலக்கும் அ.இ.அ.தி.மு.க. போராட்ட வடிவங்களுக்கு கண்டனம், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக! திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 26.10.2014 அன்று திருச்சி தாசூஸ் அரங்கத்தில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. திருச்சி மாநகர அமைப்பாளர் தமிழ்முத்து, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூற, மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோவை செயலவைக்குப் பிறகு நடந்த கழக நிகழ்வுகளையும், கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பரப்புரைத் திட்டங்களையும் விளக்கி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து தீர்மானங்களை கழகத் தலைவர் முன் வைத்தார். தீர்மானங்கள் மீது செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த தோடு, புதிய தீர்மானங்களையும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

திருச்செந்தூரில் ‘சூரபத்மனை’ முருகப் பெருமான் ‘வதம்’ (கொலை) செய்வதை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு. – செய்தி அதே பக்தி உணர்வோடுதான் காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் ‘வதம்’ செய்கிறார்கள் போலிருக்கிறது! காந்திக்கு பதிலாக கோட்சே நேருவைத் தான் சுட்டிருக்க வேண்டும். – ஆர்.எஸ்.எஸ். ஏடு ‘கேசரி’ ஏதோ, சின்ன ஆள் மாறாட்டம் நடந்துடுச்சு; விடுங்க. இனி யாரை, யார் சுட வேண்டும்னு குழப்பமில்லாம பாத்துக்குங்க, சரியா? ‘தீபாவளி’ பற்றி தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்துக்கு எதிர்ப்பு; வெளியே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போராட்டம். – செய்தி விவாதத்தில் பங்கேற்க வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர், தனது வாதத்துக்கு வலிமை சேர்க்க இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பார் போல! காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி வாசல். – செய்தி அச்சச்சோ… இந்த கோயிலுக்குள்ளே சங்கர்ராமனை வெட்டி கொலை செய்ய வந்த கும்பல் எந்த வாசல் வழியா வந்து தொலைஞ்சாங்களோ தெரியலையே…! காங்கிரசில்...

“தீபாவளி” மறுப்போரின் ஒன்று கூடலில் உறுதி பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்! 0

“தீபாவளி” மறுப்போரின் ஒன்று கூடலில் உறுதி பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்!

எந்த ஒரு நிகழ்வுக்கும் பட்டாசுகளை வெடிப்ப தில்லை என்று தீபாவளி மறுப்போரின் ஒன்று கூடலில் கூடிய குடும்பங்கள் உறுதி ஏற்றனர். மதம் இல்லாத வாழக்கைக்கான மாற்றுப் பண் பாட்டை வளர்த்தெடுப்போம் என்ற முழக்கத்தோடு அக்டோபர் 2 ஆம் நாளில் தீபாவளி மறுப்போரின் ஒன்று கூடல் நிகழ்வுக்கு சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகமும், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன. சென்னை இராயப்பேட்டையில் உள்ள முருகேசன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், இளம் தமிழகம் இயக்கத் தோழர்கள், மார்க்சிய லெனினிய கட்சித் தோழர்கள் அமைப்பு களைச் சாராதோர் எனப் பலரும் பங்கேற்றனர். “நாம் அறிவியலை ஏற்பவர்கள்; ஆகவே பூமி உருண்டை என்பதை மறுக்கும் தீபாவளியை மடமை என்கிறோம். நாம் மனித நேயத்தைப் போற்றுபவர்கள்; ஆகவே எதிரிகளை சூழ்ச்சிகளால் கொலை செய்வதை நியாயப்படுத்தும் புராண பயங்கரவாதக் கருத்துகளை...

தலையங்கம் – பிரதமரின் பேச்சா, இது? 0

தலையங்கம் – பிரதமரின் பேச்சா, இது?

புராண காலங்களிலேயே இந்தியா, மரபணு விஞ்ஞானத்திலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று ஒருவர் பேசியிருக்கிறார். பேசியவர், ஏதோ ‘புராண கதாகாலட்சேபம்’ நடத்தும் வைதீகர் அல்ல; இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி. பேசிய இடம் – சர். எச்.என்.ரிலையன்சு அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மய்யத் திறப்பு விழா! புராண காலத்து அறிவியலை உறுதிப்படுத்த மோடி கூறியிருக்கும் எடுத்துக்காட்டுகள் என்ன தெரியுமா? மகாபாரதத்தில் கர்ணன், தாயின் கர்ப்பப்பையிலிருந்து பிறக்கவில்லையாம். எப்படி பிறந்தார்? அந்தக் காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்ததாம். அதேபோல் விநாயகன் தலையில் யானையை பொருத்தியிருப்பது அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறதாம். மோடியின் இந்த ‘ஆராய்ச்சி’யைக் கேட்டு மருத்துவர்கள் விலா நோக சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மோடியின் ‘மேதை’மையை வெளிப்படுத்தும் இந்த ‘சிந்தனை’களை ஊடகங்கள் பலவும் திட்டமிட்டு இருட்டடித்து, மோடியைக் காப்பாற்றியுள்ளன. இந்த அபத்தத்தை எந்த ஒரு விஞ்ஞானியும் ஏன் மறுக்க முன்வரவில்லை என்று ‘ஹெட்...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுக்கும் பார்ப்பன சக்திகள் 0

