Author: admin

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் 0

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாக சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித்திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோட்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேக்ஷகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவானான ஸ்ரீமான் வி.சி.வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து தங்கள் சமூகத் தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக்காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந் தன்மை யையும் குலாபிமானத்தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்டதினாலே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை ஸ்தானம் கிடைத்து விடும் என்று நம்பி அஸ்வாரஸ்யமாய் இருந்துவிடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரசாரம் செய்து கிராமத்து குடியான மக்களு...

சூத்திரர்கள்

சூத்திரர்கள்

இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது? நம் பின்சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது? இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா? இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வந்திருக்கிறேனே ஒழிய முட்டாள்தனமல்ல – துவேசமுமல்ல. (வி.17.11.57;பெ.செ.)

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள்

1. மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. 2. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. 3. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. 4. கடவுளர் கதைகள்- சாமி’. விலை-ரூ.20. 5. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. 6. பக்தர்களுக்கு சில கேள்விகள். விலை-ரூ.5. 7. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. 8. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. 9. பெரியார்-அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடுகள்-ஆ.ராசா. விலை-ரூ.20 10. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. 11. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 12. ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 13. பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்-விடுதலை இராசேந்திரன்,விலை-ரூ.10 14. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம் மயிலாப்பூர், சென்னை-600 004....

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும். 22.9.2015 அன்று முதல் 2.12.2015 அன்று வரை வாரம் ஒரு நாள் பரப்புரை பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22.09.15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழகக் கொடிகம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே காவை இளவரசன் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என...

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. பெரியாரிடம் கருத்து மாறுபாடுகளை யும் கடந்த பெருந்தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. நான் 1939 இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந்தார்கள். இடப் பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிந்தேன். நான்கு திங்கள்அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்தபொழுது பல முறை அவர் ஊன் உண்பதை நான்...

பூணூல் அறுப்பு வழக்கு: தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக கூறி, 20.04.2015 அன்று இராவணன், கோபி, திவாகர், நந்தகுமார், பிரதீப், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 9.10.2015 காலை தோழர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைச் சென்ற தோழர்கள் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தபசி குமரன், அன்பு தனசேகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண், மாக்ஸ், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள்...

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

மாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம் – சுப. உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலுள்ள நீராவி தயாரிப்பான் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இது ரஷ்யாவிலுள்ள மோசடி நிறுவனமான சியோ பொடால்°க் எனும் கம்பெனியிடமிருந்து வாங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கொள்முதல் இயக்குனர் செர்கே ஷுட்டோவ் தரமற்ற எஃகினை வாங்கி உதரிப்பாகங்கள் தயாரித்த ஊழல் குற்றச்சாட்டுக்களால் 2012ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்திய மக்களிடம் உண்மையைச் சொல்லி நம்மை பாதுகாப்பதற்கு பதிலாக, வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் மாற்றம் என்று என்னென்னவோ கதைகளை யார் யாரையெல்லாமோ வைத்து சொல்லிக் கொண்டிருக்கிறது அணுசக்தித் துறை. கூடங்குளம் அணுஉலை அக்டோபர் 22, 2013 அன்று மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் டிசம்பர் 31, 2014 அன்று வணிக ரீதியிலான மின்உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 31, 2015 வரையிலான 586 நாட்களில் அணுஉலை 226 நாட்கள் ஓடவில்லை. மொத்தம் 64 நாட்கள் அணுஉலை பராமரிப்புக்காக மூடப்பட்டது. டர்பைனில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காகவும், டர்பைனை...

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

‘அவாள்’ ஏடே கூறுகிறது: ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது

பெரியாரியலாளர்கள் ஜோதிடமும் ஆன்மிகமும் பிழைப்புவாதம் என்று சொன்னால், இந்துக்களைப் புண்படுத்துவதாக எதிர்ப்பார்கள். ஆனால், ‘துக்ளக்’ பார்ப்பன ஏடே அப்படிச் சொல்கிறது. அந்த ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை: ஒரு நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இத்தனை பரிகார ஸ்தலங்களைத் தேடி தமிழர்கள் அலைந்ததில்லை. ஏதோ அவரவர் ஊர்களிலுள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதோடு தங்கள் வழிபாட்டையும், பிரார்த்தனை களையும் முடித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று தமிழர்கள், குரு பரிகார ஸ்தலம், சனிப் ப்ரீதி ஸ்தலம், ராகு ப்ரீதி ஸ்தலம் என்று ஏதேதோ ஊர்களுக்குக் கும்பல் கும்பலாகப் படையெடுக்கிறார்கள். ஏன் இந்த சனி, குரு, ராகு-கேது இத்யாதிகளுக்கான பரிகார பூஜைகளை, வழிபாடுகளை அவரவர் ஊரி லுள்ள சிவன் கோவில் நவகிரகங்களுக்குச் செய்தால் போதாதா என்று இன்று யாரும் யோசிப் பதில்லை. இவர்களை இப்படிப் பரிகாரங்களுக்காக ஊர் ஊராக அலைய விட்டதற்கு, இந்த ஜோதிட சிகாமணிகளும், பத்திரிகைகளும்தான் காரணம். அந்தக் காலத்தில் திருப்பதிக்கேகூட...

சென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

பூணூலை அறுத்ததாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தந்தைபெரியார் படத்தைக் கொளுத்தியும் ஆபாசமாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், வீதி மன்றத்தை நாடும் திராவிடர் கழகம்! சென்னையில் பூணூல் அறுத்ததாகக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ஆறு பேர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் மத்திய-மாநில அரசுகளால் கவுரவிக்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்தை எரித்தும், ஆபாசமாகப் பேசியும் செயல்பட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் மீதும், அவரைச் சார்ந்தவர் மீதும், புகார் செய்தும், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை யும், வீதி மன்றத்தையும் அணுகி திராவிடர் கழகம் செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, 10.10.2015 அன்று விடுத்துள்ளஅறிக்கை...

அருஞ்சொற்பொருள்

அருஞ்சொற்பொருள்

  அருஞ்சொல் பொருள் அனுகூலித்தவர் – உதவி செய்தவர் அசூயை – பொறாமை, அவதூறு அதட்டியினால் – தாக்கத்தால், அழுத்தத்தால் அதப்பிராயம் – மதிப்பு அபுரூபன் – மிக அழகுள்ளவன் அனந்தம் – அளவில்லாதது அஷ்டகோணல் – எட்டுவிதமாய் திருகிக்கொண்டு ஆசிக்கிறேன் – விரும்புகிறேன் ஆவாகனம் – அக்கினிக்குப் பலி கொடுத்தல்(தன்வயப்படுத்திக்கொள்ளுதல்) இதோபதேசம் – நல்லறிவுரை இரண்டருத்தம் – இருபொருள்படும்படி உப அத்யக்ஷரர் – துணைவேந்தர் எதாஸ்திதித்துவம் – உள்ள நிலையே தொடர்வது, பழமையைப் பாதுகாப்பது ஏகாங்கி – தனித்திருப்பவன் கணங்களுக்கு – கூட்டத்திற்கு கண்டனை – கண்டிக்கை கண்யம் செய்கின்றனவா? – மதிக்கின்றனவா? குச்சுக்காரத்தனம் – விபசாரத்தனம் சங்கல்பம் – கொள்கை சங்கேத இடம் – குறிப்பிட்ட இடம் சங்கை – எண்ணம் சம்பாஷித்தல் – உரையாடுதல் சாய்க்கால் – செல்வாக்கு சிடுக்கை – சிட்டிகை (பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு) சொக்கட்டானாட்டம் – சூதாட்டம் (பந்தயம்...

கல்யாண விடுதலை

கல்யாண விடுதலை

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்ளுவது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்கு தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம். பொதுவாக கவனித்தால் நமது நாடுமாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்கமுடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது. இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீபகாலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும்...

சட்டசபை உடைப்பது மெய்யா?

சட்டசபை உடைப்பது மெய்யா?

