மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயண பொதுக்கூட்டம் / வேட்டைக்காரன்புதூர் 26082019

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கப் பரப்புரை பயணத்தின் திருப்பூர் கோவை அணியின் ஒரே நிகழ்வாக வேட்டை காரன்புதூரில் பொதுக் கூட்டம் 26-8-2019 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் அரிதாசு தலைமையும் ஒன்றிய தலைவர் அப்பாதுரையும் முன்னிலை வகித்தனர். விழாவில் கழக பொருளாளர் துரைசாமி அவர்களும் செயற்குழு உறுப்பினர் மடத்துகுளம் மோகன் அவர்களும் கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி அவர்களும் சிறப்புரையாற்றினர் . விழாவில் முனைவர் சுந்தரவள்ளி அவர்களும் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பேருரையாற்றினர்.விழாவில் தோழர்கள் வினோதினி – மணி இணையர்களின் குழந்தைக்கு நிறைமதி என கழக தலைவர் பெயர் சூட்டினார்.விழாவிற்கு தோழர் சபாகிரி நன்றியுரையாற்றினார்.
விழாவில் செயற்குழ உறுப்பினர் பன்னீர் செல்வம் அவர்களும் கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்களும் கோவை மாநகரத் தலைவர் நேருதாசு அவர்களும் கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் அவர்களும் ஆனைமலை நகரத் தலைவர் ஆனந்த் அவர்களும் ஒன்றிய அமைப்பாளர் சபரி கிரி அவர்களும் நகர செயலாளர் கணேஷ் அவர்களும் ஒன்றிய அமைப்பாளர் வினோதினி அவர்களும் உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல் அவர்களும் மற்றும் தோழர்கள் விவேக்,கதிர்வேல், மணி, சிவா, முருகேசு, இளங்கோ, கணேசு, சிவா, பாலு, ராஜேஷ், நடராஜ், நாகராஜ், பேச்சிமுத்து, முத்துக்குமார் இவர்களுடன் மடத்துகுளம் மற்றும் திருப்பூர் நகர தோழர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தோழர் அய்யப்பன்

You may also like...