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுக்கும் பார்ப்பன சக்திகள்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் ஜாதிவாரியாக உள்ள மக்களின் கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் தீபக் மி°ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இது அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினை. எனவே சென்னை உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு தீர்ப்பு வழங்கியது முறையல்ல என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீhப்பு. தமிழ்நாட்டின் சமூக நீதி உணர்வுகளையே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் வழியாக வெளி பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெரியார் உருவாக்கிய சமூக நீதிக்கான மண் தமிழ் நாடு என்ற உண்மை மேலும் உறுதியாகியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கீட்டையும் இணைத்துக் கொள்ள 2010, மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதிப் படுத்தியது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறை யீட்டில்தான் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது. ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டில்தான்...

0

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் 28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பதில்கள். பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு. குணசேகரன். கேள்வி :  செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்; மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற...

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விடைபெற்றுக் கொண்டார்! 0

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் விடைபெற்றுக் கொண்டார்!

திராவிடர் இயக்கத்தின் ஆய்வாளர் என்பது மட்டுமல்ல; அந்த இயக்கத்தின் தேவையையும் அந்த இயக்கம் தமிழகத்தில் உருவாக்கிய வரலாற்றுத் திருப்பத்தையும் ஆழமாக உணர்ந் தவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். ஆங்கில அறிவுலகில், திராவிடர் இயக்கத்தின் சமூகப் பார்வையை அதற்கான மொழிகளின் ஊடாக முன்வைத்தவர். இது அவருக்கே உரித்தான தனித்துவம். இந்த இடத்தை இட்டு நிரப்பக் கூடிய ஒருவர், அவருக்கு நிகராக இல்லை என்பதே அவர் விட்டுச் சென்றுள்ள வெற்றிடம். பொருளாதார – சமூகவியல் துறைகளில் மிகச் சிறந்த பேராசிரியர்; உலகநாடுகளின் பல பல்கலைக் கழகங்களில் கவுரவப் பேராசிரியர்; மிரள வைக்கும் ஆங்கில எழுத்து வன்மை; உறுதியான பார்ப்பன எதிர்ப்பாளர்; இம்மியளவும் சமரசத்துக்கு இடமில்லாமல் இறுதி வரை வாழ்ந்தவர். தனது ஆழமான புரிதலை – சிந்தனையை ஆங்கில புலமையை-தன்னுடைய அடையாளமாக்கிடவோ அதை வெளிப்படுத்தும் அரிதாரப் பூச்சுகளையோ முழுமையாக வெறுத்து ஒதுக்கியவர் அவர். உணர்ச்சியும் துடிப்பும் மிக்க உரையாடல் களுடன் சக மனிதர்களை நேசித்து, விளிம்பு நிலை மானுடனாகவே...

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி 0

தலையங்கம் – மோடியின் பார்ப்பன ஆட்சி

மோடியின் அமைச்சரவை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நிரம்பி வழிகிறது. முக்கிய துறைகளின் பொறுப்பை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று மோடி முடிவுக்கு வந்துவிட்டார் போலும்! 21 புதிய அமைச்சர்கள் நியமனத்துக்குப் பிறகு அமைச்சரவை யின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் பிறந்த ‘வைசிய’ சமூகம் முன்னேறிய ஜாதிப் பிரிவிலிருந்து பிறகுதான் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இராஜபுத்திர’ முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர். இவர்களைத் தவிர முக்கியப் பொறுப்புகளின் அதிகாரம் பார்ப்பனர்களுக்கே ‘தாரை’ வார்க்கப்பட்டுள்ளது. ஆர்.எ°.எ°. அமைப்பு, ‘பார்ப்பனர்-வைசியா-இராஜபுத்திரர்’ என்ற சமூக மேலாதிக்கக் குழுவினரின் கட்டுப்பாட்டில் அவர்கள் நலனையே பிரதிபலிக்கக்கூடிய அமைப்புதான். அதுவே அமைச்சரவையிலும் எதிரொலிக்கிறது. வெளிநாட்டுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா சுவராஜ், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, சிறு,குறு மற்றும்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

10 வேதகால அரசர்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை நடிகர் கமலஹாசன் வெளியிட்டார். – செய்தி ஏனய்யா, நீச பாஷையில் எழுதினீர்? சம° கிருதத்திலேயே எழுதியிருந்தா, விற்பனை இலட் சக்கணக்கில் பிச்சுண்டு போயிருக்கு மோன்னா… அடிப்படையில் தமிழ்ச் சமுதாயம் பெண்மையைப் போற்றும் சமுதாயமாகும். – மருத்துவர் இராமதாசு உண்மை! உண்மை! யாருக்காவது சந்தேக மிருந்தால் தர்மபுரி திவ்யாவைக் கேட்டு தெளிவு பெறலாம்! வண்டலூர் பூங்காவிலிருந்து புலி தப்பியது. கிராம மக்கள் பீதி. – செய்தி பயப்படாதீங்க! தமிழ்நாட்டில் புலி பயங்கரவாதம் தலைதூக்கிடுச்சின்னு சுப்பிரமணியசாமி நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு காப்பாத்திடுவார்! தமிழ்நாட்டில் 1442 அரசு மகளிர் பள்ளிக்கூடங் களிலும், 4278 ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் கழிப்பறைகளே இல்லை. – உயர்நீதிமன்றம் எத்தனையோ ஆயிரம் பிளாட்பாரங்கள் கோயிலே இல்லாமல் இருக்கு; பெருசா பேச வந்துட்டாங்க! ‘முத்த’க் கலாச்சாரத்தைக் கண்டித்து ‘எச்சில் துப்பும்’ போராட்டம் நடத்திய இந்து முன்னணி யினர் கைது. – செய்தி ‘எச்சில்...