காங்கிரஸ்காரர்கள் ராஜாங்க சபைக்கு (ஸ்டேட் கவுன்சிலுக்கு) ஆட்களை நிறுத்தினார்கள். அங்குபோய் சட்டசபையை உடைக்கவோ, சீர்திருத்தத்தை உடைக்கவோ ஏதாவது இடம் இருக்கிறதா என்று கேட்கிறோம். வெறும் பதவிவேட்டை அல்லாமல் அதில் வேறு நாணையம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். சென்னை மாகாணத்தில் ஸ்டேட் கவுன்சிலுக்கு இரண்டுபேரைத்தான் நிறுத்த காங்கிரசுக்கு முடிந்தது. மற்ற இரண்டு ஸ்தானங்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு வருணாச்சிரம சவுக்கார் சேட்டையும், ஒரு ஆந்திர பார்ப்பனரையும் தான் நிறுத்த முடிந்தது. அவர்கள் இருவரும் காங்கிரஸ் அல்லாதார் பெற்று வெற்றிபெற்ற ஓட்டை விட மிகக்குறைந்த ஓட்டுபெற்று 3வது 4வது நபர்களாய் வெற்றி பெற்றார்கள். ஆகவே நாட்டில் அறிவாளிகளில் அரசியல் நிர்வாக அனுபவம் பெற்ற மக்களிடத்தில் காங்கிரசுக்கு உள்ள மதிப்பு எவ்வளவு என்பதற்கும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளில் செய்யப்போகும் முட்டுக்கட்டை யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்கும் இந்த ராஜாங்கசபைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும். குடி அரசு கட்டுரை 27.12.1936  

சட்டசபை வேட்டை

சட்டசபை வேட்டை

சென்னை சட்டசபையாகிய லெஜிஸ்லேட்டிவ் அசம்பிளி தேர்தலுக்கு காங்கிரஸ் மடிகட்டி நிற்கிறது. ஜஸ்டிஸ்கட்சியும் மடிகட்டி நிற்கிறது. மற்றும் பல கட்சிகளும் சில தனிப்பட்ட நபர்களும் மடிகட்டி நிற்கின்றார்கள். எல்லோருக்கும் ஆசைப்பட உரிமையுண்டு. எல்லோரும் அதன் பயனை அனுபவிக்கவும் உரிமையுடையவர்களே ஆவார்கள். ஏனென்றால் சட்ட சபையில் செய்யும் வேலை எதுவானாலும் இந்நாட்டு மக்கள் எல்லோரையும் பற்றியதாகும். அதற்கு ஏற்படும் செலவு அவ்வளவும் இந்நாட்டு மக்களின் உழைப்பால் சம்பாதிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட வரிப்பணத்தைப் பொருத்ததேயாகும். ஆதலால் செல்வவான், ஏழை, படித்தவன், படிக்காதவன், மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்றதான எவ்வித பிரிவு தடையும் இல்லாமல் எல்லோருக்கும் சம்மந்தப்பட்டதும் உரிமையுடையதுமேயாகும். ஆனால் ஒரு கூட்டத்தாரோ, ஒரு ஜாதியாரோ, ஒரு கட்சியாரோ, தங்களுக்குத்தான் உரிமையுண்டென்றும், தாங்கள் தான் தகுதி உடையவர்கள் என்றும் சொல்லி தனி பாத்தியம் கொண்டாடுவதும் மற்ற ஒரு கூட்டத்தாரை உரிமையற்றவர்கள் என்றும், தகுதியற்றவர்கள் என்றும் சொல்லி வைவதும், தடுப்பதுமான காரியத்தை யார் செய்தாலும் அதை ஆக்ஷேபிக்காமலோ அம்முயற்சியை...

பட்டேல் சுற்றுப்பிரயாணமும்  பணம் வசூலும்

பட்டேல் சுற்றுப்பிரயாணமும் பணம் வசூலும்

  தோழர் பட்டேல் பணம் வசூலித்துப் பார்ப்பனர்களின் தேர்தல் சிலவுக்காக ஒப்படைத்து விட்டுப் போகவே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அதனாலேயே அவருக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்றும், மக்கள் உஷாராய் இருக்க வேண்டும் என்றும் எழுதினோம். ஆனால் அவரை பகிஷ்கரிக்க வேண்டுமென்று நாம் வற்புறுத்தவில்லை. அப்படியிருந்தும் பல இடங்களில் பகிஷ்கரித்ததாகவும், கருப்புக்கொடி பிடித்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டிக்கொண்டதாகவும் தோழர் பட்டேல் அவர்களே பேசியிருப்பதாகப் பார்ப்பனப் பத்திரிகைகளில் பார்த்தோம். என்றாலும் அதைப்பற்றி நாம் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட மாதிரியையும், பேசிய மாதிரியையும் கவனித்தால் தோழர் பட்டேல் பகிஷ்காரம் செய்யப்பட்டிருக்க வேண்டியவரேயாவார் என்பது நன்றாய் விளங்கும். அது ஒருபுறமிருக்க தென்னாட்டு மக்கள் பணம் கொடுக்கும் விஷயத்தில் இந்தத்தடவை மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார்கள். சென்னையில் மாத்திரம் சுமார் ரூ.5000 போல் வசூலாகி இருப்பதாகவும், மற்ற எல்லா இடங்களிலும் 6, 7 ஆயிரத்துக்குள்ளாகவேதான் வசூலாகி இருப்பதாகவும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமே தெரிய வருகின்றது. அதுவும்...

காங்கிரஸ் சுயராஜ்யம்  காலித்தனத்தில் முடிந்தது

காங்கிரஸ் சுயராஜ்யம் காலித்தனத்தில் முடிந்தது

  காங்கிரஸ்காரர்கள் இந்திய அரசியலில் தங்கள் கொள்கைகளை யெல்லாம் கைவிட்டு விட்டார்கள், பஹிஷ்காரங்களை வாக்குறுதிகளை பிரமாணங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார்கள். புது புது புரியாத கொள்கைகளையெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். பாமர மக்களை ஏமாற்ற விஞ்ஞான சாஸ்திர முறைப்படி எத்தனையோ தந்திரங்கள் செய்து பார்த்தார்கள். பழங்கால ராம ராஜ்யம் முதல் தற்கால நாகரீக பொது உடமை ராஜ்யம் என்பதுவரை பேசித் தீர்த்தார்கள். வருணாச்சிரமத்தை ஆதரிப்பது புனருத்தாரணம் செய்வது என்பது முதல் சகல சமூக சீர்திருத்தம் ஆச்சார சீர்திருத்தம் எல்லாம் பேசினார்கள். கதர் என்றும் அரிசன சேவை என்றும், கிராமப் புனருத்தாரணம் என்றும் எவ்வளவோ கிளை இயக்கங்கள் கண்டு அவைகள் மூலம் பணம் பறித்தார்கள். சட்டத்தை மீறுவது, அரசாங்கத்தை ஒழிப்பது, அந்நியர்களை விரட்டி அடிக்கும் சுயராஜ்யம் சம்பாதிப்பது என்று சொல்லி கும்பல் கும்பலாக ஜயிலுக்கு ஆட்களை அனுப்பினார்கள். கடசியாக சட்டம் மீறுவதில்லை, உத்திரவுகளை அலட்சியம் செய்வதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்கொடுத்தார்கள். இவைகள் ஒன்றும் பலியாமல்...

சமூக சீர்திருத்தமும் அரசியலும்  காங்கிரஸ் என்றால் என்ன?

சமூக சீர்திருத்தமும் அரசியலும் காங்கிரஸ் என்றால் என்ன?

