Tagged: அய்.நா

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை. தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில்...

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பால்ய விவாகம்’; அய்.நா. எதிர்ப்பு

பார்ப்பனியம் – சமூகத்தில் திணித்த பல்வேறு கொடுமைகளில் ஒன்று ‘பால்ய விவாகம்’ அதாவது குழந்தைத் திருமணம். பார்ப்பனர்கள், உயர்ஜாதிக் குடும்பங்களில் பிற ஜாதியினருடன் ஜாதிக் கலப்பு நிகழ்ந்து விடக்கூடாது என்பதற் காகவே இந்தக் கொடூரமான முறையைத் திணித்தனர். இந்த சமூகக் கொடுமை பல்வேறு நாடுகளில் பரவி யுள்ளது. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. குழந்தைத் திருமணங்கள் பெருமளவு நடைபெறும் எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட 107 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. உலகம் முழுதும் நடக்கும் 6 கோடி குழந்தை திருமணங்களில் 40 சதவீதம், அதாவது 2.4 கோடி குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவில் இந்த பால்ய விவாகம் சட்டத்தை மீறி பரவலாக நடந்து வருகிறது. அய்.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்தியா,...

அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்

அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்

[பல்வேறு செய்தி ஏடுகளில் புதைந்து கிடக்கும் செய்திகள், சிந்தனைகளைத் தேடிப் பிடித்து வாசகர்களின் சிந்தனைக்கு தொகுப்பாக முன் வைக்கப்படுகிறது.] ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் ஒன்றிரண்டு ஆங்கில இதழ்களோடு நின்று போன ஒரு முக்கிய செய்தி இது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அய்.நா. எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வந்தது என்ற குற்றச்சாட்டை இப்போது அய்.நா.வே ஒப்புக் கொண்டுள்ளது. அய்.நா.வில் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன், அவரது ஆலாசகர் என்ற பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார் என்ற இந்தியாவைச் சார்ந்த மலையாள அதிகாரி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அய்.நா.வின் பல்வேறு பிரிவுகள் இனப் படுகொலையின்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய விடாமல் முடக்கினார். இது குறித்த விரிவான தகவலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருக்கிறது. அவ்வளவும் உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் அய்.நா.வின் அமைப்புகள் தங்கள்...

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

உலகத் தமிழர்களின் ஒற்றை கோரிக்கை :இலங்கை போர்க் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை!

மீண்டும் மார்ச் மாதம் அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா என்ற இரண்டு கேள்விகளுக்குள் பிரச்சினைகளை முடித்து விடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. அமெரிக்க தீர்மானத்தின் உள்ளடக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டியது அவசியமாகும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்து முடிந்த வுடனேயே 2009இல் அய்.நா. மனித உரிமைக் குழுவில் சுவிட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அந்தத் தீர்மானம், இனப்படுகொலை என்றுகூட குறிப்பிடப்படவில்லை. மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. அந்தத் தீர்மானத்தை முடக்கி தோல்வியடையச் செய்வதில் இந்தியா, அய்.நா.வில் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு இலங்கைக்காக ஆதரவைக் கேட்டது. தீர்மானத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசு, “பயங்கரவாதத்தை” ஒழித்துவிட்டதைப் பாராட்டி, ஒரு பாராட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவர ஏற்பாடு செய்தது. அய்.நா.வில் அத்தீர்மானம் நிறைவேறியது. 2012 ஆம் ஆண்டில் அய்.நா.வில்...

இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு

இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு

இராஜஸ்தான், கருநாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மனித உரிமை அமைபபுகள் சென்னையில் மார்ச் 8, 9 தேதிகளில் கூடி தூக்குத் தண்டனை ஒழிப்பு மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் செயல் திட்டங்களை வகுத்தன. இந்திய அரசு மரணதண்டனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் நம்பிக்கையுள்ள தேசிய மாநில கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் வேண்டுகோள் விடப்பட்டது. கருணை மனு காலதாமதத்தின் அடிப்படையில் 15 தூக்குத் தண்டனை கைதிகளை உச்சநீதிமன்றம் விடுவித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனித உரிமைக் குழுக்கள் வரவேற்றன. இரண்டாம் நாள், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்; அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் விரிவாக விவாதித்தனர். தமிழர் பிரச்சினை என்ற...

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

தலையங்கம்: ஏமாற்றம்தான்; ஆனாலும்…

இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மாந்தநேயத்துக்கு எதிரான குற்றங்களை தனக்குத் தானே இலங்கை அரசு விசாரிக்கும் நாடகத்துக்கு இம்முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. அய்.நா.வின் 25ஆவது மனித உரிமை மன்றத்தில் இங்கிலாந்து, மொரிசியசு, மான்டி நிக்ரோ, மாசிடோனியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவத்தையும் சிங்கள மக்களையும் குடியேற்றி வருவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கி வைத்து விட்டது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலிருந்து அன்றாட சிவில் நிர்வாகம் வரை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நேரடிக் கண் காணிப்புக்கு உடனடியாக இலங்கை அரசு உட்படுத்தப்படா விட்டால், தமிழர் நில ஆக்கிரமிப்புகள் மேலும் தீவிரமாகிவிடும் என்ற நியாயமான அச்சம்...

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...

தலையங்கம் : கள்ள மவுனம்! 0

தலையங்கம் : கள்ள மவுனம்!

19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...