வினாக்கள்… விடைகள்…!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடும். – ஞான தேசிகன்
அப்படியானால் ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் அணிகளுடன்கூட கூட்டணி கிடையாதா?

தமிழ்நாட்டில் ‘தீண்டாமை’ என்பது எல்லாம் அறவே கிடை யாது. – தந்தி டி.வி.யில் மருத்துவர் இராமதாசு
ஓ, அதுக்காகத்தான் ‘திராவிட கட்சிகள்’ தமிழகத்தை நாச மாக்கிவிட்டன என்கிறீர் களா? புரியுது! புரியுது!

இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை நடத்த – அய்.நா. நியமித்த குழு இந்தியா வருவதற்கு மோடி ஆட்சி ‘விசா’ மறுப்பு. – செய்தி
ஸ்ரீராமபிரான் நடத்திய யுத்தத்துக்குப் பிறகு, இலங்கை யில் எந்தப் போரும் நடந்தது இல்லை. இதுவே எங்க வெளிநாட்டு ‘இந்துத்துவா’ கொள்கை! புரிஞ்சுக்குங்க.

ஜாதியமைப்பு மிகச் சிறப்பானது; அதற்கு எதிராக எந்த புகாரும் பழங்காலங் களில் வந்ததே இல்லை. – வரலாற்று ஆய்வுக் கழகத் தலைவர் சுதர்சன் ராவ்
மோடிஜி, இப்படி ஒரு ஆசாமியை எந்தக் காட்டி லிருந்து பிடிச்சுட்டு வந்து இந்தத் தலைவர் சிம்மா சனத்தில் உட்கார வெச் சிருக்கீங்க? வரலாற்றை ஆராய்ந்து கிழிச்சிடுவாரு.

இந்திய மொழிகள் எல்லா வற்றுக்குமே சம°கிருதம்தான் தாய். – மத்திய மனிதவளத்
துறை சுற்றறிக்கை
அப்ப ஒரு ‘டவுட்டு’! தாயான அந்த மொழியை, தாய்க்குலம் கோயில்களில் ஓதுவதற்கு ஏன் தடை போடுறீங்க? சொல்லுங்க… சொல்லுங்க…

இந்த ஆண்டு இறுதிக் குள்ளா வது இராஜேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க வேண்டும்.
– ‘தமிழ் இந்து’வில் ஆய்வாளர் கட்டுரை
எடுக்கலாம்; ஆனால், இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்காதவியை தெலுங்கு நாட்டுக்காரனான கீழைச் சாளுக்கிய அரசனுக்கு திருமணம் செய்து வச்சிருக் கானே! தூய தமிழ்த் தேசிய வாதிகள் இதை ஏற்பார்களா? யோசித்துப் பாருங்க!

பெரியார் முழக்கம் 31072014 இதழ்

You may also like...

Leave a Reply