  தோழர்களே! சமூக சீர்திருத்தமும் அரசியலும் இரண்டும் ஒன்றேயாகும். நமது நாட்டில் சமூக உயர்வால் ஒரு கூட்டம் மக்கள் பாடுபடாமல் வயிறு வளர்க்கத் தக்கபடி சமூகம் அமைக்கப்பட்டதாலும் அரசியலை அந்த சமூக உயர்வுக்காரர்களே கைவசப்படுத்திக்கொண்டதாலும் சமூக சீர்திருத்தத்தை அடியோடு விட்டுவிட்டு சமூக சீர்திருத்தத்துக்கு சம்பந்தப்படாத அரசியலைப் பற்றி பேசிக் காலம் கழித்து வருகிறார்கள். சமூக சீர்திருத்தமில்லாத அரசியல் சிலரின் சுயநலத்துக்குத்தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன்படாது. இந்த நாடு சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே சமூக சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அந்தப்படி செய்யப் பட்டிருக்குமானால் இன்று இந்தியா, உலகில் ஒரு நாகரீகமுள்ள மக்கள் அடங்கிய நாடாக ஆகி இருக்கும். இந்தியாவில் இன்று உள்ள கீழ் ஜாதி மேல் ஜாதி கொடுமை இருந்திருக்காது. அந்நிய ஆட்சியும் இந்தியாவுக்கு அரை நிமிஷம்கூட வேண்டி இருக்காது. ஆனால் இன்று இந்தியா ஒரு காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது. இங்கு கூடியுள்ள மக்கள் ஆளுக்கு ஒரு வேஷம்...

பள்ளத்தூர், கோட்டையூரில் பிரசங்கம்

பள்ளத்தூர், கோட்டையூரில் பிரசங்கம்

தோழர்களே! நான் இங்கு உங்கள் முன் ஜில்லாபோர்டு தேர்தல் என்பது பற்றி பேசுவேன் என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடைய பேச்சு ஜில்லா போர்டு தேர்தலுக்கு பயன்படுமா என்பது எனக்கே சந்தேகம். நான் இங்கு ஜில்லாபோர்டு தேர்தலைப்பற்றி பேசுவதில் அபேக்ஷகர்களைப் பற்றிப் பேசி யாருக்காவது ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லப்போவதில்லை. ஜில்லா போர்டு பிரஸ்தாப அபேக்ஷகர்களில் ஒருவரைத்தான் எனக்குத் தெரியும். அதாவது தோழர் சி.வி.சி.டி. வெங்கிடாசலம் செட்டியார் அவர்களைத் தெரியும். மற்றொரு அபேக்ஷகரை எனக்குத் தெரியாது. பார்த்ததும் இல்லை. அவரைப்பற்றிய குணங்களும் எனக்குத் தெரியாது. இந்த நிலையில் நான் அபேக்ஷகர்களின் தகுதியைப்பற்றி எப்படிப்பேச முடியும்? மற்றும் இருவரும் கிட்டத்தட்ட சரிசமானமான பணக்காரர்களாம். ஆகையால் பணக்காரர்கள் ஒழிய வேண்டும் என்று பேசுவதற்கும் இதில் இடமில்லை. அன்றியும் இருவரும் லேவாதேவியில் பணம் சம்பாதிக்கிறவர்கள் தானாம். ஆதலால் லேவாதேவிக்காரர்கள் ஒழியவேண்டுமென்று பேசுவதற்கும் இதில் இடமில்லை. லஞ்சம் ஒழியவும் இதில் இடமில்லை. வெளிப்படையாகவே லஞ்சங்கள் தாண்டவமாடுகின்றன. ஒரு கட்சிப் பணம்...

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்

தோழர் சத்தியமூர்த்திக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது பாமர மக்களுக்குத் தெரியாது. பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிக்கைகளும் சத்தியமூர்த்தி அவர்களை வேண்டுமென்றே தூக்கி வைத்து அவரது இழிகுணங்களை மறைத்து விளம்பரம் செய்கின்றதினால் அவர் அரசியல் உலகில் லக்ஷியம் செய்ய வேண்டியவராய் இருக்கிறார். சத்தியமூர்த்தியாருக்கு வடநாட்டில் எங்கும் செல்வாக்குக் கிடையாது. ஆந்திராவிலும் மலையாளத்திலும் இவரை லக்ஷியம் செய்கிறவர்களே கிடையாது. அரசாங்கத்தாரும் இவர் விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயத்துக்கு உதாரணம் வேண்டுமானால் அசம்பளி நடிவடிக்கையின் போது அரசாங்க மெம்பருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் நடந்த ஒரு விவாதத்தில் “என்னைப்பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா?” என்று அரசாங்க மெம்பரை மூர்த்தியார் கேட்டபோது “உம்மைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவ்வளவு முக்கியமான மனிதர் நீர் என்று நான் கருதவில்லை” என்று அரசாங்க மெம்பர் பதில் சொன்னார். இதை அப்போதே “குடி அரசி”லும் குறிப்பிட்டிருந்தோம். மற்றபடி தமிழ்நாட்டில் மூர்த்தியாருக்கு எவ்வளவு மரியாதையும் செல்வாக்கும் இருந்து வந்தது என்பதற்கு அவர் சென்ற இடங்களில்...

அடுத்த மந்திரி சபை நிலை

அடுத்த மந்திரி சபை நிலை

  “பந்தியில் உட்காரவே அனுமதி இல்லாமல் இருக்கும்போது இலை ஓட்டையாய் இருப்பதைப்பற்றி சொல்லுவதில் பயன் என்ன?” என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் என்னவென்றால் ஒரு மனிதன் ஒரு சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தகுதி உடையவனல்ல என்று கருதி வெளியில் தள்ளப்படும்போது இலை ஓட்டையாய் இருக்கிறது என்று ஆவலாதி சொல்வதில் ஏதாவது புத்திசாலித்தனம் இருக்க முடியுமா என்பதே யாகும். அதுபோலவே நமது காங்கிரஸ்காரர்கள் இன்று மந்திரி பதவி ஏற்க வேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்கக்கூடாது என்று ஒரு கூட்டமும், ஏற்றால் ஒரு முட்டுக்கட்டை போடவேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்றால் சீர்திருத்தத்தை உடைக்கவேண்டும் என்று ஒரு கூட்டமும், உடைக்க முடியாது என்று ஒரு கூட்டமும், மரியாதையாய் ஏற்று உத்தியோகங்களையும் பதவிகளையும் ஒப்புக்கொண்டு தங்களால் கூடியதை ஜன சமூகத்துக்குச் செய்யவேண்டும் என்று ஒரு கூட்டமும் ஆக இப்படியாக பலவித அபிப்பிராயங்களைச் சொல்லி சண்டை போட்டுக்கொண்டும் மகாநாடுகளில் தீர்மானங்கள் கொண்டுவந்து...

பட்டேல் வருகிறாராம் எதற்கு?

பட்டேல் வருகிறாராம் எதற்கு?

தோழர் பட்டேல் அவர்கள் தமிழ்நாட்டுக்கு பணம் வசூலுக்கு ஆக அடுத்தவாரம் வரப்போகிறார் என்றும், அவருக்கு தாராளமாய் பணம் உதவ வேண்டும் என்றும் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கோடு கட்டிய அறிக்கை வெளியிட்டு வருகிறார். சென்ற வாரம் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரும் அறிக்கை வெளியிட்டு விட்டார். பட்டேல் அவர்களுக்கு பணம் எதற்காக வேண்டும்? வசூலித்த பணத்தை அவர் என்ன செய்யப்போகிறார்? இதுவரை தமிழ்நாட்டில் தோழர்கள் காந்தியார் முதல் பல பேர் வந்து பல தடவைகளில் பொது ஜனங்களிடமிருந்து வசூலித்த பணங்கள் என்ன ஆயிற்று? மற்றும் 1920ம் வருஷம் தமிழ்நாட்டில் திலகர் சுயராஜ்ய நிதி என்னும் பேரால் வசூலிக்கப்பட்ட ஒரு கோடி என்னும் பெரு நிதி என்ன ஆயிற்று? என்பன போன்ற விஷயங்கள் ஒன்றையும் யோசிக்காமல் காங்கிரஸ்காரர்கள் கேட்கும்போதெல்லாம் பணம் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பது என்றால் நமது மக்களுக்கு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றது என்று யாராவது சொல்லமுடியுமா? திலகர் சுயராஜ்ய நிதியைப்பற்றி பெரியதொரு...

