கழகக் கலந்துரையாடல்

சென்னை : சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 11.11.2018 மாலை 6 மணிக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. குகன் – கடவுள் மறுப்பு கூறினார். கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், தபசி குமரன். சுகுமார், கருஅண்ணாமலை, எட்வின் பிரபாகரன், ஜெயபிரகாஷ், செந்தில்குமார், ஏசுகுமார், அருண்குமார், தேன்ராஜ் ஆகியோர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் மற்றும் தலைமை செயலவை முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிறைவாக தோழர்களிடம் கழக ஏடுகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க சந்தா புத்தகங்களை தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் மா. வேழவேந்தன் ஒப்படைத்து டிசம்பர் மாதம் வரவிருக்கும் பயணக்குழுவிடம் கழக இதழ்களுக்கான சந்தாக்களை ஒப்படைக்கக் கோரி, கூட்டத்தை நிறைவு செய்தார்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 06.11.2018  செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு கணேசமூர்த்தி வீட்டில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அல்லம்பட்டி பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடமலைக்குறிச்சி செந்தில், கல்லூரி மாணவர் சுதா, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் செயக்குமார், கணேசமூர்த்தி கலந்து கொண்டனர். புரட்சிப் பெரியார் முழக்க வார இதழ் சந்தா மற்றும் ‘நிமிர்வோம்’ மாத இதழ் சந்தாவையும் அதிகளவில் சேர்க்கவும் , தொய்வில்லா கழகப் பணிகளைச் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 06122018 இதழ்

You may also like...