வைகறைவாணன் விடைபெற்றார்!
தோழர் வைகறை வாணன் (77) முடிவெய்தினார். பெரியாரிய பொதுவுடமை சிந்தனை கொண்டவர். ஈழ விடுதலைப் பிரச்சனையில் முனைப்புடன் செயல்பட்டவர்.
குத்தூசி குருசாமி எழுத்துக்களையும், தர்ம தீர்த்த அடிகளார் மலையாளத்தில் எழுதிய நூலை தமிழாக்கம் செய்து “இந்து மத கொடுங்கோன்மை வரலாறு” என்ற நூலையும் தனது சாளரம் பதிப்பகம் வழியாக வெளியிட்டவர். அவர் நடத்திய `பாலம்’ இதழ் வழியாக ஈழத்துக் கவிஞர்கள், கவிதைகள், நாவல்களை வெளியிட்டு பதிப்பித்தவர்.
விடுதலைப் புலிகளின் கவிஞரான புதுவை ரத்தினதுரை கவிதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். இந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு விடை பெற்றுக் கொண்டு விட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 06082026