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும்  புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

  தோழர்களே! இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம். அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கௌரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள். உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க...

கோவில் பிரவேசம்

கோவில் பிரவேசம்

திருவாங்கூர் கோவில் பிரவேச பிரகடனம் தோழர் சி. ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பரீட்சை பார்க்கப்பட்டாய் விட்டது. அதாவது தோழர் ஆச்சாரியார் சுமார் 40 புலையர்களுடன் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி ஆலயம் என்பதற்குள் பிரவேசித்து உள் பிரகாரம் முதலியவற்றிற்குள் நுழைந்து விக்கிரகத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு வந்துவிட்டதாகவும் யாரும் எவ்வித தடையும் செய்யவில்லை என்றும் பத்திரிகைகளுக்கு சேதி விடுத்திருக்கிறார். இது இவ்வளவும் உண்மையாய் இருக்குமா என்பது சுலபத்தில் ஒப்புக் கொள்ளக் கூடிய காரியமல்ல என்றாலும் தோழர் ஆச்சாரியார் கூறுவதினால் அவை உண்மையாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அப்படியே உண்மையாய் இருக்குமானால் தோழர் ஆச்சாரியார் கூறுகிறபடி இது ஒரு புரட்சியான மாறுதல் என்பதில் ஆட்சேபணை இல்லை. இதனால் தோழர் ஆச்சாரியார் கூறுவது போல் ரத்தக்களரி இல்லாமல் பெரும் புரட்சிகரமான காரியங்கள் நடைபெறலாம் என்பதற்கும் அதிக நம்பிக்கை வைக்க இடமுண்டாய்விட்டது. ஆனால் இந்தக் கோவில் பிரவேசத்தால் ஆதிதிராவிட மக்களுக்கு கீழ்ப்படுத்தி வைத்திருந்த மக்களுக்கு ஏற்பட்ட காரியமான லாபம் என்ன...

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) – இந்து மதப் பண்டிகைகள் நூலிலிருந்து

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை.  கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்”  என்று சொல்லிக்கொண்டு இருக்கின் றார்கள்.   முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கிய தையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதை களின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக் கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள்...

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜையை கொண்டாடாதே – ஆர்ப்பாட்டம்

மாவட்ட தலை நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் ! நாள் : 19.10.2015 திங்கட்கிழமை. அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசு அலுவகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! என வலியுறுத்தி. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகும். அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது. அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள...

காங்கிரஸ் தலைமைப் பதவி

காங்கிரஸ் தலைமைப் பதவி

இந்திய தேசீய காங்கிரசின் தலைமைப்பதவிக்கு தோழர் ஜவஹர்லாலின் மோகமானதுமான அவமானத்தைக்கூட கவனிக்க முடியாமல் செய்துவிட்டது. சமதர்மத்தை பிரசாரம் செய்வதில்லை என்றும், பதவி ஏற்பு மறுப்பை பிரசாரம் செய்வதில்லை என்றும் வாக்குகொடுத்து தலைவர் பதவியை கேட்க வேண்டிய அளவுக்கு துணிந்துவிட்டார். “என்னை தலைவனாக தேர்ந்தெடுத்தால் எனது கொள்கையை நீங்கள் ஒப்புக்கொண்டதாக அர்த்தமல்ல, சமதர்மத்தை அனுமதித்ததாக அர்த்தமல்ல, பதவி மறுப்பை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல” என்று தானாகவே அறிக்கை விட்டிருக்கிறார். சென்னை பார்ப்பனர்கள் தோழர் ஜவஹர்லால் தலைவராகக் கூடாது என்று எவ்வளவோ தந்திரங்கள் செய்தார்கள். ஜவஹர்லாலின் யோக்கியதையற்ற தன்மையை தயவு தாக்ஷண்ணியமில்லாமல் வெளிப்படுத்தினார்கள். அவருக்கு தலைமைப்பதவி தகாது என்றும் இது சமயம் அவர் கூடாது என்றும் எவ்வளவோ எழுதினார்கள். கடசியாக காந்தியார் எங்கு ஜவஹர்லால் விறைத்துக்கொண்டால் தன்னைத் தூக்கி கீழே போட்டுவிடுவாரோ என்று பயந்து மற்ற இரு அபேக்ஷகர்களையும் பின் வாங்கிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அதனால் பண்டிதருக்குதான் தலைமைப்பதவி கிடைக்கலாம் என்று கருதும்படியான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது....

சர்க்காரின் ஞானோதயம்

சர்க்காரின் ஞானோதயம்

பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சியார்களை அற்பத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசுவதைப்பற்றியும், காங்கிரஸ்காரர்கள் அல்லாத மற்றவர்கள் கூட்டங்களில் காங்கிரஸ் காலிகளும், பல கஞ்சித் தொட்டிக் கூலிகளும் கல்லெறிதல், செருப்பு வீசுதல், அழுகல் முட்டைகள், அசிங்கப் பண்டங்கள் வீசுதல், அனாவசியமாய் மற்றவர்கள் கூட்டங்களில் “காந்திக்கு ஜே” “சத்தியமூர்த்திக்கு ஜே” என்பது போன்ற முட்டாள்தனமான மொழிகளைக் கூவி தொல்லைப்படுத்துதல், பள்ளிக்கூடத்து பிள்ளைகள் கையிலேயும், தெருவில் பிச்சையெடுக்கும் எச்சிலைப் பையன்கள் கையிலேயும் கொடிகளைக் கொடுத்து பிரசங்கங்கள் நடக்கும்போது கூட்டத்தைச் சுற்றியும், கூட்டத்து நடுவிலும் கூச்சல் போடும்படி செய்தல் ஆகிய பல காரியங்கள் தொடர்ச்சியாய், கட்டுப்பாடாய் நடந்து வந்ததை “குடி அரசு” மூலம் புள்ளி விபரங்களோடு பல தடவைகளில் எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். அதை ஆதரித்தே காங்கிரஸ் பத்திரிகைகளும் தங்களது இம்மாதிரியான காலித்தனங்களில் தங்கள் வெற்றியைக் காண்பிப்பதின் மூலம் தெரிந்தோ தெரியாமலோ “ராமசாமி கூட்டத்தில் குழப்பம்” “ஜஸ்டிஸ் கட்சி கூட்டம் கலவரத்தில் முடிந்தது” “விளக்குகள் உடைபட்டன” “கல்லுகளும் செருப்புகளும்...

பட்டேல் ஜாக்கிரதை!

பட்டேல் ஜாக்கிரதை!

BEWARE OF PATEL! நமது பார்ப்பனர்கள் தோழர் பட்டேல் அவர்களை கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது பணம் சம்பாதித்துத் தீரவேண்டும் என்பதும் அதை செலவு செய்து எப்படியாவது பார்ப்பனர்களை சட்ட சபைக்கு வரும்படி செய்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை தடுத்து ஒழித்து பழயபடி “சூத்திரன்” ஆக்கி பார்ப்பன ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதுமே நமது பார்ப்பனர்களுக்கு முக்கிய தவமாக ஆகிவிட்டது. பார்ப்பனரல்லாதார்களில் யாரையாவது காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் மூலம் எந்த தேர்தலுக்கு நிறுத்துவதானாலும் காங்கிரசுக்கு முதலில் இவ்வளவு என்று பணம் கொடுத்து விட்டு தங்களது செலவும் தாங்களே போட்டுக்கொண்டு காங்கிரசால் நிறுத்தப்படும் பார்ப்பனரின் தேர்தல் செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது. பார்ப்பனர் யாராவது தேர்தலில் நிறுத்தப்படுவதாய் இருந்தால் அந்தப் பார்ப்பனருக்கு இந்த நிபந்தனைகள் ஒன்றும் கிடையாது. அவருடைய தேர்தல் செலவுக்கு ஒதுக்கி வைத்த (என்று மற்றவர்களுடைய) பணத்தில் கொடுக்கப்பட்ட பணத்தில் மீதி...