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 0

உள்ளூர் ஆதிக்க ஜாதி காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்க! மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி விமலா தேவியை கொலை செய்தவர்கள் – உடந்தையாக இருந்த காவல்துறை யினரைக் கைது செய்யக் கோரி, மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் 26 அக்டோபர் 2014ல் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உசிலம்பட்டி விமலாதேவியின் கவுரவக்கொலையை கண்டித்தும், திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 11.11.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை எதிரில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்தில், சென்னை அருள்தா°, சென்னை நாத்திகன் ஆகியோர் ஜாதி மறுப்பு பாடல்களை பாடினர். பின்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் கோபி.இராம இளங்கோவன், மே...

காவிரி உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதியில் இறங்கி  போராட வேண்டும்: கழகத் தலைவர் கொளத்தூர்  மணி அறிக்கை 0

காவிரி உரிமையை பாதுகாக்க தமிழகமே வீதியில் இறங்கி போராட வேண்டும்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராகதொடர்ந்து செயல்படும் கர்நாடக அரசு மேலும் காவிரியின் குறுக்கே புதிதாக இரு அணைகள் கட்ட முயற்சிகள்மேற்கொள்வதை கண்டித்து திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வரும் நவம்பர் 22ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர்மணி வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகம், கர் நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் ஏற்றுகொள்ளும் வகையில், 1924ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி கர்நாடகம் கிருஷ்ண ராஜசாகர் அணையையும், தமிழகம் மேட்டூர் அணையையும் கட்டிக் கொண் டது. 1934இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதிலிருந்து 1974 வரை சராசரியாக ஒரு ஆண்டுக்கு 363.5 டி.எம்.சி. நீர் கர்நாடகத்திலிருந்து...

நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவாக… 0

நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவாக…

பிரபாகரன் ஆற்றிய முதல் மாவீரர் நாள் உரை இதுதான். இந்திய தமிழிழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, நவம்பர் 27 அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு நாளான – நவம்பர் 27ஐ – மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது – “எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாள், இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த 1207 போராளிகளை நினைவுகூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல்முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காகப் போரிட்ட படை வீரர்களின் பாதுகாப்புக்காக போரிட்ட படை வீரர்களின் நினைவாகவும் இப்படிப்பட்ட மாவீரர் நாள்களைக் கொண்டாடுவது வழக்கம்....

சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில்… 0

சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில்…

1957 நவம்பர் 26இல் பெரியார் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் பிரிவை தீயிட்டுக் கொளுத்தி, பல்லாயிரக் கணக்கில் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையேகியது கருஞ்சட்டைப் படை! அந்தப் போராட்டம் குறித்து, ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்த சில செய்திகளை இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஆடுமாடுகளைப் போல் • •அரசியல் சட்ட எரிப்பு சம்மந்தமான வழக்கு 11.12.57-ந் தேதி வாய்தா என்று முன்னமே தெரிவித்திருந்த அரசாங்கம் திருச்சியிலிருந்து இன்று மாலை 4 மணிக்கு 6 திறந்த லாரியில் ஆடு மாடுகளை அடைப்பதுபோல் அடைத்துக் கொண்டு வந்து மாயூரம் சப்டிவிசனல் மாஜி°ட்ரேட் கோர்ட்டின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினர். 5000 பொது மக்களுக்கு மேல் கூடியிருந்தனர். தொண்டர்களும் தோழர்களின் மனைவி, குழந்தைகள், கர்ப்பவதிகள், தள்ளாத தாய்மார்கள் யாவரும் உற்சாகத்துடன் கூடி யிருந்தனர். கைதான தொண்டர்களும் உற்சாகத் துடன் இருந்தார்கள். இரவு 7 மணிக்கு அதிகாரி இதனடியிற் கண்டபடி கேசை வாய்தா...

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்! 0

தலையங்கம் – கருநாடக “இந்து” துறவிகளைப் பாருங்கள்!

தமிழ்நாட்டில் இந்து மதத்தின் காவலர்களாக புறப்பட்டிருக்கும் அமைப்புகள், எவ்விதச் சமூக சிந்தனையுமின்றி பெரியார் இயக்கத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. ‘இந்து ஒற்றுமை’ பற்றி கூப்பாடு போடும் அவர்கள், அதற்கு தடையாக இருக்கும் ஜாதி, தீண்டாமைப் பற்றி பேசுவதே இல்லை. ‘தீண்டாமைக்கு’ உள்ளாக்கப்படும் மக்களும் ‘இந்துக்கள்’ தானே என்பது குறித்து இவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல், தமிழகத்திலும் வரவேண்டும் என்றால் உடனே ‘நாத்திகப் பிரச்சாரம்’ என்று கூக்குரலிடுகிறார்கள். இதோ, கருநாடகத்திலிருந்து ஒரு நல்ல செய்தி! மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்று கருநாடகத்தில் 3 நாள் பட்டினிப் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களே காவி உடை தரித்த இந்து மத சாமியார்கள் தான் என்பதே இதில் முக்கிய அம்சம். தலித் மற்றும் பகுத்தறிவாளர்களும் இந்தப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி...

மலேசிய பயணத்தில்  பெரியார் சந்தித்த எதிர்ப்புகள் 0

மலேசிய பயணத்தில் பெரியார் சந்தித்த எதிர்ப்புகள்

“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” என்ற தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார் ‘கவி’ எனும் தோழர் க.விநாயகம். இன்றைய மலேசியா வின் அன்றைய பெயர் ‘மலாயா’. அன்றைய மலாயாவில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னோடித் தமிழர்களையும் 1929 மற்ளும் 1954இல் பெரியார் ‘மலாயா’ வுக்கு வருகை புரிந்த வரலாற்றையும் ஆவணமாக பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. தமிழர் சீர்திருத்த சங்கம், தமிழர் நூல் நிலையம், பெரியார் பிறந்த நாள் விழாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் விரிவான செய்திகளை அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்துள்ளார் நூலாசிரியர். 1936இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ பெரியார் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது. ‘குடிஅரசு’ இதழில் இச்சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழவேள் சாரங்கபாணி நடத்திய ‘தமிழ்முரசு’ நாளேடு, தமிழர் களின் குரலாகவும் வரலாற்றுப் பதிவாகவும் வெளிவந்ததோடு சுயமரியாதை கொள்கை களுக்கு ஆதரவாக இருந்தது. மற்றொரு முன்னோடியான அ.கி. சுப்பையா, ‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’,...

பீகார் முதல்வரின் பெரியார் குரல்! 0

பீகார் முதல்வரின் பெரியார் குரல்!

“கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா?” என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கேட்டார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, “சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே” என்றார். “மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுபவர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்கு மட்டுமே சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால், இங்கே ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக்கிறது. இங்குள்ள மதத்தில் என்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கிறார்கள். இதன் காரணமாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடுகிறது. இங்கு மாத்திரமே பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் கடுமையாக...

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே! 0

வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே!

வேளாண் பல்கலையின் விவசாயக் கையேட்டில் பஞ்சாங்கங்களை திணித்திருப்பதை நீக்கக் கோரி கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கோவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று காரணம் சொல்லி மழை முன்னறிவிப்பு கையேடு ஒன்றினை தயாரித்து 2013ம்ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேலான மழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை துறையிலிருந்து பெற்று, அறிவியல் முறையில் ஆய்வு செய்து மாத வாரியாக ஒவ்வொரு மாவட்டங்களில் எதிர்பார்க்கப் படும் மழை அளவினை வெளியிட்டு அதற்கேற்றாற் போல் விவசாயப் பணிகளை செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு கையேட்டில் வானிலை துறை விவரங்கள் அடிப் படையில் ஒரு பகுதியாகவும், 14 பஞ்சாங்கங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழை குறிப்புகளை ஒரு பகுதியாகவும் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சென்னை சேலையூரில் பாகனை மிதித்துக் கொன்ற அக்கோயில் மடத்தின் யானைக்கு மதம் பிடித்திருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் போலிருக்கிறது. மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது. – எச். ராஜா ஆமாம்! எதுக்கும் வைகோ எச்சரிக்கையா இருப்பதுதான் நல்லது. மனுஷன் தனது கட்சி சாமியார்களப் புடிச்சு பில்லி சூன்யத்தை ஏவி விட்டாலும், விட்டுடுவாறு! அரியானா சாமியார் ராம்பாலை கைது செய் யஅரசுக்கு செலவு ரூ.26 கோடி. – செய்தி இதுக்கெல்லாம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செஞ்சிடுங்க… அப்பத்தான், நிதி தட்டுப்பாடு இல்லாம சாமியார்களை பிடிக்க முடியும்! ஆஸ்திரேலியாவில் மோடி பங்கேற்ற நிகழ்வில் இருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெறவில்லை. – செய்தி இனிமே வெளிநாடு போகும்போது, ‘கீதை’க்குப் பதிலாக இந்திய வரைபடத்தையே எடுத்துட்டுப்போய் பரிசாக கொடுத்துடுறதுதான் நல்லது! புனேயில் கோட்சேயை பாராட்டி, ஆர்.எஸ்.எஸ். நடத்த இருந்த நாடகத்துக்கு...

0

மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை நிறுவியதற்காக காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார் ‘முழக்கம்’ உமாபதி முறையான சிகிச்சை தர நீதிமன்றம் உத்தரவு!

