Category: பெரியார் முழக்கம் 2004

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி 0

ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

தென்னகத்தில் – சங் பரிவார் சக்திகள் வேகமாகக் காலூன்றி வருவது பற்றி ‘பிரன்ட் லைன்’ இதழ் (மார்ச் 26, 2004) கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கருநாடக மாநிலங்களின் நிலை அதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் சங் பரிவார் எப்படி வளர்ந்து கொண்டிருக் கிறது; குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில்; என்பது பற்றி, எஸ்.விசுவநாதன் எழுதியுள்ள கட்டுரையை – இங்கு தமிழில் வெளியிடுகிறோம். மூத்த பத்திரிகையாளர் விசுவநாதன், ஆழமான சமூகக் கண்ணோட்டத்தோடு, தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து எழுதி வருபவர். “தமிழ்நாட்டில் இன்று ஜெயலலிதா தலைமையில் ஆன்மீக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” குடந்தையில் – மகாமகக் குளத்தில் புனித முழுக்குப் போட்டுவிட்டு – தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.இராமசாமி, மார்ச் 6ம் தேதி இவ்வாறு பத்திரிகையாளர் களிடம் கூறினார். குடந்தை மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டவர்கள் சுமார் 10 லட்சம் பக்தர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் – திரிசூலங்களைக்...