Category: பெரியார் முழக்கம் 2021

தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவ நெறியாளர் கலையரசியின் ஆரிய எதிர்ப்பு முழக்கம்

தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவ நெறியாளர் கலையரசியின் ஆரிய எதிர்ப்பு முழக்கம்

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ என்ற தலைப்பில் கிறிஸ்துவ மத நல்லிணக்க அமைப்பு சென்னையில் டிசம்பர் 20, 2021இல் ஒன்றை நடத்தியது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். விழாவில் இஸ்லாம், முஸ்லிம், சைவ மதப் பிரிவினர் பங்கேற்றுப் பேசினர். சைவ நெறியாளரும் பரப்புரையாளருமான கலையரசி நடராசர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி. இந்து மதம் என்ற ஒன்றை, இங்கே பேசும் போது அருமை நண்பர் இனிகோ கூறினார். இந்து என்ற சொல்லையே குறிப்பிடாதீர்கள். அது உருவாகி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. நாங்களெல்லாம் சைவர்கள். எப்படி, ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழ்’ என்னுடையது. என்னுடையது என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி கிருத்துவர்களாக இருந்தாலும் சரி தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் எங்களுடைய சகோதரர்கள். யார் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களை பிரிய மாட்டோம், எங்களையும் அவர்கள் பிரிய மாட்டார்கள். இனிகோ பேசும்போது இந்துக்கள் என்று குறிப்பிட்டார்....

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் மேட்டுப்பாளையம், பேருந்து நிலையம் அருகில் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 03.01.2021 ஞாயிறு, 04.01.2021திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இப்பயிலரங்கில், முதல் நிகழ்வாக தோழர்கள் சுய அறிமுகத்துடன் பயிலரங்கில் கலந்து கொள்ளும் புதிய தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெண் தோழர்கள் கொள்கைப் பாடல்களைப் பாடினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயிலரங்கின் அவசியம் குறித்தும் பெரியாரியலை, ‘வாழ்க்கை-சமூகம்-மாற்றம்’ என்ற மூன்று தளங்களில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் “செயல்பாடுகள், கட்டுப்பாட்டு நெறி முறைகள்” ஆகியவை குறித்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இணையதள செயல்பாடுகள் குறித்து இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உரையாற்றினார். இரண்டாம் நிகழ் வாக ‘பெரியாரின் மொழிக்...

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

தமிழ்நாட்டை உ.பி., ம.பி., இராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமாக்க பா.ஜ.க. சூழ்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் களத்தில் உருவாக்கி வருவதை கழகத் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது. உள்ளூர் மட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்தும் துண்டறிக்கை வெளியீடுகள் வழியாக கருத்துகளைப் பரப்புவதுமான பரப்புரைத் திட்டங்களை வகுப்பது குறித்தும் தலைமைக்குழு பரிசீலித்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமைக் குழுக்கூட்டம் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் ஏடுகள், போராட்ட திட்டங்கள், அரசியல் நிலவரங்கள், துணை அமைப்புகளின் செயல் பாடுகள், மாவட்ட நிர்வாக அமைப்புகளில மாறுதல்கள், கழகத் தோழர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. 1)    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் காரணமாக வேறு வழியின்றி இடைநிறுத்தம்...

‘சரியான பெயர்’

‘சரியான பெயர்’

“முருகா, இந்த சங்கிகளை அடக்க வர மாட்டாயா?” என்று உண்மையான சைவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். “நீ இந்துவாக இருந்தால் மட்டும் போதாது; நீ விபூதியணிந்து சைவக் கோலம் பூண்டால் மட்டும் நாங்கள் மதிக்க மாட்டோம்; இந்த பக்தி கோலத்தோடு மோடிஜிக்கு ‘ஜே’ போட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.யை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க. ஒழிக என்று கூற வேண்டும்; அப்போதுதான் நீ இந்து; இல்லையேல் இந்து துரோகி” என்று சங்கிகள் பேசும்போது, உண்மை பக்தர் கள் வேறு என்னதான் செய்வார்கள்? கலையரசி நடராசன், சைவத்தில் ஊறி நிற்பவர். நெற்றியில் விபூதி கோலத்துடன் காட்சியளிப்பவர். சைவம் – இந்து மதம் அல்ல என்று ஓங்கி முழங்கு கிறார். என்னுடைய ‘தமிழ்’ மொழி யோடு ‘இந்து’வையும் சமஸ்கிருதத்தை யும் இணைக்கவே கூடாது என்கிறார். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறார். கலையரசியைப் போல் எத்தனையோ சைவர்கள் – தமிழர் என்ற உணர்வோடு களத்துக்கு...