‘முழக்கம் உமாபதி’க்கு முறையான சிகிச்சைகளை அளித்து அறிக்கை தர வேண்டும் என்று அரசு மருத்துவமனை தலைவருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர் திராவிடர் விடுதலைக் கழகச் செயல் வீரர் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் நவம்பர் 26 அன்று கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நவ.28ஆம் தேதி வழக்கு தொடர்ந்து, அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தினர். நீதிபதி வி. இராமசுப்பிரமணியன், வழக்கை விசாரணைக்கு அனுமதித்தார். கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு தமிழக அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. உடனடி நடவடிக்கையாக உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றி, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடி பதவி நீக்கம் செய்ய...

பெரியார் பார்வையில் தேசியம் – மொழி – கலாச்சாரம்! – எம்.எஸ்.எஸ். பாண்டியன் 0

பெரியார் பார்வையில் தேசியம் – மொழி – கலாச்சாரம்! – எம்.எஸ்.எஸ். பாண்டியன்

யார் வரலாறு? இந்தியாவின் பண்டைய இலக்கி யங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும் கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வரலாறே என்றார் பெரியார். மேல் சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத்தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத்திலும் அடித்தட்டு மக்களை அடக்கிவைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது; எல்லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார்புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு. பகுத்தறிவு ஒரு நெடும் பயணம்! மானுட விடுதலை அடிப்படை யிலான தேசிய உருவாக்கம் முடிவற்ற தொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந் தோறும் எதிர்கொள்ளும் என்பதை அவர்...

தலையங்கம்  ‘இராஜா’க்களின் மிரட்டல் 0

தலையங்கம் ‘இராஜா’க்களின் மிரட்டல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச்.ராஜா, “மோடியை கடுமையாக விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது” என்றும், “வைகோ நாக்கு தடித்து பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற ஆணவம்தான், இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது போலும்! மோடி அப்படி ஒன்றும் விமர்சனத்துக்கு அ ப்பாற்பட்டவரும் அல்ல. சார்க் மாநாட்டில் பல்வேறு நாட்டின் அதிபர்கள் பங்கேற்கும் மாநாட்டில், “இராஜபக்சே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று மோடி, ‘தேர்தல் அரசியலை’ப் பேசியிருப்பது சரியா? தமிழர்களை இனப்படுகொலை செய்தவர் இராஜபக்சே. ‘மனித உரிமை மீறல்’ குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டியவர் என்று அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகி நிற்கும் மனிதர். அவருக்கு மோடி வாழ்த்துக் கூறுவது பற்றி இந்த ‘இராஜா’க்களுக்கு ஆத்திரம் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இவர்கள்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

நடிகர்களை நம்பி பா.ஜ.க. கட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை. – தமிழிசை சவுந்தரராஜன் அப்படியா? ரஜினி, பா.ஜ.க.வுக்கு வர மாட்டேன்னு தனது முடிவை உறுதியா தெரிவிச்சுட்டாரா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை “பினாமி முதல்வர்” என்று கூறுகிறார்கள். – ஓ. பன்னீர்செல்வம் நியாயமான பேச்சு! ‘முதல்வர்’ என்று கூறுவதையே ஏற்க மறுக்கும் ‘முதல்வரை’ பினாமி முதல்வர் என்று எப்படிங்க சொல்லலாம்? இந்தியாவில் சிறைச் சாலைகள் அனைத்தும் கல்விச் சாலைகளாக மாறவேண்டும். – கிரண்பேடி அது முடியாது என்பதால்தான் கல்விச் சாலைகளையாவது சிறைச் சாலைகளாக மாத்துவோமேன்னு தீவிரமா, முயற்சி செஞ்சுகிட் டிருக்கோங்க! வாக்காளர்களுக்கு எந்த காலத்திலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். – மருத்துவர் இராமதாசு வாக்குறுதிதானே! ஓ, தாராளமாக தரலாமே! புதுவை முதல்வர் டெல்லி மாநாட்டில் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் அழுக்கு சாமியார் குரு பூஜையில் கலந்து கொண்டார். -செய்தி மோடியை சந்திச்சு என்ன...

பெரியாரின் இராமாயண நூல் தடையை நீக்கியவர் நீதிபதி கிருஷ்ண அய்யர் 0

பெரியாரின் இராமாயண நூல் தடையை நீக்கியவர் நீதிபதி கிருஷ்ண அய்யர்

(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘இராமாயணா-எ ட்ரூ ரீடிங்’ (Ramayana – a true reading) (‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற நூலின் மொழி பெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழி பெயர்ப்பையும் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு – தடை செல்லாது என்று அது தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றமும் உ.பி. அரசு இந்த நூலுக்கு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்புக் கூறி அப்பீலை தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் அளித்த அந்த தீர்ப்பின் விவரம் அவரது நினைவாக இங்கே தரப்படுகிறது. செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.1976) இந்தத் தீர்ப்பு வந்தது. அவசர நிலைகாலம் அது; விடுதலை தணிக்கைக்கு உள்ளாகி வந்தது; பார்ப்பன அதிகாரிகள் ‘விடுதலை’யில் இதை வெளியிட...

கருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு 0

கருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு

தமிழ்நாட்டு அமைச்சர்கள் கடவுளுக்கு மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல் என்று மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கும்போது கருநாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா? அம்மாநில முதல்வர் சித்தராமய்யாகூட ஒரு பகுத்தறிவாளர்தான். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கலால்வரித் துறை அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி இன்னும் ஒரு படி மேலே போய் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் இயக்கம் நடத்தி வருகிறார். அம்மாநில அரசு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர திட்டமிட்டது. பாரதிய ஜனதா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்து வருகிறார், அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி. இதற்காக, அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி இரவு சுடுகாட்டில் “பேய்” நடமாடுகிறது என்ற மூடநம்பிக்கையை அம்பலப் படுத்தத் திட்டமிட்டார். தனது...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை 0

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை

கழகச் செயல்வீரர்களே! ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ உறுப்பினர் சேர்க்கை தொடங்கி விட்டீர்களா? ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. நான்கே பக்கங்களில் வெளிவரும் அந்த ஏடு, காலத்தின் அறை கூவலுக்கு உறுதியாக முகம் கொடுத்து வருகிறது என்ற உண்மை, அதன் வாசகர்களுக்குத் தெரியும். பெரியார் எழுத்து-பேச்சுகளை ‘குடிஅரசு’ தொகுதிகள் வழியாக நாம் வெளியிட முயன்றபோது அதற்கு தடைபோட முயன்றவர்கள் முன் வைத்த வாதங்களை முனை மழுங்கடித்தது ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’. பெரியாருக்கு எதிராக திசை திருப்பும் வாதங்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் முன் வைக்கும் சக்திகளின் முகத் திரையைக் கிழித்துக் காட்டி வருவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தான். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தன்னை ஒப்படைத்துக் கொண்டு விடாமல் எந்த முகாமிலிருந்து பெரியாரிய எதிர்ப்புக் குரல் வந்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பதிலும் எங்கேயிருந்து பெரியாரியத்தின் ஆதரவுக் குரல் வந்தாலும் தயக்கமின்றி வரவேற் பதிலும் முன்னிற்பதும் ‘புரட்சிப்...

‘இராமனு’க்குப் பிறந்தவர்களே நாட்டை ஆளவேண்டும் என்போரே! ‘இராமன்’ எப்படி பிறந்தான் தெரியுமா? 0

‘இராமனு’க்குப் பிறந்தவர்களே நாட்டை ஆளவேண்டும் என்போரே! ‘இராமன்’ எப்படி பிறந்தான் தெரியுமா?

மத்திய இணை அமைச்சராக இருக்கும் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பெண் சாமியார், டெல்லியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “டெல்லியை இராமனுக்குப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா? அல்லது முறை தவறிப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா?” என்று பேசியுள்ளார். இதற்கு நாடாளுமன்றத்திலும் நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இராமனுக்குப்’ பிறந்தவர்கள்தான் நாட்டின் நல்லாட்சிக்குத் தகுதியானவர்கள். நாட்டின் உண்மையான குடிமக்கள் அவர்கள்தான் என்ற இந்தக் கருத்து, ஏதோ, இந்தப் பெண் அமைச்சரின் உணர்ச்சிகரமான பேச்சு என்றோ, மதவெறித் தனத்தின் வெளிப்பாடு என்றோ கருதிடக் கூடாது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், ‘இராமனை’ தங்களின் கடவுளாக ஏற்றுக் கொண்டால் இந்தியா வில் வாழலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை வழங்கிய கோல்வாக்கர் எழுதியிருக்கிறார். 1939இல் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் பாடிய பாடல், இப்படி கூறுகிறது: “நான் பிறந்த தாய்நாடே உன்னை வணங்குகிறேன் என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன் எங்களை விரைவில்...

உயர்நீதிமன்ற புதிய நியமினங்களில்  மேலும் பார்ப்பனர்களை நியமிக்க முயற்சியா? 0

உயர்நீதிமன்ற புதிய நியமினங்களில் மேலும் பார்ப்பனர்களை நியமிக்க முயற்சியா?

சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கான 60 இடங்களில் தற்போது 43 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 17 பேருக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடக்க இருப்பதாக தெரிகிறது. காலியாக உள்ள 17 நீதிபதிகள் பதவிகளில் பார்ப்பனர்களைக் கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம். ஏற்கெனவே தலைமை நீதிபதி, இரண்டாவதுநிலையில் உள்ள நீதிபதி உள்பட 7 பார்ப்பனர்கள் இருக்கும் நிலையில், மேலும் பார்ப்பனர்களை நியமிப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். இதில் பார்ப்பனரல்லாதவர்களை தேர்வு செய்வதற்கு 50 வயதுக்கு மேலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் 50 வயதுக்கு கீழே உள்ளவர்களாக தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. 50 வயதுக்குள்ளே தேர்வு செய்யப்படும் பார்ப்பனர்கள், உச்சநீதிமன்றம் வரை செல்லவும் நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியத்தில்’ இடம் பெறவும் இயலும் என்பதால் இப்படி ஒரு சதி திட்டமிடப்படுகிறது. சமூக நீதிக்கு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம் தமிழகம். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது இதே போன்று பார்ப்பனர்களை அதிகமாகக் கொண்ட நீதிபதிகள் பட்டியல்...

