அன்புமணியின் அற்பத்தனமான உளறல்கள்!
பாமக தலைவர் அன்புமணி திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மதுவால் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று வாட்ஸ்அப் வதந்தியை பேசியுள்ளார். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளள 2023 ஆண்டு சாலை விபத்துக்கான விவரத்தில் மது போதையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை பதிவுகளில் தமிழ்நாடு 7வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 320 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உ.பியில் 3808-ஆகவும், ம.பி-1209 ஆகவும், ஒடிசா-649 ஆகவும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.
மதுபோதை வாகன விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 74 பேர் இறந்ததாகவும் 14வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. ஆனால் உ.பியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1822. ஒடிசாவில் 254 மற்றும் ம.பியில் 219 பேர் மதுபோதையின் காரணமாக வாகன விபத்தில் இறந்துள்ளனர். உண்மையை மறைத்து பொய் பரப்புரையை செய்து வருகிறார் அன்புமணி.
பெரியார் முழக்கம் இதழ் 16042026
