Tagged: ஆதார்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம். ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை...