கலைஞர் இரங்கல் நிகழ்வு திருச்செங்கோடு 12082018

கடந்த 7.8.2018 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் முன்னிலையில் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது.

நிகவில், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலைஞரின் சாதனைகள் மற்றும் கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினர், மேலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த கழகத்  தோழர்கள் கலந்து கொண்டனர்.
 ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாநில துணைப்பொதுச் செயலாளர்  தமிழரசு இரங்கல் உரை நிகழ்த்த,  ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் கலைஞரின் சமூக நீதி சாதனைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நிறைவுரையாக தனது இரங்கல் கருத்தை பதிவு செய்தார். மேலும்,
நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயலாளர் சரவணன் மற்றும் திருச்செங்கோடு பகுதியின் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக தோழர் கௌதமன் நன்றியுறையாற்றினார்.

You may also like...