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் என்ன காரணத்துக்கு ஆக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அக் காரணத்தை இதுவரை சு.ம. இயக்கம் ஆதரித்து வந்திருக்கிறதா அல்லது மாறிவிட்டதா என்பதும் வாசகர்கள் அறிந்ததேயாகும். ஆனாலும் அதைப்பற்றி சிறிது மறுபடியும் எடுத்துக்கூறுவது மிகையாகாது என்றே கருதுகிறோம். பார்ப்பனரல்லாத மக்கள் சமூகத்துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களால் ஏய்த்து அடிமைப்படுத்தப்பட்டு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் தாழ்ந்து கிடப்பதை மாற்றி அவர்களை எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தை முக்கியமாய்க் கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகும். மற்றும் பல நோக்கங்களும் இருக்கலாம். இந்த நோக்கத்தில் ஈடுபட்டு உழைத்ததில் ஆரம்ப முதல் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஏற்றே நடந்து வந்திருப்பதுடன் அரசாங்கத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கூட அவசியம் நேர்ந்த போதெல்லாம் ஏற்று நடந்து வந்திருக்கிறது. இவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்ன என்பதைப்பற்றி இந்த வியாசத்தில் நாம் விவரிக்க முன் வரவில்லை. சுயமரியாதை இயக்கம் ஆரம்பகாலம் முதல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு துறையிலும் காங்கிரசை...

திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை

திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை

தலைவரவர்களே! தோழர்களே! திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும் அந்தப்படி எழுதி இருக்கின்றன. ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம். சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால்...

திசம்பர்

திசம்பர்

  நில அடமான பாங்கியும் நிர்வாகமும் நில அடமான கடன்களுக்கென்று சர்க்கார் பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து பணம் எடுத்து நில அடமான பாங்கிக்கு முதலாகக் கொடுத்து நிலச் சொந்தக்காரர்களுக்குக் கடன் கொடுத்து குடியானவர்களை அதிக வட்டிக்கடன் தொல்லையிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்திருப்பது யாவரும் அறிந்ததேயாகும். அதன் மூலம் உண்மையாகவே சில குடியானவர்களுக்கு சௌகரியமும் ஏற்பட்டு வருவதை யாரும் அறிந்திருக்கலாம். ஜஸ்டிஸ் கட்சியாருடைய பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமியால் ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டம் என்று சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் “விவசாயிகளுடைய கடன்களைக் குறைப்பதும் இனி கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுமான காரியங்கள் செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்திட்டங்களில் சில அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்த விவசாயிகள் கடன் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்காக ஏற்கனவே ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இப்போது மறுபடியும் (2500000) இருபத்தைந்து லக்ஷ ரூபாய் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரி கனம்...

தர்மம் என்றால் என்ன?

தர்மம் என்றால் என்ன?

மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆனால் அதற்குப் பொருள் பலர் பலவிதமாக சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் சாதாரணமாக தர்மம் என்பதற்குப் பொருள் கூறும்போது தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும், மனிதனின் இயற்கைத் தன்மைக்கும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்யவேண்டிய உதவிக்கும், மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்கு செய்ய வேண்டிய கடமை என்பதற்கும், பொதுவாக இயற்கையென்பதற்கும் உபயோகப்பட்டு வருவதோடு பெரும்பாலும் பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. எது எப்படியிருந்த போதிலும் நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப் படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுகிறேன். அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்கிற உதவியை தர்மம் என்று கருதி அதையே உங்கள் கடமையாகவுங்கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப்பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். ஒரு மனிதன்...

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

  பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசீய” “ஹிந்து”வுக்கு இருந்துவரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான “இந்தியன் எக்ஸ்பிரசு”க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறோம். சென்னை கோக்கலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக் மகாநாட்டில் பேசிய பம்பாய்த் தலைவர் ஸர். பிரோஸ் சேத்னா, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்த ஸர். கே.வி. ரெட்டி நாயுடுகாரு அவர்களைப் பாராட்டிப் பேசுகையில் சென்னை ஆக்டிங் கவர்னர் பதவியை அவர் வெகு திறமையாக நிர்வகித்து அகில இந்தியப் புகழ்பெற்று விட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விஷயத்தை வழக்கப்படி “தேசீய” தினசரியான “ஹிந்து”வும் அபேதவாத தினசரியான “இந்தியன் எக்ஸ்பிரசு”ம் பிரசுரம் செய்யவே இல்லை. யோக்கியப் பொறுப்புள்ள எந்தப் பத்திரிக்கையும் இம்மாதிரி செய்திகளை மறைக்கவே செய்யாது. கட்சி வித்தியாசம் பாராட்டாமல் சகல கட்சிச் செய்திகளையும் பிரசுரம் செய்யவேண்டியதே பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகளின் கடமையென, பண்டித ஜவஹர்லால் சமீபத்தில் சென்னைக்கு விஜயம்...

கவர்னர் வரவேற்பும் திருநெல்வேலி ஜில்லா போர்டும்

கவர்னர் வரவேற்பும் திருநெல்வேலி ஜில்லா போர்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தடபுடல் மூர்த்திக்கு ஒர் சட்டம் தளவாய்க்கோர் சட்டமா? காங்கிரசிலும் மனுநீதியா? சிதம்பரப் பார்ப்பான் செய்தால் கப்சிப் திருநெல்லை முதலியார் செய்தால் கடபடாவா? இந்த ஏமாற்று இன்னும் எத்தனை நாளைக்கு? திருநெல்லைக்கு கவர்னர் இம்மாதம் 16ந் தேதி வந்தார். திருநெல்வேலி ஜில்லா போர்டு, கவர்னருக்கு வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தது. போர்டின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றி வைப்பது போல இத்தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேணடியது பொறுப்புள்ள தலைவரின் கடமை. அதில் அறிவுள்ளவருக்குள், சதி ஆலோசனை யில்லாதாருக்குள் அபிப்பிராய பேதமிருக்க முடியாது. அதுவே சரியான வழியென்று நமது மாபெருந் தலைவரும், பாரத மாதாவின் வீர புத்திரரும், சுயநலமின்மைக்கு ஓர் அறிகுறியாய் வாழ்க்கை நடத்தியவரும், சுதந்திர போராட்டத்திலே உயிரிழந்தவரும், சத்தியமூர்த்தி அய்யர் ஜெயில் வாழ்விற்குப் பயந்து திருவல்லிக்கேணியில் ஒளிந்து கிடந்த காலையில் சிறைச்சாலை சென்றவருமாகிய காலஞ்சென்ற தோழர் வி. ஜே. பட்டேலே காண்பித்திருக்கிறார். அவர் அசம்பிளிக்கு காங்கிரசின் பேரால் தெரிந்தெடுக்கப்பட்டார்....

பொப்பிலியில் என்ன நடந்தது?

பொப்பிலியில் என்ன நடந்தது?

பொப்பிலியில் தோழர் ஜவஹர்லால் வந்தபோது அங்கு பொப்பிலி அரசரின் ஆட்களால் கலவரம் நடந்ததாக பார்ப்பனப் பதர்கள் கட்டுக் கட்டிவிட்டு நாடு எங்கும் பரப்பி விட்டார்கள். அதை மறுத்து வந்த செய்திகளுக்கு சரியான இடம் கொடுக்காமல் அற்பத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் சில பத்திரிக்கைகாரர்கள் நடந்து கொண்டார்கள் என்றாலும் நாம் சென்ற வாரம் கூறியது போல் அங்கு காங்கிரஸ்காரர்தான் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பின்வந்த சேதியால் விளங்கி விட்டது. அதாவது பொப்பிலியில் அன்று ஏதோ ஒரு விசேஷநாள் ஆனதால் வழக்கம்போல் உற்சவம் நடைபெற்று விக்கிரக ஊர்வலம் நடந்திருக்கிறது. அதற்கு ஆகவே யானை, கொடி, தப்பட்டை முதலிய ஊர்வலச் சின்னங்கள் விக்கிரகத்துடன் ஊர்வலம் வந்திருக்கின்றன. அது சமயத்தில் பண்டிதர் கூட்டமும் இருந்ததால் அதுவும் ஊர்வலம் வரும் வழியில் இருந்ததால் பண்டிதரின் பிரசங்கத்துக்காக எவ்வளவோ நேரம் ஊர்வலம் காத்திருந்தும் அதை காங்கிரஸ்காரர்கள் கண்ணியம் செய்யாமல் போக்கிரித்தனமாக நடந்து கொண்டதோடு பத்திரிக்கைகளும் கூலிகளும் தங்களுக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள் என்கின்ற...

