வினா விடை

• சிவன், பிரம்மா, விஷ்ணு மூதேவர்களின் ஆசியோடு மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க போகிறேன். – மோடி
பதவி ஏற்புக்கும் குடியரசுத் தலைவரை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டீர்களா?
• தேர்தல் பத்திரம்; பாஜகவை கண்டிக்காமல் எடப்பாடி மௌனம் – செய்தி
மோடியை ஆதரித்தே பழக்கப்பட்ட நாங்கள் மௌனம் சாதிப்பது கடுமையான எதிர்ப்பு தான். நாங்கள் பனங்காட்டு நரி, பயப்படாமல் மௌனம் இருப்போம்.
• ‘நிரபராதி’ என்று அறிவிக்கப்படாததால் பொன்முடிக்கு அமைச்சராக ‘பதவி பிரமாணம்’ செய்து வைக்க மாட்டேன் – ஆளுநர் ரவி
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவரை பதவியில் இருந்து நீக்க மாட்டேன். அம்புட்டு நேர்மைக்காரன் நான்.
• தேர்தல் பத்திர ஊழல் வழக்கை விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை
சும்மா இருங்க… மோடி தனி ஆணையம் அமைத்து, அதற்கு நிர்மலாவை தலைவராக்கி விடுவார்.
• ஆயிரம் ரூபாய் பிச்சை போடுவதால் பெண்கள் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள். – குஷ்பு
ஆனால் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ‘பிச்சை’யாக போட்டால், குஷ்பு பாஜகவுக்கு ‘ஜே’ போடுவார்.
• அமலாக்கத்துறை அதிகாரி இலஞ்சமே வாங்கவில்லை, தமிழக அரசு பொய் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை
அவர் தனக்காக அந்த பணத்தை வாங்கவில்லை, ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வாங்கிய ‘உத்தம தியாகி’

பெரியார் முழக்கம் 21032024 இதழ்

You may also like...