Tagged: திப்புசுல்தான்

சங்பரிவாரங்கள் திப்பு சுல்தானை எதிர்ப்பது ஏன்?

கர்நாடக மாநில அரசு ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’ என்று பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்கு பா.ஜ.க. சங்பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கி வருகின்றன. திப்புசுல்தான் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012 பிற்பகுதியில் பாஜகவிலிருந்து வெளியேறி கர்நாடக ஜனதா பக்சா கட்சி யினை துவக்கிய எடியூரப்பா, திப்பு சுல்தான் மாடல் தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்து மீண்டும்அதன் தலைவராகி தற்போது நவம்பர் 10ல் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழா எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார். மைசூர் மன்னரான திப்பு சுல்தான் (1750-1799) சமூக அடையாளங்களைக் கடந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒவ்வொருவருடைய உருவ மாகத் தோற்றமளிக்கிறார். மைசூரின் வேங்கையாக திப்பு சுல்தான் கருதப்பட்டார். 19ஆம்நூற்றாண்டின் கன்னட நாட்டுப்புற பாடல்களில், போர்க்களத்தில் மரணமடைந்த திப்புவின்மரணம் பாடல்களாக வலம் வந்தன. கர்நாடகாவின்...

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

திப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது!

கோபி கழக மாநாட்டில் அப்துல் சமது ஆற்றிய உரை கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) இன்றைக்கு ‘பாரதமாதா கி ஜே’ எனும் கோசம் போடும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக் கும்பலை பார்த்துக் கேட்கின்றேன், இந்த பாரதமாதா அடிமை சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தபோது அதை உடைப்பதற்கு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட போரிட்டவர்களில் எத்தனை பேர் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன காவிக்கும்பல்கள்?  ஒருவர் கூட இல்லையே! விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், பார்ப்பனக் கும்பல் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணமான பார்ப்பனீயம் ஒடுக்கப்பட்டிருக்கிறதா அல்லது நசுக்கப்பட்டிருக்கிறதா? எனக் கேட்கிறோம்.  இந்த கும்பலுக்குதான் இன்றைக்கு தேசபக்தி பீறிட்டு கொண்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல காட்டிக்கொடுத்தது...

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...