வருந்துகிறோம்

 

ஜோலார்ப்பேட்டை  பிரபல  கண்டிராக்டர்  தோழர்  வரதராஜலு  (முதலியார்)  அவர்கள்  5134ல்  காலமானார்  என்ற  செய்தி  கேட்டு  வருந்துகிறோம்.  இவர்  வயோதிக  வாழ்க்கையினரானாலும்  ஐதீகத்தையே  பின்பற்றிவிடாது  காலப்போக்கின்  உயரிய  தன்மையை  உணர்ந்து  நமது  “சமதர்மம்’  போன்ற  லக்ஷ்யங்களைப்  போற்றியதோடு  அதற்காக  நின்று  தொண்டாற்றிய  தோழர்களைப்  பெரிதும்  ஊக்கமூட்டிப்  பேராதரவு  நல்கியவராவார்.  மற்றும்  நமது  இயக்கத்திற்கு  உறுதுணையாக  நின்று  சீரிய  ஊழியம்  செய்ய தோழர்  வி. பார்த்தசாரதி  அவர்களை  நமக்கு  “தத்தம்’  செய்துள்ள  சிறப்பாளருமாவார்.  இத்தகைய  பெரியார்  மறைந்ததற்காக  இயற்கையை  செவ்வனே  உணர்ந்த  தோழர்  வி. பார்த்தசாரதி  அவர்களுக்கும்  அவர்தம்  குடும்பத்தினருக்கும்  எவ்வித  ஆறுதலும்  தேவையில்லை  என்றே  நம்புகிறோம்.

புரட்சி  இரங்கலுரை  07.01.1934

You may also like...