அரசு அலுவலகங்களில் மத வழிபாடு நடத்துவது அரசாணைக்கு எதிரானது

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகளை கொண்டாடக் கூடாது என தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள்  ஆணைகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளனர். ஆனால் அந்த ஆணைகளை அவமதிக்கும் வகையில் மத வழிபாடுகளை  அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நடத்துகிறார்கள்.

எனவே தமிழ்நாடு அரசின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும், சமூக அமைதிக்கும் எதிரான ஆயுத பூஜை வழிபாடுகள் அரசு அலுவலகங்களில் நடந்திடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 23.9.2022 அன்று காலை 11 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்ட தோழர்கள்: பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருஷ்ணன், மாதவன், இயல் , சிவராசு, ஸ்டாலின் ராஜா , சதீஷ் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

 

 

 

You may also like...