இளமையை தொலைத்த பேரறிவாளனும் ‘பிரிட்ஜ்மேனும்’ 0

இளமையை தொலைத்த பேரறிவாளனும் ‘பிரிட்ஜ்மேனும்’

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, இளமைக் காலம் முழுதும் 27 ஆண்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்த ஒருவர், இப்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரோனி பிரிஜ்மேன் என்ற கருப்பர் இனத்தைச் சார்ந்த அவர், விடுதலை செய்யப்பட்டதற்கான காரணம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “இவர்தான் கொலைகாரர்; அதை நான் நேரில் பார்த்தேன்” என்று அமெரிக்க போலீஸ் ஒரு 12 வயது சிறுவனைப் பிடித்து பொய்சாட்சி சொல்ல வைத்தது. இந்த சம்பவத்தை 2011இல் ‘சீன்’ என்ற அமெரிக்க பத்திரிகையின் செய்தியாளர், மீண்டும் புலனாய்வு செய்தார். போலீஸ் பொய் வழக்கை தயாரித்தது உண்மை என்று தெரிந்தவுடன், “அப்பாவிகளுக்காக உதவும் வழக்கறிஞர் குழு” பிரிட்ஜ்மேனுக்காக வழக்கை நடத்த முன் வந்தது. 27 ஆண்டுகளுக்கு முன் பொய் சாட்சி சொன்ன 12 வயது சிறுவன் தனது சாட்சியத்தை திருத்திக் கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். இப்போது நீதிமன்றம் அவரை விடுதலை...

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்! 0

தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்!

பார்ப்பனர்கள் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் தொடர்ந்து ஆதிக்க சக்திகளாகவே நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏதோ விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல எழுதவும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் சேஷாத்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுதியிருக்கிறார். சமுதாயத்தை இப்போதும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்களின் மேலாண்மையைத் திணித்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்கள்தான். சிற்பி உருவாக்கிய ‘கடவுள் சிலைக்கு’, சக்தியூட்டக் கூடிய தங்களின் மந்திரம் தான் என்கிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட கோயிலானாலும், புனரமைக்கப்பட்ட கோயிலானாலும் அதன் தீட்டுகளை கழித்து தூய்மைப்படுத்தும் ‘கும்பாபிஷேக’ உரிமை, தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கோயிலுக்குள் கர்ப்பக்கிரகம் வரை நுழைந்து கடவுளை நெருங்கவும், அந்தக் கடவுளிடம் தங்களது சம°கிருத மொழியிலேயே உரையாடவும் தாங்கயே உரிமைக்குரியவர்கள் என்று மார்தட்டுகிறார்கள். திருமணமானாலும், வீடு திறப்பு என்றாலும் 60ஆம் திருமணமானாலும் இறந்தவர்களுக்கு ‘திதி’ என்றாலும் அதற்கு வேத மந்திரங்களை ஓதி கடவுள்களை ஏற்கச் செய்யும் ‘காப்பீட்டு உரிமைகள்’...

தலையங்கம் – எது ‘தாய் மதம்’? 0

தலையங்கம் – எது ‘தாய் மதம்’?

இந்துக்கள் அல்லாதவர்கள் – இந்து மதத்துக்கு திரும்புவது, மதமாற்றம் அல்லவாம்! அதற்குப் பெயர் ‘தாய் மதம் திரும்புதல்’ என்கிறது சங் பார்ப்பன பரிவாரம்! வழமைபோல் இதுவும் அவர்கள் முன் வைக்கும் ஒரு புரட்டுவாதம் தான்! இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் தாய் மதம் ‘இந்து’ என்றால், ‘இந்து’ என்ற சொல் – வேதம், புராணம், சமஸ்கிருதம் உள்ளிட்ட – எந்த நூலிலும் இடம் பெறாதது ஏன்? இது 1927 ஆண்டிலேயே பெரியார் எழுப்பிய கேள்வி; இதுவரை விடை கிடைக்காத கேள்வி. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகனாக’ கொண்டாடும் இராஜகோபாலாச்சாரி எனும் இராஜாஜி, “இந்து மதம் என்பது அண்மைக் காலத்திய புதிய பெயர்” என்கிறார். (ஆதாரம்: Hinduism-Docrine and way of life) “இந்துமதம் தெளி வற்றது; வரையறை ஏதும் இல்லாதது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த நீதிபதி இராசமன்னார் ஒரு தீர்ப்பில் கூறினார். (மைக்கேல் எதிர் வெங்கடேசன் வழக்கு -1952) “இந்து...

பகவத்கீதைப் பற்றி விவேகானந்தர் கூறியது என்ன? 0

பகவத்கீதைப் பற்றி விவேகானந்தர் கூறியது என்ன?

