தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு

30.11.19 அன்று மாலை 6 மணிக்கு  திவிக தலைமை அலுவல கத்தில், முடிவெய்திய முழு நேரப் பெரியாரிய தொண்டர் இராவணன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். தோழர் இராவண னுடனான நட்பு குறித்தும் அவர் பெரியார் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்த மரணம் நமக்கு என்ன உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்றும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவரைப் போல் கொள்கையை முன்னெடுத்து செல்வதிலேயே உள்ளது என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்கள்.

மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி, இராவணன் குடியிருந்த இல்லத்தின் உரிமையாளர் கவிதா, ஊடகவியலாளர், பாலிமர் ரமேஷ், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். அய்யனார் தலைமை தாங்கினார்.

பெரியார் முழக்கம் 12122019 இதழ்

You may also like...