சம்பளக் குறைப்பு

சம்பளக் குறைப்பு

  சென்னைக் கார்ப்பரேஷனில் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க திட்டம் கொண்டுவந்து காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிய வருகிறது. அவர்கள் சம்பளம் குறைக்க கருதி இருக்கும் உத்தியோகங்கள் ஐந்திலும் இப்பொழுது பார்ப்பனரல்லாதாரே இருந்து வருகிறார்கள். சம்பளம் குறைந்தால் பார்ப்பனரல்லாதார் தானே பாதிக்கப்படுவார்கள் என்கின்ற தைரியத்தின் மீதே காங்கிரஸ்காரர்கள் சம்பளம் குறைத்திருக்கிறார்கள் என்றாலும் எந்தக் காரணத்தை முன்னிட்டானாலும் அரசாங்கத்தார் அந்தச் சம்பளக் குறைப்பை ஏற்று காங்கிரஸ்காரர் குறிப்பிட்டதுபோல் குறைத்து விடுவதே புத்திசாலித்தனமானது என்று கூறுவோம். இந்தியாவின் இன்றைய வறுமைப் பிணி, கல்வியில்லாக் குறைப்பிணி, மற்றும் பல பிணிகள் என்பவற்றிற்கு மூலகாரணம் பார்ப்பனீயமே என்றாலும் இந்த சம்பளக் கொள்ளையும் அதற்குச் சமமானதென்றே கூறுவோம். சம்பளம் குறைந்தால் ஒழுக்கமும் நீதியும் சம நிலையும் ஏற்பட வசதி உண்டு என்பது நமது அபிப்பிராயம். அன்றியும் இன்றைய சம்பள முறை கூட்டுக் கொள்ளை. அதுவும் சட்டபூர்வமான கூட்டுக் கொள்ளை என்று கூறுவோம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர், தோழர் ஈ.வெ....

பட்டேல்

பட்டேல்

தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) தோழர் பட்டேல் அவர்களை அழைத்து வந்து அவர் பேரால் பணம் வசூலித்து அதைத் தாங்கள் கைப்பற்றி காலிகளுக்கும் கூலிகளுக்கும் கொடுத்து காலித்தனம் செய்வதின் மூலம் தேர்தலில் வெற்றி பெறவே தோழர் பட்டேலை அழைத்து வரப் போகிறார்கள். தமிழ் மக்கள் இக்காரியம் கைகூடாதபடி செய்யக் கடமைப் பட்டவர்களாவார்கள். ஆதலால் ஊர்கள் தோறும் பட்டேல் பகிஷ்காரக் கமிட்டி ஏற்படுத்தி அதன்மூலம் அவரது வரவை தமிழ் மக்கள் பஹிஷ்கரிக்கிறார்கள் என்று காட்டவேண்டியதுடன் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்காமலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதும் நியாயமாகும். கமிட்டி விபரம் தெரிந்தவுடன் துண்டுப் பிரசுரங்கள் முதலியன அனுப்பிக் கொடுக்கப்படும். குடி அரசு வேண்டுகோள் 29.11.1936

சமதர்மம்

சமதர்மம்

  சமதர்மிகளுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமுண்டா? என்பது தோன்ற தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் தமது “நவசக்தி” தலையங்கத்தில் குறிந்திருந்ததற்கு விடையாய் சென்றவாரக் “குடி அரசி”ல் “சமதர்மமும் முதலியாரும்” என்னும் தலைப்பில் சில குறிப்புகள் எழுதி இருந்ததை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். இவ்வார “நவசக்தி”யில் தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் “சமதர்மிகளுக்கு ஒரு விண்ணப்பம்” என்னும் தலைப்பில் நீண்ட குறிப்புகள் பல தலையங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை வாசகர்களின் தெளிவுக்காக மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அவற்றில் பல விஷயம் சமதர்மக்காரர்கள் என்பவர்கள் ஞாபகத்திலிருத்த வேண்டியவை உள்ளன எனினும் அவற்றில் தலையாயவை : “சமதர்மிகள் என்று தங்களைக் கருதிக்கொள்ளுவோர் சிலர் கனவு உலகில் வசிப்பவராகக் காணப்படுகிறார். பல்வேறு காலங்களில் பலவேறு காரணம் பற்றி பலவாறு எழுதிய நூலை மட்டும் படித்து இந்தியாவின் இயற்கை நிலை, மக்கள் நிலை முதலியவற்றை யோராது மனம் போனவாறு சிலர் பேசுவதாலும், எழுதுவதாலும் இந்தியாவுக்கு எவ்வழியிலும் நல்ல பயன் விளையாது. இவர்கள்...

கட்சித் துரோகம்

கட்சித் துரோகம்

ஜஸ்டிஸ்கட்சியின் உப்பைத் தின்றவர்களில் பெரும்பாலோருக்கு நன்றி விசுவாசம் அறியும் இயந்திரம் அழிந்துபோவதாகத் தெரிகிறது. கடலூர் ஜில்லாபோர்ட் பிரசிடெண்டாய் இருந்த தோழர் சீதாராம ரெட்டியார் அவர்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஜஸ்டிஸ் உப்பைத் தின்றே ஊறியதாகும். அவர் தனது தகுதிக்கு பலபாகம் மேற்பட்ட பயன்களை அக்கட்சி மூலம் அடைந்தார். கடசியாக ஆயிரக்கணக்கான சம்பளமுள்ள உத்தியோகமும் 4, 5 Mங்களாக ஏன்? 6, 7 வருஷங்களாக அனுபவித்து வந்தார். அப்படிப்பட்டவர் உத்தியோகம் வாய்தா தீர்ந்த எட்டாம் நாளே ஜஸ்டிஸ்கட்சிக்கு எதிர்க்கட்சியில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாகி பட்டத்தையும் விட துணிந்து ஜஸ்டிஸ்கட்சியை ஒழிக்க முயற்சித்து மடிகட்டி நிற்கிறார். காங்கிரசில் காங்கிரசுக்கு விரோதமாய் இருந்தவர்களை சேர்க்கக் கூடாது, அபேட்சகர்களாய் நிறுத்தக்கூடாது என்று “ஐவர்” அறிக்கை இருந்தும் நேற்றுவரை காங்கிரசை வைதுகொண்டு அதன் எதிர்க்கட்சியில் இருந்து வந்த ஒரு உத்தமரை அதுவும் தான் உப்புத் தின்று வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வந்த ஒரு “பெரியாரை” எப்படிச் சேர்த்துக்கொண்டார்கள்...

காலித்தனம்

காலித்தனம்

காங்கிரசுக்கு கொள்கையற்று நாணையமற்று செலவுக்கு பணமும் அற்றுப்போன பின்பு அது தனது உயிர் வாழ்வுக்கு காலித்தனத்தையே குறையா பொக்கிஷமாய்க் கருதி இருக்கிறது என்பதை சமீப தேர்தல்களில் அவர்கள் நடந்துகொண்ட மாதிரிகளால் நன்றாய் உணர்ந்து கொண்டோம். இது விஷயமாய் சர்க்காருக்கும் முன்பு பல தடவைகளில் வலியுறுத்தி பத்திரிகைகளில் எழுதி இருக்கிறோம். சர்க்கார் சிறிதும் கவனித்ததாக தெரியவில்லை. சமீபத்தில் மந்திரிகள் சென்ற இடங்களிலும் தேர்தல் கூட்டங்கள் நடந்த இடங்களிலும் தேர்தல்கள் நடந்த இடங்களிலும் காங்கிரசுக்காரர்கள் நடந்துகொண்ட காலித்தனங்கள் சர்க்காரார் அறிந்திருக்கமாட்டார்கள் என்று யாராலும் சொல்லி விட முடியாது. அதிகாரிகள் பெரும்பாலோர்கள் பார்ப்பனர்கள் ஆனதினாலும் குறிப்பாக போலீஸ் இலாக்கா பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து வருவதாலும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமானதினாலும் காங்கிரசுக்காரருக்கு காலித்தனம் செய்ய வசதியும் தைரியமும் அதிகமாக இருந்து வருகிறது என்று கருதவேண்டி இருக்கிறது. ராமநாதபுரம் ஜில்லாவில் விருதுநகர் தேர்தலிலும் தேர்தல் கூட்டங்களிலும் காலிகள் செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்பதோடு எல்லாப் பொறுமைகளும்...

