தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது..
தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது.
நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார்.

பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

You may also like...