சேலம் மேற்கு மாவட்டக் கழக சார்பில் மேட்டூரில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் தொடக்கம்

சேலம் மேற்கு மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் சார்பாக முதல் கலந்துரையாடல் கூட்டம் 26.01.2020 கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில் பகல் 12.00 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் முன்னிலையிலும்  நடைபெற்றது. அதற்கு முன்பாக கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் முதல் கூட்டத்தில் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக மே.கா. கிட்டு அறிவிக்கப் பட்டார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.சக்திவேல்  அறிமுக உரைக்கு பின்னர்  வாசகர் வட்டத்தில் நவம்பர்,  டிசம்பர் 2019 மாத ‘நிமிர்வோம்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளை பற்றிய விவாதத்தினை வாசகர் வட்ட பொறுப்பாளர் மே.கா. கிட்டு விளக்கினார். மேலும் இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் நிமிர்வோம் வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், ஆர்.எஸ் , நங்கவள்ளி ஆகிய பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கொளத்தூர் நகர செயலாளர் இராமமூர்த்தி நன்றியுரை கூற வாசகர் வட்ட கூட்டம் நிறைவுற்றது.

 

பெரியார் முழக்கம் 05032020 இதழ்

You may also like...