கழகத் தோழர் அறிவரசு நினைவேந்தல் நிகழ்வு

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட தோழர் அறிவரசு கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பால் முடிவெய்தினார். தோழர் அறிவரசு படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.2.2021 அன்று மாலை 6 மணி அளவில் கோவை துடியலூர் அண்ணா குடியிருப்பில் நடைபெற்றது.

நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து  நேருதாசு நிகழ்விற்கு தலைமை வகித்தார். துடியலூர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்த தோழர்கள் அல்போன்சு, திமுக முன்னாள் கவுன்சிலர் மருதாசலம், ளுனுஞஐ பாதுஷா, மக்கள் விடுதலை முன்னணி முகிலன், தமிழ் புலிகள் கட்சி  சபாபதி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், சமூக நீதிக் கட்சி வெள்ளமடை நாகராஜ், திராவிட தமிழர் கட்சி வெண்மணி,  ஜெயச்சந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சண்முகசுந்தரம், பொள்ளாச்சி விஜயராகவன், தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட தோழர்களும், அறிவரசுவின் நண்பர்களும், பகுதி மக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இறுதியாக வெங்கட் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்தபின் அறிவரசுவின் தாயார் இல்லத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெரியார் முழக்கம் 04032021 இதழ்

You may also like...