செட்டி நாட்டில் சமதர்மம்

செட்டி நாட்டில் சமதர்மம்

செட்டிநாட்டு வாலிபர்களுக்கு இன்று ஒரு புதிய ஞானம் உதயமாகி இருக்கிறது. அதாவது “பணக்காரர்கள் ஆணவம் அடக்கப்பட வேண்டும்” என்பது. இவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். என்னவென்றால், இன்று செட்டிநாட்டில் 96 கிராமத்தில் உள்ள செட்டியார் பிள்ளைகளுக்கும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை பணக்காரர்கள் என்பதல்லாமல் வேறு வகையில் யோக்கியதை உள்ள வாலிபர்கள் எத்தனை பேர்? ஏழை மக்களுக்கு அனுகூலமாய் இருந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் எத்தனை பேர்? இவர்கள் இத்தனை பேரும் இன்று வாழ்வதும், உடமை வைத்திருப்பதும் எதனால்? எந்த மாதிரியான திருப்பணியில் என்பதேயாகும். பணக்காரர்களை வையும் பத்திரிகைக்காரர்களும் பணக்காரர்கள் வாயல் கடந்து பல்லைக் காட்டிப் பெற்றுவந்த பணங்களாலும் பிடித்துவந்த சந்தாதாரர்களாலும் நடைபெறும் பத்திராதிபர்களேயல்லாமல் தங்களது கொள்கை பலத்தால்தாங்கள் எழுதுந் திறந்தால் செல்வாக்குப் பெற்று தன் காலில் நிற்கும் தகுதியில் இருப்பவர்களா? என்று கேட்கின்றோம். ராஜா சர். அண்ணாமலைக்கு பத்து கார் இருந்தால் தனக்கு ஒரு கார் இருப்பவர்களும் மற்றவருக்கு 10 லக்ஷமிருந்தால் தங்களுக்கு...

ஐவர் அறிக்கை வெறும் புரட்டு

ஐவர் அறிக்கை வெறும் புரட்டு

தோழர்கள் ஜவஹர்லால், பட்டேல், ராஜேந்திர பிரசாத், அப்துல் கபூர்கான், ஜம்நாலால் பஜாஜ் ஆகிய ஐவர்கள் காங்கிரசுக்கு அபேட்சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் யோசனை கூறுகிறார்கள். அதாவது “இதற்கு முன் காங்கிரசுக்கு விரோதமாயிருந்தவர்கள் வரப்போகும் மாகாண அசெம்பளிக்கு அபேட்சகர்களாக சில காங்கிரஸ் கமிட்டி தெரிந் தெடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு இனி அப்படிப்பட்டவர்களை தெரிந்தெடுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த எச்சரிக்கை மாகாண அசெம்பளிக்கு மாத்திரமாய் இருக்கும் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. ஏனெனில் அந்தப்படி குறிப்பிட்டிருக் கிறார்கள். அப்படியே வைத்துக்கொண்ட போதிலும் டாக்டர் சுப்பராயன் போன்றவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் அசெம்பளிக்கு நிறுத்துவது இந்த அறிக்கைப்படி யோக்கியமாகுமா என்று கேட்க ஆசைப்படுகிறோம். ஏனெனில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் காங்கிரசுக்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர் என்பது மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் என்று காங்கிரஸ்காரர்கள் சமீப காலம் வரை கூப்பாடு போட்டு வைது கொண்டிருந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது அவரை காங்கிரசு...

கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு  கிராமங்கள் அழியவேண்டும்

கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு கிராமங்கள் அழியவேண்டும்

முன்னுரை தோழர்களே! கிராம உத்தியோகஸ்தர்கள் ஸ்பெஷல் டெக்ஸ்ட் பயிற்சி சாலையின் 6வது ஆண்டு விழாவிற்குத் தலைமை வகிக்கும்படியான கௌரவத்தை எனக்கு அளித்ததற்கு நான் இதன் முக்கியஸ்தர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நீங்கள் முதலில் எதிர்பார்த்தபடி இவ்வாண்டு விழாவிற்கு ஒரு ரெவின்யூ அதிகாரி தலைமை வகித்திருந்தால் மிகவும் பொருத்தமாய் இருந்திருக்கும். ஏதோ எதிர்பாராத காரணத்தால் அவர்கள் வர முடியாமல் போனதால் எதிர்பாராத நிலைமையில் என்னைத் திடீரென்று பிரேரேபித்து விட்டீர்கள். உங்கள் ஆண்டு விழாவில் பேசுவதற்கு எனக்கு மிகவும் ஆசைதான். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் கருதுகிறேன். ஆனால் ஒரு உபன்யாசகராய் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாய்ப் பேசுவேனோ அவ்வளவு தலைவன் என்கின்ற முறைமையில் பேசுவதற்கு முடியாது. ஏனெனில் தலைமை வகிப்பவருக்கு சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளையும் அபிப்பிராயங்களையும் தலைவர் மறுக்கவோ கண்டிக்கவோ செய்வது தர்மமாகாது. ஏனெனில் தலைவர் முடிவுரை கூறியபின் உபன்யாசகர்களுக்கு சமாதானம் சொல்ல சந்தர்ப்பமில்லை அல்லவா? அன்றியும் நீங்களும்...

சிதம்பரம் சிதைவு

சிதம்பரம் சிதைவு

தோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையே யாகும். மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ, ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின் தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஆக்ஷி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி ஆக்ஷியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும்...

திருவாங்கூர் பிரகடனம்

திருவாங்கூர் பிரகடனம்

திருவிதாங்கூர் அரசாங்கமானது தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட கோவில்களை தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட சகல வகுப்பு இந்துக்கள் என்பவர்களும் சென்று வணங்கலாம் என்று அனுமதி அளித்து அரச பிரகடனம் பிறப்புவித்துவிட்டது. அந்த ராஜ்யமானது வைதீகப் பித்தும் வருணாச்சிரமக் குரும்பும் கொண்ட ராஜ்யமாகும். விவேகாநந்தர் அந் நாட்டை ஒரு பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரி என்று சொன்னார். தோழர்கள் லஜபதிராய் அவர்களும், காந்தியாரும், பண்டித ஜவஹரும் அந்நாட்டிற்குச் சென்றிருந்த காலையில் அவர்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. அந் நாட்டின் தீட்டின் தன்மையானது மனிதனை மனிதன் கண்ணால் பார்ப்பதினாலும், நிழல் மேலே படுவதினாலும், பேசுவதினாலும் ஒட்டிக் கொள்ளக்கூடிய அவ்வளவு கொடுமையான தன்மையது என்று சொல்லலாம். அதோடு இன்ன இன்ன ஜாதி இவ்வளவு இவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்ற தூர வித்தியாசமும் உண்டு. கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இழிவும் கொடுமையும் உண்டோ அதேபோல் அந்நாட்டில் மேல் ஜாதியார் என்பவர்களுக்கும் உயர்வும் சௌகரியங்களும் போக போக்கியங்களும் உண்டு....

