அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஜி. இராமகிருட்டிணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பேசினர். அதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார்.

பெரியார் முழக்கம் 26122019 இதழ்

You may also like...