பகவத் கீதையை தேசிய நுலாக்க முயற்சிக்கிறது மோடி அரசு. இவர்கள் போற்றும் விவேகானந்தரே, பகவத் கீதை மீதான சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். அக்கருத்துகளின் தொகுப்பு இது. கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வியாசரால் நூல் எழுதப்பட்ட காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்திலேயே கீதையும் அதனுடன் இருந்ததா அல்லது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். கிருஷ்ணன் எனும் பெயரால் வரலாற்றில் யாரேனும் இருந்தாரா? குருச்சேத்திரப் போர் உண்மையில் நடந்ததா? அர்ச்சுனனும் அவனைப் போன்ற பிறரும் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவரா என்பதையெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். வேத வியாசர் என்ற பெயரில் பற்பல காலகட்டங்களில் பலர் வாழ்ந்துள்ளனர். இவருள் கீதையை எழுதியவர் யார்? வியாசர் என்பது ஒரு பட்டம்தான். தனிப்பட்ட யாருடைய பெயரும் அல்ல. புராணங்களை இயற்றுகின்ற எவரையும் வியாசர் எனும் பெயரால் அழைப்பது அக்காலத்திய மரபு. ஆதிசங்கரர் பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதுவதற்கு முன்னர் கீதை...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

பகவத் கீதையை காமசூத்திரத்தோடு ஒப்பிட்டு ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் இழிவுபடுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம் வாத்சாயர் எழுதிய சமஸ்கிருத ‘இலக்கிய’மான காமசூத்திரத்தை இந்து முன்னணி, இப்படி இழிவு படுத்தலாமா? நோயிலிருந்து குணம் பெற பக்தர்கள் ‘பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலை மீது உருளும் ‘பிரார்த்தனை’யை தடை செய்யக் கூடாது. – உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வாதம் அதுக்கு அம்புட்டு சக்தியா? அப்படின்னா, மோடி யிடம் பேசி, இந்த ‘எச்சலை’களுக்கு காப்பீட்டு உரிமை வாங்கிடுங்கோ… கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் பள்ளிகளுக்கு விடுமுறையை இரத்து செய்து, மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவு. – செய்தி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையும் கிறிஸ்துவர்கள் கொண்டு வந்தது தானே! அதையும் இரத்து செய்து பாருங்களேன்…! திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு வரும் பக்தர்கள் – அங்குள்ள நளன் குளத்தில் முழுக்குப் போட்டு, கட்டிய ஆடையை குளத்திலேயே விட்டு விடுகிறார்கள். – செய்தி முழுக்குப் போட்ட இந்த நாள் முதல் நீ...

1957; நவம்பர் 26 : ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்! 0

1957; நவம்பர் 26 : ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்!

பொள்ளாச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நவம்பர் 26ஆம் நாள் கீழ்க்கண்ட சட்ட எரிப்புப் போராட்டத்தை விளக்கும் துண்டறிக்கையை மாணவர்கள்-மக்களிடம் வழங்கினர். பிறவி வருண சாதி ஒழிப்புக்காக பெரியாரும், அவரின் இயக்கமும் நடத்திய சட்ட எரிப்புப் போராட்டத்தின் 57 ஆம் ஆண்டின் நிறைவு நாள் சிந்தனைகள். பெரியார் என்ற அந்த மாமனிதர் தமிழர்களின், உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மேற்பாட்டிற்காக, எடுத்த போராட்டங்கள் ஏராளம்! 26.12.1926இல் சுயமரியாதை இயக்கம் நிறுவப்பட்ட நாள் முதற்கொண்டு பெரியார் மறையும் நாள் வரையில் “பிறவி வருண சாதி ஒழிப்பில்” நாட்டம் கொண்டிருந்தார். 1929 செங்கற்பட்டு, 1930 ஈரோடு, 1931 விருதுநகர் மாநாடுகளிலும், 1932 “சுயமரியாதை இயக்க சமதர்மம் கட்சி”யாரின் வேலைத் திட்ட க் கூட்டத்திலும், 1940 திருவாரூர், 1944 சேலம், 1945 திருச்சி, 1948 தூத்துக்குடி நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் “பிறவி வருண சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தீண்டப்படாதாருக்குச் சமூக...

அடக்குமுறை-கருத்துரிமை பறிப்புகளை எதிர்த்து 2014இல் கழகத்தின் எதிர்நீச்சல் பயணம் 0

அடக்குமுறை-கருத்துரிமை பறிப்புகளை எதிர்த்து 2014இல் கழகத்தின் எதிர்நீச்சல் பயணம்

அடக்குமுறைகள், கருத்துரிமை பறிப்புகள் என்றுஅரசுகளின் தடைகளைத் தாண்டி, திராவிடர் விடுதலைக் கழகம் எதிர் நீச்சலில் களப்பணியாற்றிய ஆண்டு 2014. தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கூட்டங்கள் என்றாலும், பகுத்தறிவு பரப்புரையானா லும் தமிழர் திருநாள் விழாவானாலும் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிய தமிழக காவல்துறை அதன் வழியாக தனது ‘கொடூர முகத்தை’ வெளிச்சப்படுத்தியது. இதற்காக கழகத் தோழர்கள் கொடுத்த விலை அதிகம். 8 மாதங்கள் வரை கழகத் தோழர்கள், கழகத் தலைவர் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை யிலடைக்கப்பட்டனர். அடக்குமுறைகளை எதிர் கொண்ட கழகம், உறுதியாக தனது கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தது. மக்கள் சந்திப்பு இயக்கம், கழகத் தீர்மானங்கள், விளக்கப் பரப்புரை, அகமண முறை எதிர்ப்புப் பரப்புரை, கிராமம் கிராமமாக பகுத்தறிவு பரப்புரை (சேலம் மேற்கு மாவட்டம் 20 ஊர்களில்) என்று ஒரே நேரத்தில் நான்கு பரப்புரை இயக்கங்களை – ஒரு வாரம், 10...