சமதர்மமும் முதலியாரும்

சமதர்மமும் முதலியாரும்

தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 131136ந் தேதி “நவ சக்தி”யில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம். தோழர் முதலியார் அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடும், சர். மகம்மது உஸ்மானும், குமாரராஜா முத்தைய செட்டியாரும் செட்டிநாட்டில் சமதர்மத்தைத் தாக்கிப் பேசி இருக்கிறார்கள் என்றும் இம்மூவர் பேச்சைப் பார்த்த பின்பு ராமசாமியாரே நீர் ஜஸ்டிஸ் கட்சியிலேயே இருக்கப்போகிறீரா? அப்படியானால் உம்மை நம்பிய இளைஞர் நிலை என்ன? என்றும் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த மூன்று விஷயம் பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. அதற்கு நாம் மகிழ்ச்சியோடு விடை பகருகிறோம். இக்கேள்விகள் கேட்டதை நல்லதொரு சமயத்தில் நமக்கு செய்யாமல் செய்த உதவி போல் கருதி விடை பகருகிறோம். இந்த இடத்தில் தோழர் முதலியார் அவர்கள் பிரயோகித்திருக்கும் சமதர்மம் என்பதற்கு பொருளென்ன? கடவுள், மோட்சம், ஆத்மா என்கின்ற விஞ்ஞானத்துக்கு அதீதப்பட்ட வார்த்தைகள் போன்ற...

பொப்பிலியும் நேருவும்

பொப்பிலியும் நேருவும்

தோழர் நேரு அவர்கள் பொப்பிலிக்குச் சென்றபோது, பொப்பிலியில் வரவேற்பு இல்லையென்றும், பொப்பிலி ராஜாவின் இடத்தில் நேருவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை என்றும் இவர் யாருடைய தனி வீட்டிலேயோ இருந்து பேசும் போது பொப்பிலி ராஜாவின் சின்னங்கள் அப்பேச்சுகள் மற்றவர்கள் காதில் விழாமல் செய்து விட்டன என்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் ஓலமிடுகின்றன. அதற்கு ஆக பொப்பிலி ராஜாவைக் குறைகூறுகின்றன. இச்சம்பவங்கள் மிகைபடுத்திக் கூறப்பட்டவை என்று தக்க இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்றாலும் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை. பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிகளும் கூறுவது அவ்வளவும் உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம். காங்கிரஸ் நடத்தைக்கும் ஜவஹர்லால் யோக்கியதைக்கும் இச்சம்பவங்களில் எது தகுதி அற்றது என்று உசாவுகிறோம். காங்கிரசுக்காரர்கள் இதற்கும் தகுதி ஆனவர்கள், இன்னும் அதிகமான காரியத்துக்கும் தகுதியானவர்கள் என்று “நெருப்பின் மீது” நின்று மெய்ப்பிப்போம். மாட்டுச்சாமிக்கு புல்லும், பருத்திக்கொட்டையும் வைத்து ஆராதனை செய்வார்கள். நாய்ச்சாமிக்கு மலமும், கசுமலமும் வைத்து ஆராதிப்பார்கள். நல்ல குதிரையை...

தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்

தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்

தளவாய் குமாரசாமி முதலியார் கவர்னருக்கு உபசாரப்பத்திரம் வாசித்துக் கொடுத்ததற்கு ஆக அவரை காங்கிரஸ்காரர்கள் விலக்கப் போகிறார்களாம், தேசத்துரோகி என்று கூப்பிடுகிறார்களாம், அவரை ராஜினாமா கொடு என்கிறாராம் சத்தியமூர்த்தியார். கவர்னர் இந்த மாகாணத்துக்கு ராஜப்பிரதிநிதி. அவர் ஆதிக்கத்தில் ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவருடைய ஆட்சிக்கு அரசருக்கு அரசர் சட்டத்திற்கு உட்பட்டதே ஸ்தல ஸ்தாபனங்களாகும். இந்த நிலையில் கவர்னர் பிரபு ஒரு ஸ்தலத்துக்கு வந்தால் அவருக்கு மரியாதை செய்யக் கூடாது என்பது போக்கிரித்தனமே ஒழிய வேறில்லை. ஸ்தல ஸ்தாபனம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் கால் வைக்கும் போதே பிரம்ம முடியைப் பிடித்துக் கொண்டு ராஜாவுக்கும், சட்டத்துக்கும், ராஜா பரம்பரைக்கும் பக்தியாய் விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டுத்தான் உள்ளே போகிறார்கள். இந்த நிலையில் ஒரு ராஜப் பிரதிநிதிக்கு மரியாதை செய்வதில்லை என்றால் எப்படி நியாயமாகும்? அப்படியாவது காங்கிரஸ் கொள்கையில் இது ஒரு திட்டமாக இருக்கிறதா? அநாவசியமாய் திருச்சி, மதுரை முதலிய முனிசிபாலிட்டிகளை...

பட்டேல் வருகிறாராம்!

பட்டேல் வருகிறாராம்!

பத்து லக்ஷம் வேண்டுமாம்!! யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!! தோழர் பட்டேல் தமிழ் நாட்டுக்கு வருவதாகவும் அவருக்கு 10 லட்சம் ரூபாயாவது வசூலித்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதை அவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கே கொடுத்து விட்டுப் போவார் என்றும் அந்தப் பணங்கள் சட்டசபை தேர்தலுக்கு செலவிடப்படுமென்றும் காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது. சட்டசபை தேர்தலுக்கு 10 லட்சமோ அல்லது 5 லட்சம் தானாகட்டும் எதற்கு ஆகவேண்டும்? பணக்காரர்கள் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போடுவது எதற்கு? குமாரராஜா பணக்காரர் என்றும் பொப்பிலி ராஜா ஜமீன்தார் என்றும் ஆத்திரப்படுவது எதற்கு? பணத்தால் காரியம் சாதித்துக் கொள்ளுகிறார்கள் என்றும் ஒழுக்கத்தால் கொள்கையால் ஜெயிப்பதில்லை என்றும் சொல்லுவதால்தானே அப்படிச் சொல்லப்படுகிறது. அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் 10 லக்ஷ ரூபாய் வாங்கினால் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு லக்ஷத்துக்கு 100 ஆயிரம் ரூபாய். 10 லக்ஷத்துக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் ஆகிறது. சென்னை மாகாண சட்டசபைக்கு 250 மெம்பர்கள்...

கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை

கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை

போடுங்கள் விடலாம் விடுங்கள் போடலாம் காங்கிரசின் பேரால் அபேக்ஷகர்களை நிறுத்துவதற்கு நிறுத்தப்படும் அபேக்ஷகர்கள் பட்டதாரிகளாய் இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ஒரு தீர்மானம் ஒரு வாரத்துக்கு முன் தான் செய்து கொண்டார்கள். இப்படி இவர்கள் செய்து கொண்டதானது மொத்தத்தில் இந்திய மாகாணங்கள் பூராவுக்கும் ஏற்பட்டதல்ல. அன்றியும் இது அகில இந்திய காங்கிரஸ் செய்துகொண்ட தீர்மானமும் அல்ல. இன்றைய காங்கிரசின் பொது கொள்கையுமல்ல. காங்கிரசினிடத்தில் இன்றைய தினம் எந்தவிதமான ஒத்துழையாமை முறையோ சட்ட மறுப்பு முறையோ பகிஷ்கார முறையோ எதுவும் இல்லை. அவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாட்னா காங்கிரசில் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற தேர்தல்கள் விஷயத்திலும் காங்கிரசானது இதுவரை பட்டம் பதவி முதலியவைகளை விட வேண்டும் என்கின்ற எந்த விதமான கொள்கையையும் அனுசரிக்க இல்லை. கள்ளு சாராயக்கடை வியாபாரிகளையும் கண்டிறாக்டர்களையும் உற்பத்தி செய்வதற்கு உடந்தைக்காரர்களையும் உற்பத்தி செய்யும் சொந்தக்காரர்களையும் பல காங்கிரஸ் தேர்தலுக்கு தெரிந்தெடுத்து எலக்ஷனில் வெற்றிபெற...